மேலும் அறிய

நீலகிரி : கண்காணிக்க சென்ற இடத்தில் கதிகலங்க வைத்த பி.எம். 2 யானை: வனக்காப்பாளர் மருத்துவமனையில் அனுமதி

பி.எம். 2 யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக யானையை தொடர்ந்து வனப்பணியாளர் கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). கடந்த 19ம் தேதி இரவு பி.எம். 2 என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று அவரது வீட்டை சேதப்படுத்தியதோடு, பாப்பாத்தியை தாக்கி கொன்றது. உறவினர்கள் இருவர் காயங்களுடன் தப்பினர். உடற்கூராய்விற்காக காவல் துறையினர் உடலை எடுக்க முயன்ற போது, இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை, உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் துறை மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், உடலை உடற்கூராய்விற்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு பிறப்பிக்கும் வரை பாப்பாத்தி உடலை வாங்க மாட்டோம் என, உறவினர்கள் தெரிவித்ததால் மூன்று நாட்கள் ஆகியும் உடல் ஊட்டி அரசு மருத்துவமனையில் உள்ளது.

இதனிடையே பி.எம். 2 யானை பிடிக்க கோரி கூடலூர் எம்.எல்.. பொன் ஜெயசீலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்த பின், ஒரு மணி நேரத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டார். அப்போது பேசிய அவர், ”பந்தலூர், தேவாலா பகுதியில் பி.எம். 2 யானை கடந்த ஓராண்டில், 45 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. யானையை பிடித்து வேறு பகுதிக்கு விட வேண்டும் என, ஓராண்டாக கோரிக்கை விடுத்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் யானையை பிடிக்கவில்லை என்றால் ஆட்கொல்லியாக உருமாறி மக்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்படுவதால், அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


நீலகிரி : கண்காணிக்க சென்ற இடத்தில் கதிகலங்க வைத்த பி.எம். 2 யானை: வனக்காப்பாளர் மருத்துவமனையில் அனுமதி

இதற்கிடையே முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகத்திலிருந்து யானையை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தலைமையில் இந்த குழு பந்தலூர் பி.எம். 2 என்ற யானையை கூடலூர் வன கோட்டம் சார்பில் கும்கி யானைகளை பயன்படுத்தி மயக்க ஊசி செலுத்தி, 1972 வன விலங்கு சட்டத்தின்படி யானையை பிடிக்க வேண்டும். மேலும், யானையின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்த பின், அனுபவம் வாய்ந்த வன கால்நடை மருத்துவர் குழு உதவியோடு பிடித்து, முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணியை புகைப்படம், வீடியோ எடுத்து சமர்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.எம். 2 யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக யானையை தொடர்ந்து வனப்பணியாளர் கண்காணித்து வருகின்றனர். இன்று 4 கண்காணிப்பு குழுவினர் காட்டிமட்டம், அக்கார்டு கீழ் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பணியில் வன காவலர் காளன் என்பவரும் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு புதருக்குள் யானை இருப்பது தெரியாமல் காளன் நெருங்கிச் சென்ற நிலையில், அந்த யானை விரட்டியுள்ளது. காளன் தப்பியோட முயன்ற போது கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து காளனை மீட்ட வனப்பணியாளர்கள் முதலுதவி அளித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (30-05-2026 ) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
கோவையில் நாளை (30-05-2026 ) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தாக்குதல்… ஆனாலும் தேனை விடாது ருசித்த கில்லாடி கரடி...
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தாக்குதல்… ஆனாலும் தேனை விடாது ருசித்த கில்லாடி கரடி...
“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...
“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...
coimbatore power cut: கோவையில் நாளை (29-05-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் வெளியானது
கோவையில் நாளை (29-05-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் வெளியானது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget