மேலும் அறிய

கோவையில் ஆதரவற்றவர்களை மொட்டை அடித்து துன்புறுத்தியதாக புகார் ; காப்பகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

முதியவர்களை கடத்தி வந்து அடைத்து வைத்து துன்புறுத்துவதாக தொண்டாமுத்தூர் பகுதியில் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே அட்டுக்கல் என்ற மலையடிவார பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கோவையில் சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்கள் பிடிக்கப்பட்டு, இந்த காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அழைத்துச் செல்லப்பட்டுவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்டு, நீல நிற சீருடை அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதரவற்றவர்களை தனி அறையில் அடைத்து வைத்து இருந்ததாகவும், சிலரை குச்சியால் அடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 


கோவையில் ஆதரவற்றவர்களை மொட்டை அடித்து துன்புறுத்தியதாக புகார் ; காப்பகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சிலர் வந்து பார்த்த போது, ஆதரவற்ற மன நிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், பெண்கள் ஏராளமானோர் இருப்பது தெரிந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அன்பின் ஜோதி ஆசிரமத்தை சேர்ந்த ஜூபின் என்பவர் ஆதரவற்ற முதியவர்களை மீட்டு ஆசிரமத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவது தெரிவித்தது. மேலும் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கோவையில் பல்வேறு பகுதிகளில் மீட்ட 250 பேரை அங்கு தங்க வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.


கோவையில் ஆதரவற்றவர்களை மொட்டை அடித்து துன்புறுத்தியதாக புகார் ; காப்பகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

இதனிடையே முதியவர்களை கடத்தி வந்து அடைத்து வைத்து துன்புறுத்துவதாக தொண்டாமுத்தூர் பகுதியில் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். அதிகாரிகள் மொட்டையடிக்கப்பட்டவர்களின் விபரங்களை பெற்றுக் கொண்டு, காவல் துறையினர் உதவியுடன் காந்திபுரம் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது காப்பக நிர்வாகிகள் ஆதரவற்றவர்களை கடத்தி வந்து மொட்டையடித்து சித்ரவதை செய்வதாகவும், காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமெனவும் கூறி காப்பகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அங்கு திரண்டு இருந்தவர்கள் வாகனங்களை செல்ல விடாமல் கற்களை போட்டு வழிமறித்தனர். இதனால் காவல் துறையினருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் முதியவர்களை ஏற்றி வந்த வேனை சேதப்படுத்தி கீழே தள்ளி கவிழ்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவையில் ஆதரவற்றவர்களை மொட்டை அடித்து துன்புறுத்தியதாக புகார் ; காப்பகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

பின்னர் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கி திரண்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் ஆசிரம நிர்வாகிகள் மற்றும் ஆதரவற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
coimbatore power cut: கோவையில் நாளை (10-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - எப்போ வரும்?
கோவையில் நாளை (10-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - எப்போ வரும்?
coimbatore power cut: கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget