மேலும் அறிய

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கிராம மக்கள் எடுத்த அசத்தல் கூட்டுமுயற்சி..! குவியும் பாராட்டுக்கள்..

பொதுத்தேர்வுகளுக்கு முன்னர் கோவை கிராம மக்கள் முன்னெடுத்த ஒரு நன்முயற்சியை இங்கே பார்க்கப்போகிறோம்.

தமிழ்நாட்டில் இன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. பொதுத்தேர்வுகளுக்கு முன்னர் கோவை கிராம மக்கள் முன்னெடுத்த ஒரு நன்முயற்சியை இங்கே பார்க்கப்போகிறோம்.

கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி வாகராயம்பாளையம். இப்பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் நெருங்கும்போது மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.


அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கிராம மக்கள் எடுத்த அசத்தல் கூட்டுமுயற்சி..! குவியும் பாராட்டுக்கள்..

அந்த சமயங்களில் காலை முதல் மாலை வரை பள்ளியில் இடைவிடாது பாடங்களைப் படிக்கும் மாணவ, மாணவியர், மாலையில் தொடர்ந்து நடக்கும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பதால், பசியால் சோர்வடைய வாய்ப்புள்ளது. இதனால் மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. இதனைப் போக்கி மாணவர்கள் உற்சாகத்துடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு, முன்னாள் மாணவர்கள் அமைப்பு, பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.


அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கிராம மக்கள் எடுத்த அசத்தல் கூட்டுமுயற்சி..! குவியும் பாராட்டுக்கள்..

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும், இந்த திட்டத்திற்கு மாணவ மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளியில் உணவு தயாரிக்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் துவங்கும் முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர் சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது. மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிற்றுண்டி திட்டத்தால், மாலை நேரத்தில் சோர்வு நீங்கி படிப்பில் கவனம் செலுத்த முடிவதாக மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். 


அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கிராம மக்கள் எடுத்த அசத்தல் கூட்டுமுயற்சி..! குவியும் பாராட்டுக்கள்..

இது குறித்துப் பேசிய அப்பள்ளி மாணவிகள், “இப்பள்ளியில் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் தான் அதிகளவில் படித்து வருகின்றனர். மதியம் உணவு சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் மீண்டும் பசியும், சோர்வும் ஏற்படும். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றால் சாப்பிட்டால் தான் சோர்வு நீங்கும். பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் பசி, சோர்வால் வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாது. அதனைப் போக்கும் வகையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வகுப்பில் கவனம் செலுத்தி படிக்க முடிகிறது. இதனைச் செயல்படுத்தி வரும் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி” எனத் தெரிவித்தனர்.


அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கிராம மக்கள் எடுத்த அசத்தல் கூட்டுமுயற்சி..! குவியும் பாராட்டுக்கள்..

இது குறித்து அப்பள்ளி ஆசிரியர் சிவக்குமார் கூறுகையில், ”பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தினமும் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம். தற்போது 330 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு மாலை நேர சிற்றுண்டியாக தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உதவி வருவதால் இந்த திட்டம் தற்போது வரை சுணக்கம் இன்றி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாணவ மாணவியர் வருகையும், தேர்ச்சி சதவீதமும் உயர்ந்துள்ளது. அதேபோல பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது” என அவர் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான கிராம மக்களின் இந்த கூட்டு முயற்சி பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

‘சவால்’ போட்டியில் சோகம் – நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
‘சவால்’ போட்டியில் சோகம் – நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
காம்பவுண்ட் சுவரில் தாவிய விலங்கு... சிறுத்தையா? காட்டு பூனையா? - பீதியில் கோவை மக்கள்...
காம்பவுண்ட் சுவரில் தாவிய விலங்கு... சிறுத்தையா? காட்டு பூனையா? - பீதியில் கோவை மக்கள்...
மதுபோதையில் மிரட்டல் ரைடு... கோவையில் இரவில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்....
மதுபோதையில் மிரட்டல் ரைடு... கோவையில் இரவில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்....
“கோவிந்தா கோவிந்தா” முழக்கத்தில் அதிர்ந்த காரமடை – மாசி மகா தேர் திருவிழா விமர்சை!
“கோவிந்தா கோவிந்தா” முழக்கத்தில் அதிர்ந்த காரமடை – மாசி மகா தேர் திருவிழா விமர்சை!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget