மேலும் அறிய

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு காலணி அணிவித்த கோவை ஆட்சியர் ; கண்ணீருடன் நன்றி தெரிவித்த குடும்பம்!

கோவையில் மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் காலணி அணிவித்ததற்கு, கண்ணீர் மல்க அச்சிறுவனின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். மாற்றுத் திறனாளியான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் மகள் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது இளைய மகன் அழகு மணிக்கு 3 வயதாகிறது. பெட்டி கடை நடத்தி வந்த வேல்முருகன் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்துள்ளார். இந்நிலையில் தனக்கு உதவிடுமாறு கடந்த ஜூலை 5ம் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் கோரிக்கை மனு அளித்து இருந்தார். இதனையடுத்து அவரது மனு பரிசீலனை செய்யபட்டு, மாற்று திறனாளி சிறுவன் அழகுமணி மற்றும் சிறுவனது தந்தைக்கு காலணிகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவிக்கு மிதி வண்டி, புத்தக பை உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார். அப்போது மாற்றுத் திறனாளி சிறுவன் அழகுமணி கால்களில் மாவட்ட ஆட்சியர் சமீரன்,  காலணிகளை பொருத்தினார்.


மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு காலணி அணிவித்த கோவை ஆட்சியர் ; கண்ணீருடன் நன்றி தெரிவித்த குடும்பம்!

இதனைக் கண்ட வேல்முருகனின் குடும்பத்தினர் கண் கலங்கியபடி உணர்ச்சி தழும்ப நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு குடிசை மாற்று வாதியத்தில் வீடு ஒதுக்கி தர வேண்டும் என வேல்முருகன் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீலித்து நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் உறுதி அளித்தார்.

எஸ்.பி. வேலுமணி மீது காவல் நிலையத்தில் புகார்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மனு அளித்த போது, மாவட்ட ஆட்சியர் சமீரன் தனது இருக்கையில் அமர்ந்தபடி மனுவினை வாங்க முயன்றார். இதற்கு அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.


மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு காலணி அணிவித்த கோவை ஆட்சியர் ; கண்ணீருடன் நன்றி தெரிவித்த குடும்பம்!

அப்போது "எம்.எல்.ஏ. வந்தா, எழுந்திருச்சு வாங்க மாட்டீங்களா?" என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். " எதற்கு எழுந்து நிற்க வேண்டும்?" என ஆட்சியர் சமீரன் கேட்க,  "இது ரொம்ப தவறு சார். நான் 25 வருசத்துக்கு மேல பொது வாழ்க்கையில் உள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து மனு கொடுக்கும் போது இப்படி அமர்ந்தவாறு  வாங்குவீர்களா? என்ன பழக்கம் இது? இது என்ன புது பழக்கமாக உள்ளது?" என முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கடிந்து கொண்டார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சூலூர் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget