மேலும் அறிய

தாயை பிரிந்து கூட்டத்துடன் இணைந்த குட்டி யானை ; மீண்டும் தாயை சந்திக்க வருகை..!

களப் பணியாளர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து குட்டி யானையை கண்காணித்து வருகிறோம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் வனப்பணியாளர்கள் ரோந்து செல்வது வழக்கம்.

யானைக்கு சிகிச்சை

அதன்படி கோவை வன சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து ஒரு யானை பிளிரும் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு சென்ற வனப்பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அப்பகுதியில் பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வனப்பணியாளர்கள், மருத்துவரின் உதவியுடன் தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தண்ணீர் மற்றும் பழங்களும் அந்த யானைக்கு வழங்கப்பட்டது. வனத்துறையினர் சிகிச்சை அளித்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானைக்கு அருகிலேயே குட்டி யானை பரிதவிப்புடன் நின்று கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியது.

தாயை சந்திக்க வந்த குட்டி யானை

தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தாய் யானையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. இன்று அந்த பெண் யானைக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று நாட்களாக உடன் இருந்த மூன்று மாதமான குட்டி ஆண் யானை, நேற்று அப்பகுதியில் இருந்த ஒரு யானை கூட்டத்துடன் இணைந்து காட்டிற்குள் சென்றது. கூட்டத்துடன் இணைந்து குட்டி யானை நல்ல முறையில் இருப்பதாகவும், அந்த யானையை ட்ரோன் மூலமும், 25 களப் பணியாளர்களை நான்கு தனிக் குழுக்கள் அமைத்தும் அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு குட்டி யானை உடன் 3 ஆண் யானைகள், 2 பெண் யானை மற்றும் ஒரு 5 வயதான யானை கொண்ட யானை கூட்டம், தாய் யானை இருக்கும் இடத்திற்கு வந்துள்ளது. அப்போது தாயை சந்தித்த குட்டி யானை, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கூட்டத்துடன் வனப்பகுதிக்குள் சென்றது. நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய பெண் யானை நலமுடன் சுறுசுறுப்பாகவும்  உணவருந்தி வருகிறது எனவும், களப் பணியாளர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து குட்டி யானையை கண்காணித்து வருகிறோம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.