மேலும் அறிய

சமூக வலைத்தளம் , இ-காமர்ஸ் பயனர்களுக்கு எச்சரிக்கை ! தரவுகள் அழிப்பு ; அரசின் புதிய விதிகள்

சமூக வலைதளங்கள் ,  இ - காமர்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்டவை, மூன்று ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் கணக்குகளில் தனிநபர் தரவுகளை அழித்து விட வேண்டும் - மத்திய அரசு

சமூக வலைதளம் என்பது என்ன ?
 
சமூக வலைதளம் என்பது மக்களை இணைக்கும் இணைய தளங்கள் மற்றும் மென்பொருட்களின் தொகுப்பாகும். இது சமூக தொடர்புகளுக்கும் , தகவல்கள் பரிமாற்றத்திற்கும் உதவுகிறது. ஆன்லைன் ஷாப்பிங் , கல்வி, கேமிங் மற்றும் வணிகம் போன்ற பல செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும் , உலகெங்கிலும் உள்ள சமூகத்துடன் மக்களை இணைக்க இது ஒரு இடத்தை வழங்குகிறது. தனிநபர்கள் தங்களை வெளிப்படுத்தவும், தகவல்களைப் பகிரவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருக்கவும் இது உதவுகிறது. வணிகங்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், விளம்பரங்கள் செய்யவும் இது ஒரு சக்தி வாய்ந்த கருவியாக உள்ளது.
 
சமூக வலைத்தளங்களின் பயன்கள்
 
1.தகவல் தொடர்பு ; உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள மக்களுடன் எளிதாக தொடர்புகொள்ள உதவுகிறது.
 
2. கல்வி ; கல்வி சம்பந்தமான தகவல்கள், கட்டுரைகள், காணொளிகள் மற்றும் பலவற்றை பெறலாம்.

 

3. பொழுதுபோக்கு ; பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது.

4. சமூக பிணைப்பு ; ஒத்த கருத்துடையவர்கள் அல்லது ஒரே நோக்கமுடையவர்கள் ஒன்றாக இணைய இது உதவுகிறது. 

 

 

 

சமூக வலைத்தளங்களின் தீமைகள்

1. நேரத்தை வீணடித்தல் ; சமூக வலைத்தளங்கள் மக்களை அடிமையாக்கி, நேரத்தை வீணடிக்கச் செய்கின்றன.

2. தவறான தகவல்கள் ; சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவுவது எளிது.

3. மன அழுத்தம் ; சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

4. அடையாளம் மறைத்தல் ; சில சமயங்களில், மக்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து எதிர்மறையான செயல்களில் ஈடுபடவும் இது வழிவகுக்கிறது

தனிநபர் தரவுகள் பாதுகாப்பு விதிமுறைகள்

மத்திய அரசு , டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகளை வெளியிட்டுள்ளது. இதில், வாடிக்கையாளார்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் தனியார் நிறுவனங்கள், இதை எவ்வளவு காலம் பராமரிக்கலாம், பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் என்னென்ன, வெளிநாட்டு பரிமாற்றத்துக்கான நிபந்தனைகள் என்ன என்பவை குறித்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இவை அடுத்த 12 முதல் 18 மாதங்களில், படிப்படியாக நடைமுறைக்கு வரவிருக்கின்றன.

3 ஆண்டுகள் - தகவல்களை அழிக்க வேண்டும்

இ - காமர்ஸ் நிறுவனங்கள், ஆன்லைன் கேமிங் தளங்கள், சமூக வலைதளங்கள் போன்றவை, ஒரு குறிப்பிட்ட பயனர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கணக்கை பயன்படுத்தாமல் இருக்கும்பட்சத்தில் அவரது தனிப்பட்ட தகவல்களை அழித்துவிட வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு இது குறித்து 48 மணி நேரத்துக்கு முன்பாக தகவல் வழங்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட நபர்களின் ஒப்புதலின்றி, ஸ்பேம் அழைப்புகளுக்கு அவர்களது போன் எண்களை கசிய விடுவோர் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். பொது நலன் கருதி, அரசு அதிகாரிகள் குறித்து கேட்கப்படும் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

250 கோடி அபராதம்

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, 2027 மே மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு நவம்பர் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுகிறது. தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க தவறும், தரவு பொறுப்பு நிறுவனங்களுக்கு, 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். குடிமக்களுக்கு, தங்களது தனிப்பட்ட தகவல்கள் மீது கட்டுப்பாட்டை வழங்குவதோடு தங்களது தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், இணையதளத்தில் தனியுரிமையை பாதுகாக்கவும் இந்த விதிமுறைகள் உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
தமிழ்நாட்டின் முதல் '15-நிமிட சர்வதேச நகரம்'.. 2000 ஏக்கரில் அரசு போடப்போகும் மெகா பிளான்! 
தமிழ்நாட்டின் முதல் '15-நிமிட சர்வதேச நகரம்'.. 2000 ஏக்கரில் அரசு போடப்போகும் மெகா பிளான்! 
நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay Reels | அதிகாரியா? FAN BOY-ஆ?முதல்வர் மீட்டிங் LEAKED! REELS எடுத்த நபர் யார்?
Twisha Sharma : MISS புனே திடீர் மரணம்! சிக்கிய EX.நீதிபதி குடும்பம்..வரதட்சணை கொடுமை?
Tasmac Issue | ’’பாட்டிலுக்கு 10 ரூபாய்!’’TASMAC ஊழியர்கள் STRIKE..மயிலாடுதுறையில் பரபரப்பு
Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் நாளை மருந்துகள் கிடைக்குமா? - அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டில் நாளை மருந்துகள் கிடைக்குமா? - அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி
TVK New Ministers: புதிய அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி! ஆளுநர் வந்தவுடன் பதவியேற்பு விழா - வேகம் எடுக்கும் விஜய் அரசு
TVK New Ministers: புதிய அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி! ஆளுநர் வந்தவுடன் பதவியேற்பு விழா - வேகம் எடுக்கும் விஜய் அரசு
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
Honda SUV: புதுசா.. மாஸா.. ரூ.10 லட்சத்துக்கும் குறைவா- ஹோண்டாவின் புதிய எஸ்யூவி கார்!
Honda SUV: புதுசா.. மாஸா.. ரூ.10 லட்சத்துக்கும் குறைவா- ஹோண்டாவின் புதிய எஸ்யூவி கார்!
CV Shanmugam : தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Vijay: தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
Annamalai : ’அவர் மீண்டும் வரனும் – பாஜகவில் எழத் தொடங்கியது கலக குரல்’ தலைவராகிறாரா அண்ணாமலை..?
’அண்ணாமலைக்கு ஆதரவாக எழும் குரல்கள்’ மீண்டும் பாஜக தலைவர் ?
Embed widget