மேலும் அறிய

தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்!

தொட்டியில் இருந்த விஷவாயு கசிந்து ரமேஷ் மூச்சு திணறி உதவிக்காக அலறியுள்ளார். அவருக்கு உதவி செய்ய கழிவு நீர் தொட்டியில் இறங்கிய அவருடைய சக தொழிலாளர்கள் ரத்தினம் (60 ) மற்றும் பிரசாந்த்  (27 ) ஆகிய இருவரையும்   விஷவாயு தாக்கியது .

ஆம்பூர் அருகே  தனியார் தோல் தொழிற்சாலையில் பணியின்போது  விஷவாயு தாக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு , மேலும் 2 பேர் கவலைக்கிடம் தொழிற்சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல தனியார்  தோல் தொழிற்சாலைகளும் , தோல்பதனிடும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றது .


தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்!

இதேபோல் ஆம்பூர் அடுத்த  துத்திப்பட்டு கிராமத்தில் NMH என்ற பெயரில் ஒரு தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .

 இந்நிலையில் இன்று தொழிற்சாலையில் பணியின்போது கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது . இதனை சுத்தம் செய்யும் பணியை  புத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (55 ) என்பவருக்கு அளிக்கப்பட்டு  அவர்  கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்டுள்ள அடைப்பை எடுப்பதற்காக  தொட்டிக்குள் இறக்கி விடப்பட்டுள்ளார்.


தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்!

அப்பொழுது துரதிஷ்டவசமாக  தொட்டியில் இருந்த விஷவாயு கசிந்து ரமேஷ் மூச்சு திணறி உதவிக்காக அலறியுள்ளார் . அவரது அலறல் சத்தத்தை  கேட்டு அவருக்கு உதவிசெய்வதற்காக கழிவு நீர் தொட்டியில் இறங்க  அவருடைய சக தொழிலாளர்கள் , புத்தூர் கிராமத்தை சேர்ந்த  ரத்தினம் (60 ) மற்றும் மோதகபள்ளி பகுதியை சேர்ந்த பிரசாந்த்  (27 ) ஆகிய இருவரையும்   விஷவாயு தாக்கியது . கவலைக்கிடமான நிலையில் மூவரையும் ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .

இதில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார் , மேலும் பிரஷாந்த் மற்றும் ரத்தினத்துக்கு , வேலூர் மற்றும் ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .

தகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் , உமராபாத் காவல் நிலைய போலீசார் அந்த தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு விரைந்து சென்று  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இது தொடர்பாக , தமிழ் நாடு தொழிற்சங்க நடுவனத்தின் மாநில பொதுச்செயலாளர் செ ரூபனை தொடர்பு கொண்ட பொழுது , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1500 கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது , இதில் பெரும்பாலான தொழிற்சாலைகளில் , தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் கருவிகளை வழங்குவதில்லை  .


தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்!

தொழிற்சாலை முதலாளிகளின் இந்த அலட்சியப்போக்கினால் , வருடாவருடம் பல தொழிலாளர்கள் உயிர் பறிபோககின்றது . இதுபோன்ற உயிர் இழப்புகள் ஏற்படாத வண்ணம், தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்புகளை உறுதி செய்யவேண்டும் என்றும் , இறந்துபோன தொழிலார் ரமேஷுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் , உடனடியாக சம்பவம் நடந்த தொழிற்சாலையில்  மாவட்ட தொழிலக பாதுகாப்பு மைய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் எங்கள்  தமிழ் நாடு தொழிற்சங்க நடுவனத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
Suchitra on Ajith; அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
Embed widget