மேலும் அறிய

Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு

மழை வருவதற்கு முன்பே தனது காலை நிலத்தில் பதிக்கக்கூடிய முதல்வரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது - சேகர்பாபு

மருத்துவ முகாம் தொடக்கம்: 

தி.ரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி மங்களபுரம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து தி.ரு.வி.க. நகர், பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே.சேகர் பாபு

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் அரசு தயார் நிலையில் இருந்ததால் வெள்ள பாதிப்பை நிர்வாக திறமையோடு வெற்றிக் கொண்ட அரசாக இன்றைய அரசு உள்ளதாக நடுநிலையாளர்களும் பொதுமக்களும் பாராட்டுகின்றனர். ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற்றுகின்ற பணியை மேலும் விரைவு படுத்தப்பட்டுள்ளது முதலமைச்சர் அனைத்து மாவட்ட அமைச்சர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் மழை வெள்ளப் பணிகளை செய்ய கூறியுள்ளார்.

போக்குவரத்து தடை இல்லை:

தொடர்ந்து பேசிய அவர் , இங்கு இருந்து 325 hp திறன் கொண்ட மோட்டார் மூலம் தண்ணீர் பக்கிம் கால்வாய்வாக்கு வெளியேற்றப்படுகிறது. ஆதித்திறன் கொண்ட 600 hp கொண்ட மின் மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.இதற்கு நிரந்தர தீர்வாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட பெய்த பெரும் மழையின் பொழுது இங்கு முதலமைச்சர் ஆய்வு செய்தார். சுமார் 19 கோடி ரூபாய் செலவில் இந்த மழை நின்றவுடன் பணிகள் துவக்கப்பட்டு அடுத்த பருவமழைக்கு தண்ணீர் தேங்காத சூழ்நிலையை நிச்சயம் ஏற்படுத்தி தருவோம். நிரந்தர தீர்வு அடுத்த பருவ மழைக்குள் ஏற்படும்

எங்கெல்லாம் அவய குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் ஆதரவு குரல் நீட்ட முதல்வராக முதலமைச்சர் களத்தில் உள்ளார். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் வற்றி விடும். கடந்த காலங்களில் 13 சென்டிமீட்டர் என்ற அளவிற்கு மழை பெய்தாலும் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் வெளியேறாத நிலைமை இருந்தது முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு இருந்தது ஆனால் தற்பொழுது அந்த நிலைமை முற்றிலமாக மாறி உள்ளது முக்கிய சாலைகள் முழுவதுமாக பயன்பாட்டில் உள்ளது எங்கும் போக்குவரத்திற்கு தடை இல்லை.

3 மணி நேரத்திற்குள் தண்ணீர் வெளியேற்றம்

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு வருகிறது, அம்மா உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது, தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய தண்ணீர் இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் தேங்கும் இடத்திற்கு நான் முதலமைச்சரை அழைத்து செல்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பதில் அளித்த அமைச்சர்.

டெல்டா பகுதிகளின் ஏற்பட்ட பெரும் வெள்ள பாதிப்பின் பொழுது வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி, எந்தவிதமான மழை நிவாரண பணிக்கும் செல்லாதவர் இரண்டு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட பெரும் மழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர் கூட இங்கு அடையவில்லை. மழை வருவதற்கு முன்பே தனது காலை நிலத்தில் பதிக்கக்கூடிய முதல்வர்   அவரை அழைக்க ஜெயக்குமாருக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா.

சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் ராயபுரம் திருவிக நகர் கொளத்தூர் இந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நெடுஞ்சாலை துறை சார்பில் கூடுதலாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது அந்தப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

கொசஸ்தலை மற்றும்  கோவளம் ஆறுகளில் நடைபெற்ற வரும் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் மாதத்தில் முடிவடையும் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Embed widget