மேலும் அறிய

சென்னை மேயரை ஒப்பந்த தொழிலாளியாக மாற்றிடுங்க - கே.பாலகிருஷ்ணன் காட்டம்

அனைவரையும் ஒப்பந்த தொழிலாளியாக மாற்றும் நீங்கள், மேயரையும் ஒப்பந்த தொழிலாளியாக மாற்றி விடுங்கள்.

சென்னை மாநகராட்சிக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை ரிப்பன் பில்டிங் அருகே உள்ள விக்டோரியா ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். தொழில் உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்கக் கூடாது. ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே. மாநகராட்சிப் பள்ளிகளை மூடாதே உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி இல்லாத நிலையில் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இயையே தள்ளு முள்ளும், வாக்குவாதமும் ஏற்பட்டது. மேலும், கே.பாலகிருஷ்ணனிடமும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும். எங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் தயங்க மாட்டோம். கைது செய்து விடுவோம்.. வாகனத்தில் ஏற்றி விடுவோம் என்று சொல்வது நாகரீகமற்ற செயல்.

மக்கள் பிரச்சனைக்காக போராடும் பொழுது தீவிரம் காட்டும் காவல்துறையினர். மற்ற விஷயங்களில் தீவிரம் காட்டினால் நன்றாக இருக்கும் இங்கு யாரும் தீவிரவாதி கிடையாது, கஞ்சா விற்பவர்கள் கிடையாது. எனவே நாங்கள் ஆர்ப்பாட்டத்தை அமைதியாக நடத்தி முடித்தவுடன் நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள். காவல்துறையினரின் போக்கு நல்லதல்ல. காவல்துறை தவறு செய்யும் பொழுது தட்டிக் கேட்க தயங்காதவர்கள் நாங்கள்.

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தனியாருக்கு கொடுத்து விட்டால் கான்ட்ராக்டர் காரர்களுக்கு தான் லாபம் கிடைக்கும். தூய்மை பணியை தனியார் மயமாக்குவதால் சுகாதாரம் பாதிக்காதா? தனியார் மயமாக்குவதை முழுக்க முழுக்க கைவிட வேண்டும். மின்சார விநியோகம், தூய்மை பணி, குடிநீர் வினியோகம் என

அனைத்தையும் காண்ட்ராக்ட்க்கு விடுகிறீர்கள். ரிப்பன் பில்டிங்கையே காண்ட்ராக்ட்க்கு விட்டு விடுங்கள். மாமன்ற மேயரையும் ஒரு ஒப்பந்த தொழிலாளியாக வைத்து விடுங்கள்

பாஜகவின் தனியார் மயமாக்கும் கொள்கையை சென்னை மாமன்றம் நிறைவேற்ற கூடாது என முதலமைச்சரை வலியுறுத்துகிறோம். நாம் சமூக நீதி பேசி வரும் சூழலில் தனியார் மயமாக்கப்பட்டால் அதில் எப்படி சமூக நீதி இருக்கும்? மாநகராட்சி பள்ளிகளை மூடி மாணவர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடக்கூடாது. எங்கள் கோரிக்கைகளை மாமன்றம் பரிசீலிக்காத பட்சத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம். சென்னையே குலுங்கும் அளவிற்கு போராட்டங்களை நடத்தவோம்.

கே. பாலகிருஷ்ணன் பேட்டி

தூய்மை பணியை தனியார் மையம் ஆக்கப்பட்டதை ண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மாமன்றத்தின் நடவடிக்கை நல்லதல்ல. இந்த முடிவை கைவிடாவிட்டால் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுப்போம்.

கூட்டணியாக இருந்தாலும் மக்கள் பிரச்சனைக்கு போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. தனியார் மயமாக்குவது பாஜகவின் கொள்கை அந்த திசையில் மாமன்றம் செல்ல வேண்டாம் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்றார். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கே.பாலகிருஷ்ணன் உடபட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vs DMK ; அமைச்சர் சேகர்பாபுவால் என் உயிருக்கு ஆபத்து - பரபரப்பு புகார் அளித்த TVK வேட்பாளர்
TVK Vs DMK ; அமைச்சர் சேகர்பாபுவால் என் உயிருக்கு ஆபத்து - பரபரப்பு புகார் அளித்த TVK வேட்பாளர்
சிக்கன் கறி தகராறு ; கணவனை கழுத்தறுத்துக் கொன்ற மனைவி !! அரிவாளால் வெட்டிய பயங்கரம்
சிக்கன் கறி தகராறு ; கணவனை கழுத்தறுத்துக் கொன்ற மனைவி !! அரிவாளால் வெட்டிய பயங்கரம்
" நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம் " மகனுக்கு வந்த மெசேஜ் !! தாய் அரிவாளால் வெட்டிக் கொலை
Chennai Power Shutdown: கொளுத்தும் வெயில்.. சென்னையில் மீண்டும் மின் தடை... நாளை(29-04-2026) எங்கெல்லாம் இருக்காது! முழு விவரம்
Chennai Power Shutdown: கொளுத்தும் வெயில்.. சென்னையில் மீண்டும் மின் தடை... நாளை(29-04-2026) எங்கெல்லாம் இருக்காது! முழு விவரம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Poll: தமிழ்நாடு முதல் மே. வங்கம் வரை! 2021 சட்டமன்ற தேர்தலில் கணித்ததும், நடந்ததும் என்ன? ஓர் அலசல்
Exit Poll: தமிழ்நாடு முதல் மே. வங்கம் வரை! 2021 சட்டமன்ற தேர்தலில் கணித்ததும், நடந்ததும் என்ன? ஓர் அலசல்
Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?
Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?
Puducherry Exit Poll: 2021-ல் சரியாகக் கணித்த எக்ஸிட் போல்.. ரங்கசாமியின் வெற்றியை உறுதி செய்த தரவுகள்! 2026-ல் எப்படி?
Puducherry Exit Poll: 2021-ல் சரியாகக் கணித்த எக்ஸிட் போல்.. ரங்கசாமியின் வெற்றியை உறுதி செய்த தரவுகள்! 2026-ல் எப்படி?
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
TVK VIJAY : ‘இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக உறுதியளித்தாரா விஜய்?’ போர்க்கொடித் தூக்கும் அமைப்புகள்..!
இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக எழுதிக்கொடுத்தாரா விஜய்?
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
Embed widget