Chennai: சென்னையில் தண்ணீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு..
சென்னை திருமுல்லைவாயிலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை திருமுல்லைவாயிலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆவடி திருமுல்லைவாயில் சிவசக்தி நகரை சேர்ந்தவர் பிரேம் குமார். இவரது வீட்டில் 10 அடி ஆழம் உள்ள குடி தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்தத் தொட்டியை நேற்று ஆட்களை வைத்து சுத்தம் செய்த நிலையில், 2 அடி அளவிற்கு தண்ணீர் உயர்ந்ததாக தெரிகிறது. அதை சுத்தம் செய்யும் நோக்கில் பிரேம் குமார் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது அவர் விஷவாயு தாக்கி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவரை காப்பாற்ற அவரது மகன் பிரதீப் குமார், பிர்மோத் மற்றும் சாரநாத் ஆகியோர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களும் விஷவாயு தாக்கி மயங்கினர். இதில் மூவர் உயிரிழந்த நிலையில், சாரநாத் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்





















