மேலும் அறிய

இமாச்சலில் பலி எடுக்கும் கொரோனா சர்க்கரை.. .. கவனம் மக்கா!

தினமும் ஒரு முறையாவது நோயாளிக்கு உணவுக்கு முன்னரும் பின்னரும் இரண்டு முறை இரத்த சர்க்கரை அளவை எடுக்கவேண்டும்; சர்க்கரை நோய் உறுதிசெய்யப்படும் யாருக்கும் அதற்குரிய உணவு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கன்னாபின்னாவென ஆட்டம்போட்ட உலக அரசுகளைக்கூட சின்னாபின்னமாக்கி, ஆட்டம் காட்டிவருகிறது, உயிர்க்கொல்லி கொரோனா துயரம். மருத்துவ வல்லுநர்களுக்கே சவால் விடும்படியாக இருக்கின்றன, கொரோனா உண்டாக்கும் புதுப் புது நோய்களும் உடல், மனக் கோளாறுகளும். இதில், ரத்த சர்க்கரை அதிகரிப்பும் அதனால் ஏற்படும் ஆபத்தும் முக்கியமானது.

இமாச்சலில் பலி எடுக்கும் கொரோனா சர்க்கரை.. .. கவனம் மக்கா!

கொரோனா முதல் அலையின்போது, பொதுவாக இதனால் ஏற்படும் சுவை, வாசனை இழப்பு ஆகியவை ஓரிரு வாரங்களில் சரியானது. குறைந்த அளவினருக்கு இன்னும்கூட அரைவாசி கால்வாசி அளவுக்குதான் சுவை, வாசனை இழப்பு சரியாகி இருக்கிறது என்றும் மருத்துவர்கள் தரப்பில் கிளினிக்கல் பார்வைக் குறிப்புகள் எனும் அளவில் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர்வரை கணிசமானவர்களுக்கு தலை முடி உதிர்வது, குறிப்பிடத்தக்க பிரச்னையாக பரவலாகக் காணப்படுகிறது. மறதியும் கொரோனாவால் ஏற்பட்ட இன்னொரு முக்கிய பிரச்னையாகக் கூறுகின்றனர். சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம்; சோற்றுக்கு துவையலோ இட்லிக்குச் சட்னியோ கேட்கும்போது, துவையல், சட்னி எனும் சொற்கள்கூட மறக்கிறது என்பவர்களும் இருக்கின்றனர். அல்லது இப்படியான சொற்களை யோசித்துச் சொல்ல சற்று நேரம் எடுத்துக்கொள்கிறது.

ஆனால், இவை எதுவும் அன்றாட வாழ்க்கையோட்டத்தில் பெரிய சிக்கலாகவோ உயிரிழப்பு ஆபத்தாகவோ உருவாகவில்லை. இந்தியாவில் முதல் அலையைவிட இரண்டாவது அலையின்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகவும் குறுகிய காலத்திலும் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் படிப்படியாக அதிகரித்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மே மாதம் உச்சத்துக்குச் சென்றது. இந்த அலையில், அன்றாடத் தொற்று பாதிப்பின் அளவு குறைந்துவருவது ஒரு புறம் இருக்க, உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. இந்திய அளவிலும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களிலும் மாநில அளவிலும் பொதுவாகவே இந்த நிலையைப் பார்க்கமுடிகிறது. இதற்கு முக்கிய காரணம், தொற்று ஏற்பட்டவருக்கு கொரோனா கிருமியால் ஏற்படும் நிமோனியா காய்ச்சல் மட்டும் இல்லாமல், உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, இதய அறுவை செய்தது போன்ற கூடுதல் சிக்கல்களும் மரணம்வரை கொண்டுபோய் விட்டுவிடுகின்றன. இரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவை இதில் முக்கியமான காரணங்கள்.

இமாச்சலில் பலி எடுக்கும் கொரோனா சர்க்கரை.. .. கவனம் மக்கா!

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக அவர்களுக்கு அளிக்கப்படும் ஸ்டீராய்டு சிகிச்சையாலும் உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரித்து, ஹைப்பர் கிளைசெமியா எனப்படும் ஆபத்தான கட்டத்துக்குக் கொண்டு சென்று விடுகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் இப்படி கொரோனாவால் உண்டாக்கப்பட்ட சர்க்கரை அதிகரிப்பும் கூடுதல் உடல்நலிவுகளுமே 48.1 சதவீத கொரோனா உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி அந்த மாநில சுகாதாரத் துறை புதிய வழிகாட்டல் அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது.

கோவிட் சிகிச்சை மையங்களில் தினமும் ஒரு முறையாவது நோயாளிக்கு உணவுக்கு முன்னரும் பின்னரும் இரண்டு முறை இரத்த சர்க்கரை அளவை எடுக்கவேண்டும்; சர்க்கரை நோய் உறுதிசெய்யப்படும் யாருக்கும் அதற்குரிய உணவு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதில், நோயாளிகள் விரைவில் நலமடைய வேண்டுமானால் உணவு நேரத்தையும் அளவையும் கறாராகக் கடைப்பிடிப்பது அவசியம்.” என்று கூறியிருக்கிறார், தேசிய சுகாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநர், மருத்துவர் நிபன் ஜிண்டால். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget