Holi Safety Tips: ஹோலி பண்டிகை கொண்டாடுறீங்களா? - சரும பிரச்னை வராமல் தடுக்க டிப்ஸ்!
ஹோலி பண்டிகை இந்து மதத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். ஹோலி பண்டிகையின்போது கலர் பொடிகளை தூவி மகிழும் பலரும் சரும பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். அதனை எப்படி சரி செய்யலாம் எனப் பார்க்கலாம்.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை 2026ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அதற்கான கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளது.
ஹோலி பண்டிகை இந்து மதத்தில் கொண்டாடப்படும் பிரபலமான ஒரு இளவேனிற்கால பண்டிகையாகும். இந்த பண்டிகை இந்தியாவைப் பொறுத்தவரை வட மாநிலத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. குளிர்காலத்திற்கு நன்றி சொல்வதற்கும், கோடை காலத்தை வரவேற்பதை பொருட்டும் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதால் இப்பண்டிகை வசந்த கால திருவிழா என அழைக்கப்படுகின்றது. ஹோலி பண்டிகை மாசி அல்லது பங்குனி மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில்இருந்து வரும் தேய்பிறை பஞ்சமியில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள் அல்லது வண்ணப்பொடி கலந்த நீரை ஊற்றி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஹோலி பண்டிகையின்போது கலர் பொடிகளை தூவுவதால் ஒவ்வொருவர் ஆடை, சருமம், தலை முடி என அனைத்து இடங்களில் வண்ணப்பொடிகள் இடம்பெற்றிருக்கும். இத்தகைய வண்ணப்பொடிகள் சருமத்தில் சிலருக்கு பிரச்னையை உண்டாக்கலாம். இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்ட வண்ண பொடிகளை பயன்படுத்துவதால் பல ஆபத்தான பிரச்னைகள் ஏற்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
ஹோலி கொண்டாடத்திற்கு பின் செய்ய வேண்டியவை
- ஹோலி கொண்டாடிய பிறகு உடனடியாக வண்ணப்பொடிகளை வெதுவெதுப்பான நீரில் மட்டுமே கழுவ வேண்டும்.
- அதேசமயம் குளிப்பதாக இருந்தால் எக்காரணம் கொண்டும் வெந்நீரை பயன்படுத்த வேண்டாம். அது சரும எரிச்சல் மற்றும் சரும வறட்சிக்கு வழிவகுக்கும்.
- உங்கள் சருமத்தை சரி செய்ய மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தலாம். குளித்த பிறகு உடனடியாக இதனை பயன்படுத்துவதால் சருமம் நீரேற்றமாக வைக்க முடியும்.
- ஹோலி கொண்டாடும் முன் வெளியில் தெரியும் சருமம் மற்றும் தலைமுடியில் சிறிது எண்ணெயை தடவவும். இது எளிதாக வண்ணப்பொடிகள் நீங்க உதவும்.
- முடிகளில் படிந்த வண்ணப்பொடிகளை சரியான ஷாம்பூவை பயன்படுத்துங்கள். அதனுடன் ஈரப்பதமூட்டும் கண்டிஷனரை பயன்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும்.
- நகங்களில் வண்ணங்கள் படிந்திருந்தால் முதலில் அவற்றை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் நெய்பாலீஷ் ரீமுவரை பயன்படுத்தி மெதுவாக செய்து அகற்றவும். அதன்பின்னர் தேங்காய் எண்ணெய் தேய்க்கவும்.
- சருமத்தில் ஒருவேளை எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். இது சருமத்தை பராமரிப்பில் முக்கியத்துவம் பெறும்.
- நகங்களில் வண்ணங்கள் இருந்தால் அந்த கறையை விரைந்து அகற்ற ஒரு பிரஷ்ஷில் சிறிது பேஸ்ட்டை எடுத்து அதன் மீது தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அது எளிதாக காணாமல் போகும்.
- எலுமிச்சை மற்றும் சமையல் சோடாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து 10 நிமிடங்கள் கை நகங்களில் தேய்க்கவும். பின்னர் தண்ணீரில் சுத்தம் செய்தால் கைகள் பளபளப்பாக மாறும்.























