மேலும் அறிய

’சோடா உப்பு கெடையாது.. சுத்தம்தான் எங்க ப்ராண்ட்’ - பழைய மகாபலிபுரம் சாலையில் ஓர் குழிப்பணியார கடை விசிட்..

ஓ.எம்.ஆர் சாலை என்றால் உயர் ரக சொகுசு வாகனங்கள் பறக்கும் சாலை என்றுதான் நாம் அறிந்திருப்போம். ஒய்யாரமான கட்டிடங்களும், பளபளக்கும் ஓட்டல்களும் வழி நெடுகிலும் அணிவகுத்து இருக்கும்.

ஓஎம்ஆர் சாலை என்றால் உயர் ரக சொகுசு வாகனங்கள் பறக்கும் சாலை என்றுதான் நாம் அறிந்திருப்போம். ஒய்யாரமான கட்டிடங்களும், பளபளக்கும் ஓட்டல்களும் வழி நெடுகிலும் அணிவகுத்து இருக்கும்.

ஆனால், அந்தச் சாலையில் ஒரு குட்டிக் கடை இருக்கிறது. அது குழிப்பணியாரக் கடை. அந்தக் கடை அலங்காரமாகவோ ஒய்யாரமாகவோ இல்லை. ஓனர்களான கருப்பையாவும் செல்லம்மாளும் மிடுக்காக செஃப் தொனியிலும் இல்லை. ஆனால், அந்தக் கடையைத் தாண்டிச் செல்வதற்கு முன் இருச்சக்கர வாகனங்களும், கார்களும் நின்று பனியாரம் வாங்காமல் செல்வதில்லை. திரும்பத் திரும்ப வாடிக்கையாளர்கள் ஒரு கடையை நாடுகின்றனர் என்றால் அங்கு சுவைக்கு குறைவில்லை என்றுதானே அர்த்தம்.

வாங்க, கருப்பையா, செல்லம்மாள் கடைக்கு ஒரு விசிட் அடிப்போம்.

கடையின் பெயரே 'குழிப்பணியாரம் கடை' தான். பாட்டி கடை, ஆயா கடை போல் பாந்தமான பெயர். கூகுளில் இந்தக் குட்டிக்கடைக்கு ரிவிவ்யூவ் குவிந்திருக்கிறது. 5க்கு 4.8 ரிவிவ்யூவ் கொடுத்துள்ளனர் வாடிக்கையாளர்கள். ப்ராண்டிங் வேல்யூவின் மதிப்பை உரைக்கும் பெயர் இது. கடையில் விதவிதமான உணவு எல்லாம் இல்லை. இனிப்புப் பணியாரம், காரப் பணியாரம் இரண்டே வகைதான். கடையில் உள்ள கருப்பையாவும் செல்லம்மாளும் தான் செஃப், வெயிட்டர், வரவேற்பாளர் எல்லாமே. 

"எங்கள் வீடு பெருங்குடியில் இருக்கு. நாங்கள் வீட்டிலேயே மாவை தயார் செய்துகொள்கிறோம். இனிப்புப் பணியாரத்துக்கான மாவு, காரப் பணியாரத்துக்கான மாவு, மூன்று வகை சட்னி என எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டுவந்துவிடுவோம். சுத்தமாக எல்லாவற்றையும் தயார் செய்கிறோம். தரமான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். அதனாலேயே மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறோம். அப்புறம் மிக முக்கியமாக நாங்கள் சோடா உப்பு பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் கூட எங்களின் பணியார வகைகள் உப்பிவரும். மிருதுவாக இருக்கும். 6 பணியாரம் ரூ.30க்கு விற்கிறோம். பார்செல் வாங்கிச் சென்றால் கூடுதலாக ரூ.2 வசூலிக்கிறோம்" என்று கூறுகிறார் கருப்பையா. வியாபாரத்துக்கான கடை கூட நல்ல மனிதர் ஒருவர் தானமாகக் கொடுத்தது என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார் கருப்பையா.

இந்தக் கடையை கருப்பையா, செல்லம்மாள் தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். இதுவரை எப்போதுமே கடையை மூடிவிடலாமா என்று இருவரும் நினைத்ததில்லை. அந்த அளவுக்கு எப்போதும் அவர்களின் வியாபாரம் களைகட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இடையில் கொரோனா ஊரடங்கின்போது சிறு சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் ஊரடங்கு தளர்வு நீக்கப்பட்ட உடனேயே கடையைத் தேடி சில வாடிக்கையாளர்கள் வருகை தந்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. இருந்தாலும் வழக்கமாக ஐடி நிறுவன ஊழியர்களுக்காக இரவு 11 மணி வரை பணியாரக் கடை ஊரடங்கு காலத்தில் வெறும் மாலை 5 மணிவரை மட்டுமே இயக்கப்பட்டதில் சிறு நஷ்டம்தான் எனக் கூறுகின்றனர் அந்த இணையர்.

இப்போது கடையை கூடுதல் நேரம் திறக்க அனுமதி இருந்தாலும் கூட ஐடி நிறுவனங்கள் பலவும் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறைக்கு தள்ளப்பட்டுள்ளதால் வியாபாரம் சற்றே மந்தமாக நடக்கிறது என வருத்தப்படும் கருப்பையா, செல்லம்மாள் தம்பதி மீண்டும் வசந்தம் வீசும் நாட்களுக்காக காத்திருக்கின்றனர். ஓஎம்ஆர் சாலை வழியில் பயணித்தால் தவறவிடக்கூடாத இடம்  கருப்பையா, செல்லம்மாள் இணையின் 'குழிப்பணியாரம் கடை' .
 

தலைப்பு செய்திகள்

வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
Embed widget