மேலும் அறிய

'ஆபிஸ் வரச் சொன்னா வேலையே வேணாம்’ 58% ஊழியர்கள் முடிவு! WFH ஆய்வு சொல்வதென்ன?

கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என்று தெரிவித்தால் தாங்கள் வேலையை விட்டுவிடுவோம் என 58% ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஆடும் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. நிறுவனங்கள் முடிந்தவரை ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இணையவழியில் வேலை செய்ய ஏதுவான ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர். கடந்த வருடம் தொடங்கிய வொர்க் ஃப்ரம் ஹோம் பலருக்கு இன்றும் நீடித்து வருகிறது. வழக்கமாக அலுவலகம் சென்று வேலை பார்ப்பதற்கும், வீட்டில் இருந்த படியே அலுவலக வேலை பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. 


ஆபிஸ் வரச் சொன்னா வேலையே வேணாம்’  58% ஊழியர்கள் முடிவு!  WFH ஆய்வு சொல்வதென்ன?

அலுவக சூழலில்  இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்தாலும் சில நேரங்களில் வொர்க் ப்ரம் ஹோம் ஊழியர்களுக்கு ஈசியானதாகவே இருக்கிறது.  குறிப்பாக வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்பதால் பெருந்தொற்று காலத்தில் அது பாதுகாப்பை உறுதி செய்வதாக ஊழியர்கள் நினைக்கின்றனர். அதனால் சில்லறை சிக்கல்கள் நிறைய இருந்தாலும் பலர் வீட்டில் இருந்தே வேலை பார்க்கவே விரும்புகின்றனர். இது குறித்து ஒரு புள்ளிவிவரத்தை FlexJobs என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அந்த புள்ளிவிவரத்தின் சாராம்சம் என்னவென்றால், தொடர்ந்து வீட்டில் இருந்தே வேலை பார்க்க ஊழியர்கள் விரும்புகின்றனர். கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என்று தெரிவித்தால் தாங்கள் வேலையை விட்டுவிடுவோம் என 58% ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அந்த புள்ளிவிவரம் குறிப்பிட்டுள்ள மேலும் சில தகவல்களை பார்ப்போம். அமெரிக்காவை பொருத்தவரை பலர் அங்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். இதனால் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை என்ற நடைமுறையை மாற்றி ஊழியர்களை அலுவலகம் வருமாறு நிர்பந்திக்கிறது.

அலுவலகம் வந்துதான் ஆக வேண்டும் எனக் கூறினால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு 58% பேர் வேலையை விட்டுவிடுவேன் என தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு மனப்பான்மையே இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த புள்ளிவிவரத்திற்காக சுமார் 2100 ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சுமார் 65% ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலையை தொடர வேண்டுமென தெரிவித்துள்ளனர். 33% வாரத்திற்கு சில நாட்கள் அலுவலகம் செல்லலாம் என குறிப்பிட்டுள்ளனர். மீதமுள்ள 2% மட்டுமே வழக்கம்போல் அலுவலகம் செல்லலாம் என கூறியுள்ளனர்.


ஆபிஸ் வரச் சொன்னா வேலையே வேணாம்’  58% ஊழியர்கள் முடிவு!  WFH ஆய்வு சொல்வதென்ன?

இந்த ஆய்வில் பதிலளித்த ஊழியர்களில் 72% பேர் அமெரிக்காவையும், 4% கனடாவையும், 24% மற்ற உலக நாடுகளையும் சேர்ந்தவர்கள். குறிப்பாக 74% பேர் பெண்கள்.

வேலையே வேண்டாம்:

வேறு வழியே இல்லை, அலுவலகம் வந்துதான் ஆக வேண்டும் எனக் கூறினால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு 58% பேர் வேலையை விட்டுவிடுவேன் என தெரிவித்துள்ளனர். என்னசெய்வேன் என்று  தெரியவில்லை என குழப்பமாக இருப்பதாக 31% பேர் தெரிவித்துள்ளனர்.  வீட்டில் இருந்து வேலை என்பது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை 11% பேர் தெரிவித்துள்ளனர். 

என்னதான் இருக்கு வொர்க் ப்ரம் ஹோமில்?

நீங்கள் ஏன் வீட்டில் இருந்து வேலை பார்க்க அடம் பிடிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு 49% பேர் கொரோனாவுக்கு பயந்து தான் என பதில் அளித்துள்ளனர். வெளியே செல்வதே வைரஸ் மீதான பயத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். 46% பேர் அலுவலகம் ஒரு இறுக்கமான இடம் என்றும், வீட்டில் இருந்து வேலை என்றால் கொஞ்சம் ரிலாக்சாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு குழப்பமே நீடிக்கிறது.


ஆபிஸ் வரச் சொன்னா வேலையே வேணாம்’  58% ஊழியர்கள் முடிவு!  WFH ஆய்வு சொல்வதென்ன?

வொர்க் ப்ரம் ஹோம் - சிக்கல் என்ன?

வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது என்ற கேள்விக்கு, அலுவகமாக இருந்தால் வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிடலாம், இங்கு வேலை நீண்டு கொண்டே இருப்பதாக 35% பேர் தெரிவித்துள்ளனர். 28% பேருக்கு வீட்டு பிரச்னைகள் போன்ற வேறு இடையூறுகள் வருதாகவும், 28% பேருக்கு இண்டர்நெட் போன்ற டென்னிக்கல் பிரச்னை தலைவலியை உண்டாக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.


Work From Home Tips | ஆரோக்கியத்தில் கவனம்.. வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்கள் கவனிக்க வேண்டியது என்ன?


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget