மேலும் அறிய

TNPSC: குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியீடு!

ஜனவரி 6-ஆம் தேதி 3-ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும்- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவி பிரிவு அலுவலர் பதவிக்கான 3ஆம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பானது, வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜனவரி 6 ஆம் தேதி கல்விச் சான்றிதழ் மற்றும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்துக்கு நேரில் கொண்டு வர வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

மேலும், டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் 15 தேர்வுகளுக்கான முடிவு வெளியாகும் கால அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வு முடிவு பிப்ரவரி மாதமும், நில அளவையளருக்கான முடிவு வரும் ஜனவரி மாதமும் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. குரூப் 2 முதன்மை தேர்வுகள் பிப்ரவரி 25-ந் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 4:

குரூப் 4 அரசுப் பணிகளுக்கு 7,301 இடங்கள் மற்றும் 81 விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் இருந்த நிலையில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வுக்காக, இதற்கு முன்பு இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.8 லட்சத்தைக் கடந்தது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர்.

இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் ஜூலை மாதம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன

முடிவுகளில் தாமதம்:

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் தாமதமான நிலையில் டிசம்பர் முதல் வாரம் வெளியாகும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது, தேர்வர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதனால் வேலைவாய்ப்பு மற்றும் அடுத்தகட்டத் தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்குத் திட்டமிட்டிருந்த தேர்வர்கள் கவலையில் உள்ளனர். இதனால், டிஎன்பிஎஸ்சி விரைந்து தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

2023 தேர்வு எப்போது?

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ( 2023 ) நவம்பரில் வெளியாக உள்ளது. அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read:CBSE Date Sheet 2023: வெளியான தேதிகள்; சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது?- விவரம்!...

தலைப்பு செய்திகள்

12-வது வகுப்பு தேர்ச்சி, ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் வேலை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
12-வது வகுப்பு தேர்ச்சி, ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் வேலை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
Bridal Makeup Artistry Course : ஒரு ரூபாய் செலவு இல்லாமல் Bridal Makeup பயிற்சி.! மாத சம்பளம் இவ்வளவா.? விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
ஒரு ரூபாய் செலவு இல்லாமல் Bridal Makeup பயிற்சி.! மாத சம்பளம் இவ்வளவா.? விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
TAHDCO Free Training: இளைஞர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; ஆஃபரை அள்ளி வழங்கிய தாட்கோ- என்னென்ன பயிற்சிகள்?
TAHDCO Free Training: இளைஞர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; ஆஃபரை அள்ளி வழங்கிய தாட்கோ- என்னென்ன பயிற்சிகள்?
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget