மேலும் அறிய

தமிழ் குறித்து எங்களுக்கே பாடமா?- ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் இந்தி ஏன்? அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

தவறுதலாக இணையத்தில்‌ பதிவேற்றம்‌ செய்த இணை இயக்குநர்‌ உடனடியாக பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டு, அவர்‌ மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்‌ குறித்து எங்களுக்கு எவரும்‌ பாடம்‌ எடுத்து கூச்சல்‌ போட வேண்டியதில்லை. ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் இந்தி இடம்பெற்றது ஓர் அரசு அலுவலரின் தவறு மட்டுமே என்று சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை அமைச்சர்‌ கீதா ஜீவன்‌‌ விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌, சமூக நல ஆணையரகம்‌ மூலம்‌ பாதிப்புக்கு உள்ளாகும்‌ மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம்‌, "மகளிர்‌ உதவி எண்‌.181" சென்னையில்‌ செயல்பட்டு வருகிறது.

தவறுதலாக இந்தி மொழி சேர்ப்பு

மகளிர்‌ உதவி எண்‌.181 பணியிடத்தில்‌ எற்பட்டுள்ள காலிப்‌ பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும்‌ பொருட்டு, விண்ணப்பங்கள்‌ பெற்றிட http://tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டது. அதில்‌ "அழைப்பு ஏற்பாளர்‌" (Call Responders) என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதிகள்‌ என தமிழ்‌, ஆங்கிலம்‌ மற்றும்‌ இந்தி என தவறுதலாக பதிவேற்றம்‌ செய்யப்பட்டது.

இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின்‌ கவனத்திற்கு வந்தவுடன்‌, அவ்விளம்பரம்‌ உடனடியாக இணையதளத்தில்‌ இருந்து நீக்கப்பட்டு, தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌ தெரிந்த நபர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ என்று திருத்தப்பட்ட ஆட்‌சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம்‌ செய்யப்பட்டது.

இணை இயக்குநர் சஸ்பெண்ட்

மேலும்‌, தவறுதலாக இணையத்தில்‌ பதிவேற்றம்‌ செய்த இணை இயக்குநர்‌ உடனடியாக பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டு, அவர்‌ மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய்மொழியாம்‌ தமிழ்‌ மொழியினை உயிருக்கும்‌ மேலாய்‌ மதிக்கும்‌ திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ தலைவர்‌ எங்கள்‌ முதலமைச்சர்‌ தலைமையில்‌, அனைத்து அரசுத்‌ துறைகளிலும்‌ தமிழ்‌ மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம்‌, ஒன்றிய அரசுடனான கடிதப்‌ போக்குவரத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம்‌ பயன்படுத்தப்படுகிறது.

திமுக வரலாறு

தமிழ்த்தாய்‌ வாழ்த்து, அய்யன்‌ திருவள்ளுவருக்கு வள்ளுவர்‌ கோட்டமும்‌, 133 அடியில்‌ வானுயர சிலையும்‌ அமைத்தது, உலகத்‌ தமிழ்‌ மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத்‌ தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள்‌ கொண்டதுதான்‌ திராவிட முன்னேற்றக்‌ கழக வரலாறு.

தமிழர்‌ பெருமை கூறும்‌ கீழடி அருங்காட்சியகம்‌ அமைத்து, உலகத்தின்‌ பார்வையை நம்‌ மீது திருப்பியது அண்மைக்‌ கால வரலாறு. மேலும்‌, அரசுப் பணிகளில்‌ தமிழ்‌ மொழியில்‌ பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல்‌ அரசு.

சாதனைகளை பட்டியலிட்டுக்‌ கொண்டே போகலாம்‌

தமிழ்நாடு அரசுத்‌ துறைகளில்‌ உள்ள பணியிடங்கள்‌ மற்றும்‌ மாநில பொதுத்துறை நிறுவனங்களில்‌ உள்ள பணியிடங்கள்‌ அனைத்திலும்‌ தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம்‌ நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு, தேர்வு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ அனைத்து போட்டித்‌ தேர்வுகளிலும்‌ தமிழ்‌ மொழி பாடத்தாள்‌ தகுதித்‌ தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின்‌ பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக்‌ கொண்டே போகலாம்‌. ஒரு அரசு அலுவலர்‌ செய்த தவறை வைத்துக்‌ கொண்டு அரசியல்‌ செய்யும்‌ நிலையில்‌ சிலர்‌ உள்ளதைப்‌ பார்த்தால்‌ பரிதாபமாக உள்ளது.

தமிழ்‌ குறித்து எங்களுக்கு எவரும்‌ பாடம்‌ எடுக்கவேண்டாம்

தமிழ்‌ குறித்து எங்களுக்கு எவரும்‌ பாடம்‌ எடுத்து கூச்சல்‌ போட வேண்டியதில்லை. இதனால்‌ மக்கள்‌ ஏமாறப்‌ போவதில்லை.

முதலமைச்சர்‌ ஆட்சியில்‌, தமிழ்‌ மொழி மென்மேலும்‌ சிறப்புகள்‌ பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக்‌ காண சகிக்காதவர்கள்தான்‌ இப்போது கூக்குரல்‌ இடுகிறார்கள். அதனை புறம்‌ தள்ளி, எங்கள்‌ தாய்மொழியாம்‌ தமிழ்‌ வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்‌’’.

இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
தாட்கோவின் இலவச சூரிய மின் பலகை பயிற்சி: ரூ.30,000 வரை ஊதியத்துடன் வேலைவாய்ப்பு!
தாட்கோவின் இலவச சூரிய மின் பலகை பயிற்சி: ரூ.30,000 வரை ஊதியத்துடன் வேலைவாய்ப்பு!
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
EPS in Edappadi constituency : எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
Embed widget