மேலும் அறிய

தமிழ் குறித்து எங்களுக்கே பாடமா?- ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் இந்தி ஏன்? அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

தவறுதலாக இணையத்தில்‌ பதிவேற்றம்‌ செய்த இணை இயக்குநர்‌ உடனடியாக பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டு, அவர்‌ மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்‌ குறித்து எங்களுக்கு எவரும்‌ பாடம்‌ எடுத்து கூச்சல்‌ போட வேண்டியதில்லை. ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் இந்தி இடம்பெற்றது ஓர் அரசு அலுவலரின் தவறு மட்டுமே என்று சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை அமைச்சர்‌ கீதா ஜீவன்‌‌ விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌, சமூக நல ஆணையரகம்‌ மூலம்‌ பாதிப்புக்கு உள்ளாகும்‌ மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம்‌, "மகளிர்‌ உதவி எண்‌.181" சென்னையில்‌ செயல்பட்டு வருகிறது.

தவறுதலாக இந்தி மொழி சேர்ப்பு

மகளிர்‌ உதவி எண்‌.181 பணியிடத்தில்‌ எற்பட்டுள்ள காலிப்‌ பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும்‌ பொருட்டு, விண்ணப்பங்கள்‌ பெற்றிட http://tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டது. அதில்‌ "அழைப்பு ஏற்பாளர்‌" (Call Responders) என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதிகள்‌ என தமிழ்‌, ஆங்கிலம்‌ மற்றும்‌ இந்தி என தவறுதலாக பதிவேற்றம்‌ செய்யப்பட்டது.

இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின்‌ கவனத்திற்கு வந்தவுடன்‌, அவ்விளம்பரம்‌ உடனடியாக இணையதளத்தில்‌ இருந்து நீக்கப்பட்டு, தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌ தெரிந்த நபர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ என்று திருத்தப்பட்ட ஆட்‌சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம்‌ செய்யப்பட்டது.

இணை இயக்குநர் சஸ்பெண்ட்

மேலும்‌, தவறுதலாக இணையத்தில்‌ பதிவேற்றம்‌ செய்த இணை இயக்குநர்‌ உடனடியாக பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டு, அவர்‌ மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய்மொழியாம்‌ தமிழ்‌ மொழியினை உயிருக்கும்‌ மேலாய்‌ மதிக்கும்‌ திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ தலைவர்‌ எங்கள்‌ முதலமைச்சர்‌ தலைமையில்‌, அனைத்து அரசுத்‌ துறைகளிலும்‌ தமிழ்‌ மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம்‌, ஒன்றிய அரசுடனான கடிதப்‌ போக்குவரத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம்‌ பயன்படுத்தப்படுகிறது.

திமுக வரலாறு

தமிழ்த்தாய்‌ வாழ்த்து, அய்யன்‌ திருவள்ளுவருக்கு வள்ளுவர்‌ கோட்டமும்‌, 133 அடியில்‌ வானுயர சிலையும்‌ அமைத்தது, உலகத்‌ தமிழ்‌ மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத்‌ தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள்‌ கொண்டதுதான்‌ திராவிட முன்னேற்றக்‌ கழக வரலாறு.

தமிழர்‌ பெருமை கூறும்‌ கீழடி அருங்காட்சியகம்‌ அமைத்து, உலகத்தின்‌ பார்வையை நம்‌ மீது திருப்பியது அண்மைக்‌ கால வரலாறு. மேலும்‌, அரசுப் பணிகளில்‌ தமிழ்‌ மொழியில்‌ பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல்‌ அரசு.

சாதனைகளை பட்டியலிட்டுக்‌ கொண்டே போகலாம்‌

தமிழ்நாடு அரசுத்‌ துறைகளில்‌ உள்ள பணியிடங்கள்‌ மற்றும்‌ மாநில பொதுத்துறை நிறுவனங்களில்‌ உள்ள பணியிடங்கள்‌ அனைத்திலும்‌ தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம்‌ நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு, தேர்வு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ அனைத்து போட்டித்‌ தேர்வுகளிலும்‌ தமிழ்‌ மொழி பாடத்தாள்‌ தகுதித்‌ தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின்‌ பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக்‌ கொண்டே போகலாம்‌. ஒரு அரசு அலுவலர்‌ செய்த தவறை வைத்துக்‌ கொண்டு அரசியல்‌ செய்யும்‌ நிலையில்‌ சிலர்‌ உள்ளதைப்‌ பார்த்தால்‌ பரிதாபமாக உள்ளது.

தமிழ்‌ குறித்து எங்களுக்கு எவரும்‌ பாடம்‌ எடுக்கவேண்டாம்

தமிழ்‌ குறித்து எங்களுக்கு எவரும்‌ பாடம்‌ எடுத்து கூச்சல்‌ போட வேண்டியதில்லை. இதனால்‌ மக்கள்‌ ஏமாறப்‌ போவதில்லை.

முதலமைச்சர்‌ ஆட்சியில்‌, தமிழ்‌ மொழி மென்மேலும்‌ சிறப்புகள்‌ பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக்‌ காண சகிக்காதவர்கள்தான்‌ இப்போது கூக்குரல்‌ இடுகிறார்கள். அதனை புறம்‌ தள்ளி, எங்கள்‌ தாய்மொழியாம்‌ தமிழ்‌ வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்‌’’.

இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Embed widget