மேலும் அறிய

PMFME scheme: தொழில் தொடங்கும் திட்டம் இருக்கா? ரூ.10 லட்சம் வரை அரசின் மானியம்; முழு விவரம் இங்கே..!

PMFME scheme Rs.10 lakh subsidy: உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன

சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதாவர்களே இல்லை. ஆனால்,பலருக்கும் இருக்கும் அச்சம் காரணமாக அது நிறைவேறாமல் போய் விடுகிறது. பயம் கடந்து திட்டங்களை முன்னேடுப்பவர்கள் தொழில்முனைவர்களாக வளர்கிறார்கள். அரசும் தொழிமுனைவு சார்ந்த விஷங்களை ஊக்குவித்து வருகிறது. 

உணவு பதப்படுத்தும் தொழில்:

உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று சென்ன மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 உணவுப் பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் ஆகியவ்ற்றினால் செய்யப்படும் ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலா் மாவு மற்றும் இட்லி, தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்கள் தயாரித்தல், மரச் செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு, பேக்கரி பொருட்கள், சாம்பாா் பொடி, இட்லி பொடி, மசாலா பொருட்கள் தயாரித்தல், பால் பதப்படுத்துதல், தயிா், நெய், பனீா் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரித்தல், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை செய்யும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தவும் இந்த திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

புதிதாக தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள்,  ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழில் செய்து வருபவர்கள், சிறு குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ரூ.1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இதன் கீழ் உதவி பெறத் தகுதியானவை.

திட்ட விவரம்:

திட்டத் தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளா் செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு 35 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கும்.

சுய உதவிக் குழு:

 உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் சுய உதவிக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வீதம் தொடக்க நிலை முதலீடாக வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற https://pmfme.mofpi.gov.in/ - என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

தொடர்ப்புக்கு:

முகவரி: 

 இணை இயக்குநர்,

தொழில் மற்றும் வணிக மண்டல அலுவலகம்,

A-30, சிட்கோ தொழிற்பேட்டை,

கிண்டி,

சென்னை-32 

தொடர்பு எண்:  90030 84478 / 94441 14723

 வார நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்,.

கவனிக்க:

இந்த திட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இனி மாவட்ட தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரிக்கு வருகிறது பிரம்மாண்ட ஐ.டி. பூங்கா...! குவியப்போகிறது வேலைவாய்ப்பு...
புதுச்சேரிக்கு வருகிறது பிரம்மாண்ட ஐ.டி. பூங்கா...! குவியப்போகிறது வேலைவாய்ப்பு...
SBI PO Recruitment 2026: 1,500 புரொபேஷனரி ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
SBI PO Recruitment 2026: 1,500 புரொபேஷனரி ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... காலிப்பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் !
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... காலிப்பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் !
சிவகங்கை வேலை வாய்ப்பு முகாம்: ஜூன் 19 அன்று வேலை, பயிற்சி, உதவித்தொகை பெற அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலை வாய்ப்பு முகாம்: ஜூன் 19 அன்று வேலை, பயிற்சி, உதவித்தொகை பெற அரிய வாய்ப்பு!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
UDHAYANIDHI VS VIJAY : தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
ஆண்டுக்கு 500 பேர் கூட நியமனம் இல்லை; அரசுப் பள்ளிகளில் 18,107 ஆசிரியர் காலியிடங்கள்- நிரப்புவது எப்போது?
ஆண்டுக்கு 500 பேர் கூட நியமனம் இல்லை; அரசுப் பள்ளிகளில் 18,107 ஆசிரியர் காலியிடங்கள்- நிரப்புவது எப்போது?
Embed widget