மேலும் அறிய

PMFME scheme: தொழில் தொடங்கும் திட்டம் இருக்கா? ரூ.10 லட்சம் வரை அரசின் மானியம்; முழு விவரம் இங்கே..!

PMFME scheme Rs.10 lakh subsidy: உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன

சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதாவர்களே இல்லை. ஆனால்,பலருக்கும் இருக்கும் அச்சம் காரணமாக அது நிறைவேறாமல் போய் விடுகிறது. பயம் கடந்து திட்டங்களை முன்னேடுப்பவர்கள் தொழில்முனைவர்களாக வளர்கிறார்கள். அரசும் தொழிமுனைவு சார்ந்த விஷங்களை ஊக்குவித்து வருகிறது. 

உணவு பதப்படுத்தும் தொழில்:

உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று சென்ன மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 உணவுப் பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் ஆகியவ்ற்றினால் செய்யப்படும் ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலா் மாவு மற்றும் இட்லி, தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்கள் தயாரித்தல், மரச் செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு, பேக்கரி பொருட்கள், சாம்பாா் பொடி, இட்லி பொடி, மசாலா பொருட்கள் தயாரித்தல், பால் பதப்படுத்துதல், தயிா், நெய், பனீா் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரித்தல், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை செய்யும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தவும் இந்த திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

புதிதாக தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள்,  ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழில் செய்து வருபவர்கள், சிறு குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ரூ.1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இதன் கீழ் உதவி பெறத் தகுதியானவை.

திட்ட விவரம்:

திட்டத் தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளா் செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு 35 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கும்.

சுய உதவிக் குழு:

 உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் சுய உதவிக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வீதம் தொடக்க நிலை முதலீடாக வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற https://pmfme.mofpi.gov.in/ - என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

தொடர்ப்புக்கு:

முகவரி: 

 இணை இயக்குநர்,

தொழில் மற்றும் வணிக மண்டல அலுவலகம்,

A-30, சிட்கோ தொழிற்பேட்டை,

கிண்டி,

சென்னை-32 

தொடர்பு எண்:  90030 84478 / 94441 14723

 வார நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்,.

கவனிக்க:

இந்த திட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இனி மாவட்ட தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
டிகிரி முடித்துவிட்டு வேலையில்லையா? அரசு தரும் உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பியுங்கள்! 
டிகிரி முடித்துவிட்டு வேலையில்லையா? அரசு தரும் உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பியுங்கள்! 
மதுரை மக்கள் கவனத்திற்கு... (29.05.2026) அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது !
மதுரை மக்கள் கவனத்திற்கு... (29.05.2026) அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது !
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
Embed widget