மேலும் அறிய

கயிறு வாரியத்தில் வேலை: கடைசி தேதி நாளை மட்டுமே.. உடனடியாக விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுதுத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கயிறுவாரியத்தில் உதவியாளர், விற்பனையாளர், தட்டச்சர் என பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கடைசி தேதி நாளையுடன் முடிவடைகிறது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

மத்திய அரசின் கயிறு வாரியம், கயிறு தொழில் மேம்பாட்டிற்காக காயர் உத்யமி யோஜனா என்ற கயிறு தொழில் மேம்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த வாரியத்தின் கீழ் பல்வேறு தொழில்முனைவோர்கள் உருவாகின்றனர். குறிப்பாக கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல், பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், தேங்காய் மட்டைக் கொண்டு வருமானத்தை பெருக்குதல், நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல், தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தைப் புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது, தேங்காய் மட்டையை பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருட்களின் உற்பத்தியை அதிகபடுத்துவது, கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈர்ப்பது போன்ற பல்வேறு பணிகளை இந்த வாரியம் செய்துவருகிறது.

  • கயிறு வாரியத்தில் வேலை: கடைசி தேதி நாளை மட்டுமே.. உடனடியாக விண்ணப்பிக்கவும்!

இந்நிலையில் தான் தற்போது மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக உதவியாளர் -09, விற்பனையாளர் – 05, கிளார்க்- 05, ஷோரூம் மேலாளர் – 4, இளநிலை சுருக்கெழுத்தர் – 4, பயிற்சி உதவியாளர் – 3, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் – 2, மெஷின் ஆபரேட்டர் – 1, ஹிந்தி தட்டச்சர் – 1 என மொத்தம் 36 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இதற்கான விண்ணப்பத்தை நாளை மாலை 6 மணிக்குள் அதாவது செப்டம்பர் 15 ஆம்தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு htttp://coirboard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பதாரர்கள் எந்த பணிக்கு விண்ணப்பிக்கிறார்களோ? அதற்கேற்றால் போல் ரூபாய் 500, ரூபாய் 400 மற்றும் ரூ. 300 என விண்ணப்பக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதோடு எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை  விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் கயிறு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

  • கயிறு வாரியத்தில் வேலை: கடைசி தேதி நாளை மட்டுமே.. உடனடியாக விண்ணப்பிக்கவும்!

தேர்வு செய்யும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுதுத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள், தட்டச்சு தேர்வு எழுதியவர்கள், பட்டதாரிகள் அவரவர் தகுதிக்கு ஏற்ப பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த கூடுதல் விபரங்களை http://coirboard.gov.in/wp-content/uploads/2021/07/Notification-15.07.2021.pdf  என்ற பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

 

தலைப்பு செய்திகள்

HR&CE: 8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் - விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
HR&CE: 8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் - விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
இந்திய கடற்படை SSC அதிகாரி பணி: ரூ.1.2 லட்சம் சம்பளம், 275 காலியிடங்கள்! விபரம் இதோ..
இந்திய கடற்படை SSC அதிகாரி பணி: ரூ.1.2 லட்சம் சம்பளம், 275 காலியிடங்கள்! விபரம் இதோ..
ராணுவத்தில் பொறியாளர் அரசு வேலை: ரூ.1.4 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?
ராணுவத்தில் பொறியாளர் அரசு வேலை: ரூ.1.4 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?
ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget