மேலும் அறிய

கயிறு வாரியத்தில் வேலை: கடைசி தேதி நாளை மட்டுமே.. உடனடியாக விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுதுத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கயிறுவாரியத்தில் உதவியாளர், விற்பனையாளர், தட்டச்சர் என பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கடைசி தேதி நாளையுடன் முடிவடைகிறது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

மத்திய அரசின் கயிறு வாரியம், கயிறு தொழில் மேம்பாட்டிற்காக காயர் உத்யமி யோஜனா என்ற கயிறு தொழில் மேம்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த வாரியத்தின் கீழ் பல்வேறு தொழில்முனைவோர்கள் உருவாகின்றனர். குறிப்பாக கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல், பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், தேங்காய் மட்டைக் கொண்டு வருமானத்தை பெருக்குதல், நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல், தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தைப் புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது, தேங்காய் மட்டையை பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருட்களின் உற்பத்தியை அதிகபடுத்துவது, கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈர்ப்பது போன்ற பல்வேறு பணிகளை இந்த வாரியம் செய்துவருகிறது.

  • கயிறு வாரியத்தில் வேலை: கடைசி தேதி நாளை மட்டுமே.. உடனடியாக விண்ணப்பிக்கவும்!

இந்நிலையில் தான் தற்போது மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக உதவியாளர் -09, விற்பனையாளர் – 05, கிளார்க்- 05, ஷோரூம் மேலாளர் – 4, இளநிலை சுருக்கெழுத்தர் – 4, பயிற்சி உதவியாளர் – 3, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் – 2, மெஷின் ஆபரேட்டர் – 1, ஹிந்தி தட்டச்சர் – 1 என மொத்தம் 36 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இதற்கான விண்ணப்பத்தை நாளை மாலை 6 மணிக்குள் அதாவது செப்டம்பர் 15 ஆம்தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு htttp://coirboard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பதாரர்கள் எந்த பணிக்கு விண்ணப்பிக்கிறார்களோ? அதற்கேற்றால் போல் ரூபாய் 500, ரூபாய் 400 மற்றும் ரூ. 300 என விண்ணப்பக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதோடு எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை  விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் கயிறு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

  • கயிறு வாரியத்தில் வேலை: கடைசி தேதி நாளை மட்டுமே.. உடனடியாக விண்ணப்பிக்கவும்!

தேர்வு செய்யும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுதுத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள், தட்டச்சு தேர்வு எழுதியவர்கள், பட்டதாரிகள் அவரவர் தகுதிக்கு ஏற்ப பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த கூடுதல் விபரங்களை http://coirboard.gov.in/wp-content/uploads/2021/07/Notification-15.07.2021.pdf  என்ற பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Embed widget