மேலும் அறிய

கவிஞர் வைரமுத்துவிற்கு ஓஎன்வி குறுப் இலக்கிய விருது  அறிவிப்பு

கவிஞர் வைரமுத்துக்கு மலையாள இலக்கிய உலகின் தேசிய விருதாகக் கருதப்படும் ஓஎன்வி குறுப் இலக்கிய விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. 

கவிஞர் வைரமுத்துக்கு மலையாள இலக்கிய உலகின் தேசிய விருதாகக் கருதப்படும் ஓஎன்வி குறுப் இலக்கிய விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்திய எழுத்தாளர்களின் மிக முக்கியமானவரான ஓஎன்வி. குறுப். தனது இலக்கியப் படைப்புகளுக்காக ஞானபீட விருதை வென்றவர்.  சிறந்த பாடலுக்காக தேசிய விருதும் பெற்றிருக்கிறார். 25 கவிதைத் தொகுதிகளை அவர் வெளியிட்டிருக்கிறார். இதுவரை இவ்விருது சுகதகுமார், எம்.டி.வாசுதேவன், நாயர், அக்கிதம் அச்சுதன், நம்பூதிரி, லீலாவதி அகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


கவிஞர் வைரமுத்துவிற்கு ஓஎன்வி குறுப் இலக்கிய விருது  அறிவிப்பு


அவர் மறைவுக்குப் பின்னர் அவரின் நினைவாக இந்த விருது கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இலக்கியத் துறை சார்ந்தோருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.3 லட்சம் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான ஓஎன்வி. குறுப் விருதுக்கு வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்வுக் குழுவில் மலையாளப் பல்கலைக்கழக துணை வேந்தர் அனில் மெல்லத்தோல், கவிஞர்கள் அலக்கொண்டே லீலாகிருஷ்ணன், பிரபா வர்மா அகியோர் இடம்பெற்றுள்ளனர். கவிஞர் வைரமுத்து இதுவரை 7 தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். பத்மபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 
இந்நிலையில், தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப்பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  "தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையை கவிப்பேரரசு பெற்று, அன்னைத் தமிழுக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார். தமிழுக்கு பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் விருது வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். விருது பற்றி பேசியுள்ள கவிஞர் வைரமுத்து, "ஓஎன்வி குறுப் இலக்கிய விருது பெறுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். ஓஎன்வி குறுப் கவிதைக்கும் பாடலுக்கும் இருந்த இடைவெளியைக் குறைத்தவர் அல்லது அழித்தவர். உலக இலக்கியத்துக்கு இணையாக அவர் மலையாளத்தில் இலக்கியம் படைத்திருக்கிறார். மலையாளத்தின் காற்றும் தண்ணீரும்கூட இலக்கியம் பேசும். அந்த மண்ணிலிருந்து பெறும் விருதை நான் மகுடமாகக் கருதுகிறேன்.இந்த உயரிய விருதை உலகத் தமிழர்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிர்ந்துகொள்கிறேன்" என்று நெகிழ்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார்.


கவிஞர் வைரமுத்துவிற்கு ஓஎன்வி குறுப் இலக்கிய விருது  அறிவிப்பு

வைரமுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியர். 80களிலிருந்து தற்போது வரை அனைவரையும் தனது எழுத்தக்களால் கட்டிப் போட்டவர். காதல், சோகம், பாசம், கிராமம் என அவர் தொடாத எழுத்துக்களே இல்லை. இளையராஜாவில் இருந்து இமான் வரை பணியாற்றியிருக்கும் வைரமுத்து, இன்னும் இளைஞர்களை எழுத்துக்களால் கட்டிப்போடுகிறார். பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள வைரமுத்துவிற்கு இந்த விருது, அவரது மணிமகுடத்தில் மற்றொரு மாணிக்க கல் என பலரும் போற்றுகின்றனர்.  விரைவில் அறிவிக்கப்படும் அந்த விழாவில் விருதை அவர் பெற உள்ளார். 

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget