மேலும் அறிய

Ethirneechal : முடிவுக்கு வருகிறதா எதிர்நீச்சல் சீரியல்? சேனலின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

Ethirneechal : சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான 'எதிர்நீச்சல்' தொடருக்கு விரைவில் எண்டு கார்டு போட சேனல் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

 
சின்னத்திரையை பொறுத்தவரையில் என்றுமே முதலிடத்தில் இருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களுக்கு என்றுமே ஒரு ஸ்பெஷல் தான். சன் டிவியில் ஒளிபரப்பான பல மெகா சீரியல்கள் காலங்களை கடந்தும் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் 'கோலங்கள்' சீரியல் மூலம் பிரபலமான இயக்குநர் திருச்செல்வத்தின் மற்றுமொரு படைப்பு தான் தற்போது சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடர். 
 
 
பெண்கள் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள். எந்த தடங்கல் எது வந்தாலும் அவர்கள் எதிர்நீச்சல் போட்டு போராடி வென்று விடுவார்கள் என்ற கருவை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடரில் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்களை சுற்றிலும் நகரும் இந்த கதைக்களத்தில் ஆதி குணசேகரன் முக்கியமான கதாபாத்திரமாக இருந்து வருகிறது. 
 
 
Ethirneechal : முடிவுக்கு வருகிறதா எதிர்நீச்சல் சீரியல்? சேனலின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
 
ஆதி குணசேகரனாக நடிகர் மாரிமுத்து நடித்து வந்த சமயத்தில் 'எதிர்நீச்சல்' டி.ஆர்.பி ரேட்டிங் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு முதலிடத்தில் இருந்து வந்தது. சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் சீரியலாக இருந்து வந்த எதிர்நீச்சல் சீரியல் திடீரென சரிவை சந்திக்க துவங்கியது. அதற்கு முக்கியமான காரணம் நடிகர் மாரிமுத்துவின் மறைவு. அவருக்கு பதிலாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி இணைந்தார். அவர் அந்த கதாபாத்திரமாக என்ட்ரி கொடுத்த பிறகு கதைக்களத்தில் எக்கச்சக்கமான மாற்றங்கள். சம்பந்தமே இல்லாத கதைக்களமாக மாறியது. 
 
 
பெண்களை மைய கருவாக வைத்து ஒளிபரப்பாகி வந்த தொடரில் பெண்கள் அடுத்தடுத்து வீழ்வதும் அவர்களை சூழ்ச்சியால் ஆதி குணசேகரன் வெல்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு வந்தன. அது பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் எதிர்நீச்சல் சீரியலுக்கான வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. அந்த வகையில் படிப்படியாக டி.ஆர்.பி ரேட்டிங்கும் குறைய துவங்கியது.
 
Ethirneechal : முடிவுக்கு வருகிறதா எதிர்நீச்சல் சீரியல்? சேனலின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
 
 
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளம் எங்கும் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் சீரியலை முடிக்க சேனல் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை மாதத்துடன் சீரியல் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. எதிர்நீச்சல் சீரியலில் ஏகப்பட்ட ட்விஸ்ட்களை முடிவுக்கு கொண்டு வராமல் அப்படியே விட்டு வைத்துள்ளார் இயக்குநர் திருச்செல்வம். அதில் தற்போது தான் தர்ஷினி கடத்தல் மற்றும் அப்பத்தா கொலைக்கான காரணம் யார் என்பதை போலீஸ் கண்டுபிடித்து குணசேகரனை கைது செய்துள்ளது. 
 
 
பெண்கள் அனைவருக்கும் இப்போது தான் அவரவர்களின் திறமைக்கேற்ற ஒரு பிளாட்பாரம் அமைந்துள்ளது. அதை சரியாக பயன்படுத்தி அவர்கள் எப்படி முன்னேற போகிறார்கள்? அருணுடம் ஆதிரை திருமணம், குணசேகரனுக்கான தண்டனை இப்படி பல முடிச்சுகள் இந்த ஒரு மாத கால அவகாசத்தில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எதிர்நீச்சல் சீரியல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget