மேலும் அறிய

Ethir neechal July 11 episode: சக்தியை கையெழுத்து போட விடாமல் தடுத்த ஜனனி: கெளதம் மீது சந்தேகப்படும் ஜீவானந்தம்... எதிர்நீச்சல் அப்டேட் 

*ரேணுகாவும் நந்தினியும் பத்திரத்தில் கையெழுத்து போட்டனர்*சக்தியை கையெழுத்து போடவிடாமல் தடுத்த ஜனனி*கெளதம் மீது சந்தேகப்படும் ஜீவானந்தம்இன்றைய எதிர்நீச்சல் எபிசோடில் என்ன நடந்தது

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் இன்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டுக்கு ஆடிட்டர் வந்துள்ளார். அந்த நேரம் பார்த்து அரசு பள்ளிக்கு விசாரிக்க சென்ற ரேணுகா, நந்தினி மற்றும் ஐஸ்வர்யா வீட்டுக்கு வருகிறார்கள். என்ன சொல்லியும் கேட்காமல் மகளை கொண்டு போய் அரசு பள்ளியில் சேர்த்தது பற்றி நக்கலாக பேசுகிறார் குணசேகரன். என்னிடம் அடிமையாக இருக்க விரும்பவில்லை என சொல்லும் உங்கள் பெயரில் எதற்கு என்னுடைய கம்பெனியின் இயங்க வேண்டும், வந்து இந்த பத்திரத்தில் கையெழுத்து போடுங்கள் என்கிறார். 

 

Ethir neechal July 11 episode: சக்தியை கையெழுத்து போட விடாமல் தடுத்த ஜனனி: கெளதம் மீது சந்தேகப்படும் ஜீவானந்தம்... எதிர்நீச்சல் அப்டேட் 

ஒரு வழியாக எங்களுக்கு விடுதலை கிடைத்தது என சொல்லி கையெழுத்து போட வரும் நந்தினி திடீரெனெ "நான் இப்போ இந்த பத்திரத்தில் கையெழுத்து போட முடியாது என சொன்னால் நீங்க என்ன செய்வீர்கள்" என கேட்கிறாள். அதெல்லாம் அவரால் ஒன்னும் செய்ய முடியாது. அது தான் அடியாள் ஒருத்தன உன்னோட தலையில கட்டி வச்சு இருக்காருல அவனை வைச்சு உருட்டி மிரட்டி கையெழுத்து போட வைப்பார்"  என ரேணுகா சொல்கிறாள். சும்மா தான் கேட்டேன் என சொல்லி நந்தினியும் ரேணுகாவும் கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார்கள். சக்தியும் கையெழுத்து போட வேண்டும் என ஆடிட்டர் சொல்கிறார். 


"நாங்களாவது கொஞ்சம் யோசித்தோம் சக்தி உடனே கையெழுத்து போட்டு தூக்கி போட்டு விடுவான். அவன் ரோஷக்காரன் இந்த சொத்துல தான் ஒரு பைசா கூட வேண்டாம் என ஏற்கனவே சொன்னானே " என்கிறாள் நந்தினி. 

கௌதம், ஜீவானந்தத்தை சந்தித்து பட்டம்மாள் குறித்து அவன் சேகரித்த அனைத்து விஷயங்களையும் குணசேகரன் எப்படி குறுக்கு வழியில் சொத்துக்களை சேகரித்தார் என்பது குறித்தும் கூறுகிறான். ஜீவானந்தம் இவை அனைத்தும் தெரிந்த தகவல் அதை தாண்டி எங்களுக்கு சில தகவல்கள் தேவைப்படுகிறது. நாளைக்கு பத்திரம் நமது பெயரில் மாற்றப்படும்போது பட்டம்மாளின் பேத்தி என சொல்லும் ஜனனி வந்து எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது. அதனால் யாருக்கும் சந்தேகம் வராதபடி இயல்பாக ஜனனியுடன் நட்பாகி அவர்கள்  வீட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்த தகவலை சேகரிக்க சொல்கிறார். கௌதம் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை பார்த்து ஜீவானந்தத்திற்கு சந்தேகம் வருகிறது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவனை அனுப்பி வைத்து விடுகிறார். கௌதம் ஏதோ ஒரு உண்மையை மறைக்கிறான். போக போக அது என்னவென்று தெரியும் என்கிறார் ஜீவானந்தம். 

 

Ethir neechal July 11 episode: சக்தியை கையெழுத்து போட விடாமல் தடுத்த ஜனனி: கெளதம் மீது சந்தேகப்படும் ஜீவானந்தம்... எதிர்நீச்சல் அப்டேட் 
சக்தியும், ஜனனியும் வீட்டுக்கு வந்ததும் சக்தியை அழைத்து  பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறார் குணசேகரன். சக்தியை கையெழுத்து போட விடாமல் ஜனனி தடுக்க கோபமடைகிறார் குணசேகரன். இன்னும் நாலு நாள் தான் உங்க களவாணித்தனத்தை அம்பலப்படுத்துகிறேன் என குணசேகரன் சொல்ல, உங்கள் பிராட் முகத்தை கிழித்து எறிய எனக்கு 24 மணி நேரம் போதும். நீங்கள் யார் உங்களின் குறுக்கு புத்தி என்ன என்பதை இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் காண்பிக்க போகிறேன். உங்க தம்பி என்ற பாசத்திலா சொத்தை சக்தி பேர்ல எழுத வச்சீங்க. நாலு பேர் உங்கள பெருமையா பேசணும் அதுக்கு தானே. வீட்டில் இருக்கவங்கள இது என்னோட உழைப்பு, என்னோட சம்பாத்தியம் என சொல்லி காட்டுவீங்க. இந்த பசங்க வரைக்கும் உங்க பேச்சு பாதித்து இருக்கு. உங்க கண்கட்டி வேஷம் இனிமேல் செல்லாது. 

நீ உன்னோட பொண்டாட்டி பேச்சை கேட்க போறியா இல்லை என்னோட பேச்சை கேட்க போறியா என சக்தியை கேட்க சக்தி சிறிதும் தயக்கமின்றி ஜனனிக்கு ஆதரவாக வெளியில் சென்று விடுகிறான். "என்னோட சொத்தை எல்லாருமா சேர்ந்து ஆட்டையை போடலாம் என முயற்சி பண்றீங்களா. இந்த ஜென்மத்தில் அது நடக்காது. அந்த கிழவி கழுத்தை நசுக்கி கதையை முடிக்க ஐந்து நிமிஷம் ஆகாது" என குணசேகரன் சொல்ல, "சொத்து கையில் வரும் போது ஜெயிலுக்கு போக போறீங்களா மாமா" என நந்தினி நக்கல் செய்கிறாள். நாங்க வேணும்னா ஜனனி கைல கால்ல விழுந்து கையெழுத்து போட சொல்லட்டுமா என்றதும் கண்டவ கிட்ட நான் ஏன் என்னுடைய சொத்தை கெஞ்சி கேட்டு வாங்கணும் இந்தாம்மா என்றதும் நந்தினி நக்கலாக "இந்தம்மா ஏய்! இந்த குணசேகரன் இன்னொரு முகத்தை இப்போ பாப்பீங்க!" என சொல்லி குணசேகரன் போலவே செருமி காண்பிக்கிறாள் அதை பார்த்த வீட்டில் இருந்த அனைத்து பெண்களுக்கும் சிரிப்பு வந்துவிடுகிறது. கோபமாக மாடிக்கு குணசேகரன் செல்ல அனைத்து ஆண்களும் இடத்தை விட்டு களைந்து செல்கிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண்  பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண் பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண்  பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண் பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
சாம்சங் நிறுவனத்திற்கு தொடரும் தலைவலி... குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்
சாம்சங் நிறுவனத்திற்கு தொடரும் தலைவலி... குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்
Crime: பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!
Crime: பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி! 75 வயாதாகியும் போய் பார்க்கவில்லை - சிவி சண்முகம் தாக்கு
அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி! 75 வயாதாகியும் போய் பார்க்கவில்லை - சிவி சண்முகம் தாக்கு
Embed widget