Ethir neechal Aug 23 Promo: ஷாக் கொடுத்த ஜனனி... ஜீவானந்தத்தின் அடுத்த திட்டம் என்ன? இன்றைய எதிர் நீச்சலில் என்ன நடக்கப்போகுது?
வீடு திரும்பிய ஜனனி, அனைவரிடம் ஜீவானந்தம் பற்றியும் அவருக்கு நடந்த கொடுமை பற்றியும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி வருத்தப்படுகிறாள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் வக்கீல் ஜீவானந்தத்திற்கு எதிராக மோசடி வழக்கு தொடுத்ததைப் பற்றி குணசேகரனிடம் போன் மூலம் தெரிவிக்கிறார். கதிர் மூலம் கவுஞ்சியில் நடந்த குழப்பத்தைப் பற்றியும், அங்கு ஜீவானந்தத்திற்கு பதிலாக அவரது மனைவி கயல்விழியை சுட்டதைப் பற்றியும் சொல்கிறான்.
ஜனனியை அங்கே பார்த்ததை பற்றியும் சொல்கிறான். வீட்டில் உள்ள யாரிடமும் எங்கே சென்றான் என்ற விஷயத்தை சொல்ல வேண்டாம் என்றும், ஜனனியை அங்கே பார்த்ததைப் பற்றியும் காட்டிக்கொள்ளவேண்டாம் என்றும் குணசேகரன் சொல்லிவிடுகிறார்.
ஜனனி காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது ஜீவானந்தத்தை தவறாக நினைத்ததை பற்றி கவலைப்பட்டு கொண்டு வருகிறாள். கயல்விழி இறந்ததை நினைத்து கண்கலங்குகிறாள்.

கதிர் வீடு திரும்பியதும் அவன் ஊரில் இல்லாத சமயத்தில் குணசேகரன் அசிங்கமாக பேசியது பற்றியும், அவளை அடிக்க கை ஓங்கியதைப் பற்றியும் சொல்கிறாள் நந்தினி. “நீங்கள் அவரின் வேட்டை நாய், பிணமாக தான் திரும்பி வருவீர்கள்” என குணசேகரன் சொல்லியதையும் கதிரிடம் சொல்ல, கோபத்தின் உச்சிக்கு சென்ற கதிர் குணசேகரனை எதிர்த்துக் கேட்கிறான். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஜனனி வீடு வந்து சேர்கிறாள். சக்தி, ஈஸ்வரி, நந்தினி மற்றும் ரேணுகா பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஜனனி வந்து கவுஞ்சியில் நடந்தைப் பற்றி சொல்லி கண்கலங்குகிறாள். "இவ்வளவு நல்லது பண்றவர் ஏன் சொத்தை அவர் பெயரில் மாத்தி எழுதிக்கணும்?" என நந்தினி கேட்கிறாள்.
"ஏதோ ஒரு காரணம் இருக்கு அக்கா" என்கிறாள் ஜனனி. ஜனனி நடந்ததை சொல்ல சொல்ல அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். "ஜீவானந்தத்திற்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும்ன்னு எனக்கு தெரியவே இல்ல அக்கா. அவர சுட வந்தவங்க அவரோட மனைவியை சுட்டுட்டாங்க" என சொல்லி அழுகிறாள். அதைக் கேட்ட மற்றவர்களும் அழுகிறார்கள். ஈஸ்வரியால் இந்த துக்கத்தை தாங்கி கொள்ளவே முடியவில்லை. இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ.
கதிர் குணசேகரனை எதிர்த்து என்ன செய்தான்? அப்பத்தா கண்முழித்த விஷயம் ஜனனிக்கு தெரிய வந்ததா? ஜீவானந்தம் தன் மனைவியை சுட்டது யார் என்பதை எப்படி கண்டுபிடிக்க போகிறார்? அப்பத்தாவின் திட்டம் என்னவாக இருக்கும்? இந்த கேள்விகளுக்கு வரும் எதிர் நீச்சல் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















