![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‛இரண்டாவது திருமணம் செய்ய பயமாக இருக்கிறது’ - காரணத்தை உடைத்த VJ மகேஸ்வரி!
தன் இரண்டாவது திருமணத்தை பற்றி வெளிப்படையாக பேசிய பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மகேஸ்வரி
![‛இரண்டாவது திருமணம் செய்ய பயமாக இருக்கிறது’ - காரணத்தை உடைத்த VJ மகேஸ்வரி! Anchor Maheshwari opens up about her second marriage ‛இரண்டாவது திருமணம் செய்ய பயமாக இருக்கிறது’ - காரணத்தை உடைத்த VJ மகேஸ்வரி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/146cbc7ba93c1e318a6c6ae6c9e984c51659781102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளனி மற்றும் நடிகை மகேஸ்வரி தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக மனம் திறந்து பேசியுள்ளார்.
தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கிய மகேஸ்வரி, 2016-ல் அவரது கணவரை விவாகரத்து செய்தார். தற்போது மகேஸ்வரி அவரின் பெற்றோருடனும் தனது மகன் கேஷவுடன் சென்னையில் வசித்து வருகிறார். தாயுமானவள் சீரியல் நடிகை ஒரு நேர்காணலில், இரண்டாவது திருமணத்தை நினைக்கும் போது பயமாக உள்ளதாக கூறியுள்ளார். 36 வயதான நடிகை மகேஸ்வரி, பிரபல யுடியூப் ஒன்றில் கூறியதாவது, "நான் என் முதல் கணவராகிய சாணக்கியனை விவாகரத்து செய்த பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக எனது பெற்றோர் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறேன். விவாகரத்து பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது.எனக்கு பிடித்தது போல் என் வாழ்க்கையை நான் வாழ்ந்து வருகிறேன்.
10 ஆண்டுகளாக நான் தனியாகதான் வாழ்ந்து வருகிறேன்.இந்த சமூகத்தில் வாழ்வது பெரிய போராட்டம். என் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன்.கல்யாணம் முடிந்த ஒரே வருடத்தில் நான் விவாகரத்து செய்து விட்டேன். என் குழந்தையை நான் வளர்ப்பதில் நான் கவனமாக இருந்தேன். இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்கும் போது எனக்கு பயமாகவுள்ளது. எனது இரண்டாவது கணவரும் என் முதல் கணவர் போலவே இருப்பார் என்றும் எங்கள் திருமண பந்தம் நீண்ட காலம் நீடிக்காது என்று சில சிந்தனைகள் தோன்றும். கல்யாணம் பற்றி சிந்திக்கும் போது இந்த சிந்தனைகள் என்னை என் வாழ்கை முழுவதும் துரத்திக் கொண்டிருக்கிறது."
View this post on Instagram
தற்போது யாருடனும் பந்தத்தில் இல்லையென்றும், இப்போது கல்யாணத்தை பற்றிய எந்தவொரு சிந்தனைகள் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள சென்னை பல்கலைகழகத்தில் தன் பட்டப்படிப்பை முடித்து விட்டு பொழுதுபோக்கு துறையில் தன் கனவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.
முதன் முதலாக தனியார் தமிழ் மியூசிக் சேனல்களில், பணிபுரிந்த இவர் புது கவிதை எனும் பிரபல நாடகத்திலும் நடித்தார். காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்டா ராப் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சென்னை 28-ன் இரண்டாவது பாகத்திலும், ரைட்டர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சமீபமாக விக்ரம் படத்தில் சந்தனம் கதாப்பாத்திரத்தின் மனைவியாக நடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)