புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
யூடியூப் சேனல் ஊழியரிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வாட்டர்மெலஸ் ஸ்டார் திவாகர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் "வாட்டர்மெலன் ஸ்டார்" என்ற பெயரில் பிரபலமான திவாகர், யூடியூப் சேனல் ஊழியரிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் மதுரைக்கு சென்று அவரை கைது செய்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, யூடியூப் சேனலில் பணியாற்றும் ஒருவரிடம் திவாகர் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. தொடர்ந்து, மதுரையில் இருந்த திவாகரை போலீசார் கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கின் பின்னணி மற்றும் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்டர்மெலன் திவாகர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தன்னை "நடிப்பு அரக்கன்" என அறிமுகப்படுத்திக் கொள்ளும் அவர், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதே நேரத்தில், சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக அடிக்கடி பேசுபொருளாகி வருகிறார்.
சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளிக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் கேமராவை உடைத்ததாகவும், அங்கு தன்னைத் தாக்க முயன்றதாகவும் கூறி திவாகர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் உள்ளிட்டோர் தன்னைத் தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டி காவல்துறையில் புகார் அளித்திருந்தது பெரும் விவாதத்தை கிளப்பியது. அந்த குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்ததோடு, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.
தற்போது யூடியூப் சேனல் ஊழியரை மிரட்டி பணம் கேட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள புதிய வழக்கில் திவாகர் கைது செய்யப்பட்டிருப்பது அவரது பெயரை மீண்டும் சர்ச்சையின் மையத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணையின் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















