மேலும் அறிய

Sushant Singh: "சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளார்.." பிரேத பரிசோதனை அறை ஊழியர் அதிர்ச்சி தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது அவரது உயிரிழப்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சுஷாந்த்சிங் மரணம்:

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி தோனியின் பயோபிக் படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடத்திலும் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையிலுள்ள பாந்த்ரா இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரம் பீகார் அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. காரணம் பீகார் போலீசில் சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அவரது காதலி சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 

விலகாத மர்மம்:

இப்பிரச்சனை உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் சுஷாந்த் சிங் தந்தை புகாரில், ரியா தனது மகனை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், அவருக்கு போதை மருந்து கொடுத்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாகவும் புகாரளித்தார். 

இதில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ரியா 28 நாட்களும், அவரது சகோதரர் ஷோக் 3 மாதங்களும் பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். இன்று வரை சுஷாந்த் ஏன் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது மர்மமாக இருக்கும் நிலையில், தற்போது பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உடலில் காயங்கள்:

சுஷாந்த் சிங் உடலுக்கு உடற்கூராய்வு செய்த அறையில் இருந்தவரின் வாக்குமூலம் வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூராய்வுக்காக அவர் உடல் கொடுக்கப்பட்டபோது, அதில், காயங்கள் போன்று பல அடையாளங்கள் காணப்பட்டன என அவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, சுஷாந்த் சிங்கின் கழுத்தில் இரண்டு முதல் மூன்று காயங்கள்  காணப்பட்டன என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது, ​​கூப்பர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக ஐந்து சடலங்களைப் பெற்றோம். அந்த ஐந்து உடல்களில் ஒன்று வி.ஐ.பி. உடல். நாங்கள் பிரேத பரிசோதனை செய்யச் சென்றபோது, ​​அவர் சுஷாந்த் என்றும், அவரது உடலில் பல காயங்களும், கழுத்தில் இரண்டு முதல் மூன்று காயங்கள் இருப்பதை பார்த்தோம்.

கொலை:

போஸ்ட்மார்ட்டத்தை பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், சில புகைப்படங்களை மட்டுமே எடுக்குமாறு உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். எனவே, அவர்களின் உத்தரவுப்படி நாங்கள் செய்தோம். சுஷாந்தின் உடலை முதன்முறையாகப் பார்த்தபோது, ​​அது தற்கொலையல்ல, கொலை என உணர்கிறேன் என்று சீனியர்களிடம் உடனடியாக தெரிவித்தேன். நாங்கள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன்.

இருந்தாலும், சீக்கிரம் படங்களை க்ளிக் செய்து, உடலை போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி என் சீனியர்கள் என்னிடம் சொன்னார்கள். எனவே, இரவில்தான் பிரேதப் பரிசோதனை செய்தோம்" என்றார். சுஷாந்த்சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த அறையில் இருந்தவரின் தகவல் தற்போது பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
Paris Olympics Paris 2024: பாரீஸ் ஒலிம்பிக்..கடந்த முறை பதக்கம் வென்ற எத்தனை வீரர்கள் இந்த முறை களம் இறங்குகிறார்கள்? முழு விவரம்!
Paris Olympics Paris 2024: பாரீஸ் ஒலிம்பிக்..கடந்த முறை பதக்கம் வென்ற எத்தனை வீரர்கள் இந்த முறை களம் இறங்குகிறார்கள்? முழு விவரம்!
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget