மேலும் அறிய

நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?

பொதுமக்களை தொடர்ந்து விமர்சிக்கும் வகையில் பேசி வரும் திமுக-வினர் மீது மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த திமுக-விற்கு விஜய்யின் தவெக பேரதிர்ச்சி அளித்தது. திமுக-வின் தோல்வியைக் காட்டிலும் கொளத்தூரில் அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது பெரும் வேதனையை திமுக-வினருக்கு ஏற்படுத்தியது.

நல்ல சாவே வராது:

இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக-வின் முக்கிய தலைவர்கள், திமுக ஆதரவாளர்கள் பல இடங்களில் பொதுவெளியில் பொதுமக்களை வஞ்சிக்கும் விதமாக தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, சைதாப்பேட்டை தொகுதியில் அவர் செய்தது போல யாரும் செய்தது இல்லை. கலைஞரே முதலமைச்சராக இருந்தார். அவர் கூட அந்த டைம் பெரிய மருத்துவமனை கொண்டு வர முடியவில்லை.

இங்கே பக்கத்தில் ஆலந்தூரில் இருப்பவர்களுக்கு பெரிய வசதியாக இருந்தது. அந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், அவங்க சொந்தக்காரர்கள் வாக்களித்து இருந்தாலே ஜெயிச்சுருப்பாரு. அவனுங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்றார்.

குவியும் கண்டனங்கள்:

கருணாநிதி காலம் முதலே திமுக-வில் முக்கிய தலைவராக திகழும் ஆர்எஸ்பாரதி இப்படி பேசியிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் ஏற்கனவே பல முறை இவ்வாறு பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். திமுக-வின் தோல்விக்கு பிறகு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொளத்தூர் தொகுதி மக்களை கேடு கெட்ட மக்கள் என்று விமர்சித்துப் பேசியிருந்தார். 

திமுக ஆதரவாளர் நடிகர் சத்யராஜ் மனசாட்சி இருக்கிறதா? என்று கொளத்தூர் மக்களை விமர்சித்துப் பேசியிருந்தார். திமுக ஆதரவாளர்கள் பலரும் தொடர்ந்து இதுபோன்று வாக்காளர்களை விமர்சித்துப் பேசி வருகின்றனர். தற்போது சைதாப்பேட்டையில் மா.சுப்ரமணியன் தோல்வி அடைந்ததற்கு அந்த தொகுதி மக்களை ஆர்எஸ் பாரதி நல்ல சாவே வராது என்று மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

கட்டுப்படுத்துவாரா மு.க.ஸ்டாலின்?

இதேமக்கள்தான் கடந்த தேர்தலில் திமுக-வை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தனர், தற்போது தோல்வி அடையச் செய்யவும் அதை ஏற்பதில் என்ன சிரமம்? என்று திமுக-வினருக்கு பலரும் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் ஏதேனும் குற்றச்சம்பவங்கள், மின்தடை நிகழ்ந்தால் அதுதொடர்பான வீடியோக்கள், பதிவுகளில்  திமுக ஆதரவாளர்கள் பலரும் தவெக-விற்கு ஓட்டுப்போட்டதால் அனுபவியுங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

திமுக-வினர் தொடர்ந்து இதுபோன்று மக்களை வஞ்சிக்கும் வகையில் பேசி வந்தால் அவர்களுக்கு எதிராகவே மக்களை இன்னும் வலுவாக திருப்பும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர். மக்களை தொடர்ந்து விமர்சி்த்து திமுக மூத்த தலைவர்கள் பலரும் பேசி வருவதற்கு அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியையும் பலரும் முன்வைத்து வருகின்றனர்.

கொளத்தூர் தொகுதியில் அடைந்த தோல்வியையும், திமுக தோல்வியையும் அவரே ஏற்று மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என்று பதிவிட்ட பிறகும் தொடர்ந்து திமுக-வினர் மக்களை வஞ்சித்துப் பேசி வருவதற்கு கட்சி பாரபட்சமின்றி பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Embed widget