மேலும் அறிய

S.Ve.Sekhar: அமீர் விவகாரத்தில் ஞானவேல் வருத்தம் தெரிவித்திருக்க கூடாது - எஸ்.வி.சேகர் காட்டம்

அமீர் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும் என்பதை இயக்குநரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

அமீர் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும் என்பதை இயக்குநரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் கடந்த ஒருவாரமாக பருத்திவீரன் படம் தொடர்பான பல கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 16 ஆண்டுகளுக்கு முன் வெளியான அப்படம் தொடர்பாக இயக்குநர் அமீரும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் மாறி மாறி குற்றம் சாட்டினர். இதில் ஞானவேல் அமீரை தரக்குறைவாக விமர்சிக்க, அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதனால் சமுத்திரகனி, சசிகுமார், சுதா கொங்காரா, சினேகன், பொன்வண்ணன், பாரதிராஜா, கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலரும் ஞானவேல்ராஜாவை கண்டித்தனர். 

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஞானவேல் ராஜா, அதில் அமீரை தரக்குறைவாக நேர்காணல் ஒன்றில் பேசியதற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினைகள் உண்மை என்கிற ரீதியில் அந்த அறிக்கை இருந்ததால் மீண்டும் சர்ச்சை எழுந்தது. ஞானவேல் வருத்தம் தெரிவித்த அறிக்கைக்கு, நடிகர் சசிகுமார் கடும் கண்டனம் தெரிவித்தார். 

இதற்கிடையில் நேற்று சென்னை வடபழனி பிரசாத் லேப்பில், ”எமகாதகன்” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அமீர் - ஞானவேல் இடையேயான பிரச்சினை குறித்து பேசினார். 

அப்போது, “எனக்கு சினிமாவில் ரொம்ப பிடிச்சது அமீர் தான். இஸ்லாமியரான அவர் தன்னுடைய சொந்த பெயரை மறைத்துக் கொள்ளாததால் அவரை எனக்கு பிடிக்கும். சில பேர் சினிமாவில் பெயரை மாற்றிக் கொள்வார்கள். அது தேவையே இல்லை. சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட சினிமாவில் சமீபத்தில் நடைபெற்ற அமீர் - ஞானவேல்ராஜா பிரச்சினை ஏற்பட்டிருக்க கூடாது. ஒரு தயாரிப்பாளரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் இருக்கலாம். ஆனால் அதை கிரியேட்டராக இருக்கும் இயக்குநர் தான் ஸ்க்ரீனுக்கு கொண்டு வருகிறார். படம் வந்து ஜெயிச்ச பிறகு, 10 வருஷம் கழிச்சி அதைப் பற்றி தப்பா பேசுறது சரியான விஷயம் கிடையாது. 

ஞானவேல்ராஜா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். வருத்தம் தெரிவித்திருக்க கூடாது. நமக்கு பிடிச்சதை செய்தால் அவரை ஆஹா ஓஹோ என பேசலாம். பிடிக்காததை செய்தால் அவரை பொதுவெளியில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது தவறான விஷயம். மேலும் மன்னிப்பு கேட்டதை விட அந்த நேர்காணலில் தெரிவித்த கருத்துகள் தான் பேசப்படும் என்பதால் நியாயமாக ஞானவேல்ராஜா அமீர் பற்றிய பேசிய அந்த நேர்காணலை நீக்கம் செய்ய சொல்லியிருக்க வேண்டும். அதுதான் சரியான முறை” எனவும் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: Bigg Boss 7 tamil: தன் பெயரை தமிழில் தப்பாக எழுதிய ஜோவிகா.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..வைரல் வீடியோ..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE : குடையோடு வெளிய வாங்க..! 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Mumbai Indians: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
Latest Gold Silver Rate: வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து
Embed widget