மேலும் அறிய

"உரிமையுள்ள திரியில் எரிந்தால் தீபம்; இல்லாவிட்டால்..." : காமத்துக்கு கவிநயமாக பதிலளித்த கவிஞர் வைரமுத்து

மனிதனின் காமம் என்பது உரிமையுள்ள திரியில் எரிந்தால் தீபம் போல் ஒளி வீசும். அதுவே உரிமையில்லா இடத்தில் எரிந்தால் பாவம் வந்து சேரும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

மனிதனின் காமம் என்பது உரிமையுள்ள திரியில் எரிந்தால் தீபம் போல் ஒளி வீசும். அதுவே உரிமையில்லா இடத்தில் எரிந்தால் பாவம் வந்து சேரும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியிலிருந்து..

நான் ஆச்சர்யமான மனிதனாகப் பார்க்கப்படுவதாகச் சொல்கிறீர்கள். நான் தோய்வு, ஓய்வு இல்லாமல் இன்னும் இன்னும் வீரியத்துடன் இயங்க என்னக் காரணம் எனக் கேட்கிறீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது தமிழ். உண்மையில் நான் ஒரு வெறும் கம்பி. அந்தக் கம்பிக்குள் தமிழ் என்ற மின்சாரம் செல்கிறது. தமிழ் வீரியமானது. அதனால், சில லட்சம் கிலோவாட் மின்சாரம் பாய்கிறது. அதனால் நான் வீரியமாக இருக்கிறேன். மேலும், நான் நானாக இருக்கிறேன். நான் உழைக்கிறேன். அதனால் நான் உயிர்ப்புடன் இருக்கிறேன்.
இந்தத் தமிழ் என்பது சுவாசம் போல், இதயத் துடிப்பு போல் தொடர்ச்சியானது. நான் தமிழை சுவாசிக்கிறேன். அதனால் வாழ்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் நேர மேலாண்மையில் கோட்டை விடுகின்றனர். நேரத்தை கையாள திட்டமிடுதல் அவசியம். நேரம் தான் பணம், செல்வம், ஒழுக்கம், செல்வாக்கு, மரியாதை. நான் கலைஞரைப் பார்க்க நேரம் கேட்டு அவர் அதற்காக காலை 9.30 மணியை ஒதுக்கியிருந்தால். அதற்காக திட்டுமிடுவேன். எனது வீட்டுக்கும் கலைஞர் வீட்டுக்கும் 8 கி.மீ தூரம் தான் தொலைவு. அதை அடைய 30 நிமிடம் போதும் என்று வழிகாட்டி சொல்லும். ஆனால், நாம் 50 நிமிடங்கள் முன்னால் செல்வேன். ஒருவேளை போக்குவரத்து நெரிசல், வேறு இடர்பாடு ஏற்பட்டால் என்று திட்டமிட்டு 20 நிமிடங்கள் முன்னர் செல்வேன். குறித்து நேரத்துக்கு தாமதித்துப் போவது இழிவு. அதேபோல் குறித்த நேரத்துக்கு முன்பே சென்று காத்திருப்பது உன்னை நீயே அவமரியாதை செய்வதற்குச் சமம். 9.30 மணி சந்திப்புக்கு 9.27க்கு நுழைவதே தெளிவு. 


மனித வாழ்வில் சோம்பேறித்தனம் இழப்பைத் தரும். மதன் கார்க்கிக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் நீ சூரியனுக்கு முன்பு எழுகிறவனாக இரு. அப்படியென்றால் நீ சூரியவனை ஜெயிக்கிறவனாக இருப்பாய் என்றேன். ஏனெனில் அதிகாலை நேரம் தான் நாம் சிந்திக்கும் நேரம். அதிகாலையில் எழுகிறவன் இரவில் ஒழுக்கமாக இருக்கிறான் என்று அர்த்தம்.  சிந்திப்பதற்கு அதிகாலை பொழுது, மனிதர்களை சந்திப்பதற்கு பகல் பொழுது.

அதேபோல்,  பசி உடம்புக்கு நேர்ந்தாக வேண்டிய அறிவியல் உணர்வு. பசியில்லாவிட்டால் ஆரோக்யம் இருக்காது. பசி இருந்தால் தான் சுறுசுறுப்பாக இருப்பான். பசி இருக்கும்வரை தான் உழைப்பான். பசி எப்படி முக்கியமோ வாழ்க்கைக்கு பயமும் முக்கியம். இதற்கு வள்ளுவர் வாக்கே பொறுத்தமானது. அவர், அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சல் அறிவார் தொழில் என்று கூறியிருக்கிறார். அதுபோல் அச்சப்பட வேண்டியது எதுவென்று பகுப்பாய்வு செய்யாவிட்டால் வாழ்வு வசப்படாது.

மூன்றாவது விஷயம் காமம். மனிதனின் காமம் என்பது உரிமையுள்ள திரியில் எரிந்தால் தீபம் போல் ஒளி வீசும். அதுவே உரிமையில்லா இடத்தில் எரிந்தால் பாவம் வந்து சேரும்.

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget