மேலும் அறிய

Paruthiveeran Row: பருத்திவீரன் வழக்கு..இப்படித்தான் சூர்யா பெயர் சேர்க்கப்பட்டது - காரணத்தை உடைத்த அமீர்

Paruthiveeran: இயக்குநர் அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி 100 நாட்களைக் கடந்து ஓடிய படம் பருத்திவீரன்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிலும் தற்போது பேசப்பட்டு வரும் விஷயம் 17 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் அமீரின் பருத்திவீரன் படம் தொடர்பாகத்தான்.17 வருடங்களுக்கு முன்னர் வெளியான இந்த படத்தின் பின்னணியில் இப்படியான பிரச்னைகள் இருப்பது தற்போது கிளம்பியுள்ள புகைச்சலுக்குப் பின்னர்தான் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த நடிகர் கார்த்தியின் 25 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அமீர் வரவில்லை. இதற்கான காரணம் குறித்து அமீரிடம் கேட்கப்பட்டபோது அழைப்பு இல்லை என்பது போன்ற பதில் அளித்திருந்தார். கார்த்தியின் முதல் திரைப்படத்தினை இயக்கி அவருடைய நடிப்பு பயணத்தினை பெரும் வெற்றியுடன் தொடக்கி வைத்த அமீருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா என்ற கேள்வி கோலிவுட் கடந்து பேசப்பட்டு வருகின்ற விசயமாக மாறியது. 

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் ஸ்டியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் பேட்டி அமீரை கார்னர் செய்வதுபோல் இருக்க, அமீர் தனது தரப்பில், “பருத்திவீரன் உருவான காலத்தில் உடன் இருந்து, தான் பட்ட இன்னல்களை பார்த்தவர்கள் அமைதியாக இருப்பது மிகவும் வருத்தத்தை தருகின்றது” என்பது போன்ற அறிக்கை வெளியிட்டார். அதுவரை அமீரும் ஞானவேல் ராஜாவும் மாறி மாறி பேசிக்கொண்டு இருந்தவர்கள் வரிசையில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களான சசிகுமார், சமுத்திரகனி மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் ஞானவேல் ராஜா செய்தது தவறு, பொது வெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என அறிக்கைகளை வெளியிட்டனர்.

அதேபோல் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கரு. பழனியப்பனும் அமீர் பக்கம் நின்றனர். இந்த அறிக்கைகளுக்குப் பின்னர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிக்கின்றேன் என அறிக்கை விட்டார். ஆனால் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக சிவக்குமார் தரப்பில் இருந்தோ, கார்த்தி மற்றும் சூர்யா தரப்பில் இருந்தோ இதுவரை ஒருவரும் வாய் திறக்கவில்லை.

இதற்கு சமுத்திரகனி, “ வருத்தம் தெரிவிக்கின்றேன் என்ற சீனுக்கே இடம் இல்லை. பொது வெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும். அமீருக்கு நியாமாக வந்து சேரவேண்டிய பணத்தினை ஒரு பைசா பாக்கி இல்லாமல் கொடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில்தான் பருத்திவீரன் படம் தொடர்பாக அமீர் தொடுத்த வழக்கில் நடிகர் சிவக்குமார், அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி பெயர் எதற்காக சேர்க்கப்பட்டது? பிரச்னை முழுக்க முழுக்க ஞானவேல் ராஜாவினால்தான் என்றால் எதற்காக வழக்கில்  சிவக்குமார், சூர்யா பெயரைச் சேர்க்கவேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழுப்பட்டது. 

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அமீர் தற்போது பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். அதில் ”தயாரிப்பாளர் சங்கத்தில் என்னிடமிருந்து படத்தை எழுதி வாங்கி அவர்களிடம் கொடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.  நான் நீதிமன்றம் செல்கிறேன் என்றேன். அதற்கு, தயாரிப்பாளர் சங்கத்தை மீறி நீதிமன்றம் போவியா என கேட்டார்கள். சங்கம் நேர்மையாக இருந்தால் நான் ஏன் நீதிமன்றம் போகப்போறேன் என்று சொல்லிவிட்டு வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில் சூர்யா, சிவக்குமார் ஆகியோர்களின் பெயர்களை சேர்க்க வேண்டாம் என நான் எனது வழக்கறிஞரிடம் சொன்னேன். ஆனால் அவர்தான் என்னுடைய விருப்பம் இல்லாமலேயே அவர்களது பெயர்களை சேர்த்துவிட்டார்" என அந்த பேட்டியில் கூறியுள்ளார். 


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch Live: ரசிகர்களுக்காக, நான் சினிமாவிலிருந்து விலகுகிறேன்... போங்க பேசிய விஜய்
Jana Nayagan Audio Launch Live: ரசிகர்களுக்காக, நான் சினிமாவிலிருந்து விலகுகிறேன்... போங்க பேசிய விஜய்
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
Embed widget