மேலும் அறிய

Ilaiyaraaja: அரைவேக்காடு நெட்டிசன்களே! இளையராஜா கேட்கும் ராயல்டி பற்றி என்ன தெரியும்! விஷயம் இதுதான்!

Ilaiyaraaja Copy Rights Issue: இளையராஜா மேற்கொண்டுள்ள தனது இசைக்கான காப்புரிமை விவகாரம் பேசுபொருளாகி வரும் நிலையில், உண்மையில் ஏமாறுவது யார், ஏமாற்றுவது யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Ilaiyaraaja Copy Rights Issue: இசைக்கான காப்புரிமை விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், சட்டம் சொல்வது என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா காப்புரிமை முறையீடு:

இசை எனும் வார்த்தை பூவுலகில் இருக்கும் வரை, இசைஞானி இளையாராஜா என்றொரு பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அந்த அளவிற்கு தனது தேனிசை மூலம், தலைமுறைகளை கடந்த ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். காலத்தை கடந்தும் கொண்டாடும் வகையிலான அவரது பாடல்கள் தான், துவண்டு கிடக்கும் வேளைகளில் நமக்கான உற்சாக டானிக்காவும் உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக இளையராஜாவின் காப்புரிமை விவகாரம் என்பது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. தனது பாடல்களை பயன்படுத்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் அனுப்புவதன் மூலமும் இளையராஜா அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகிறார். இதனால் நெட்டிசன்கள் இரு தரப்பாக பிரிந்து, தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

சிலர் நியாயமான கருத்துகளை கூறினாலும், பலர் இளையராஜாவை தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர்.  குறிப்பாக, ”ஹலோ இளையராஜா ஆஃபீஸா? எங்க ஏரியாலா  கோயில் திருவிழாவுல ரேடியோ செட்டுக்கார அண்ணே வெறும் இளையராஜா பாட்டா போடுறாரு சார், காதுகுத்து விழாவுலா இளையராஜா பாட்டா? இருடா இளையராஜா சார்ட போட்டு கொடுக்கிறேன், பாத்ரூம்ல அவர் பாட்ட பாடக்கூட பயமா இருக்கு” என்பது போன்ற மீம்ஸ்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. இதுபோக, இளையராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையை கூட அலசி ஆராய்வதாக, பல மோசமான ரைட்-அப்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாடல்களுக்கான காப்புரிமை சொல்வது என்ன?

ஒரு படத்திற்கான இசையமைப்பாளரை, தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து ஒப்பந்தம் செய்கிறார். அதன்படி இசையமைப்பாளர் வழங்கும் பாடல் மற்றும் பின்னணி இசையை,  ஒரு குறிப்பிட்ட படத்தில் தனக்குத் தேவையான இடத்தில் பயன்படுத்த மட்டுமே தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு. அதை ஒரு நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் விற்றாலும், அந்தப் படத்தின் பெயரில் மட்டுமே லாபங்களை அனுபவிக்க முடியும். அதைத்தாண்டி மற்ற படங்களிலோ, அதனை ரீமிக்ஸ் செய்து வேறிடங்களிலோ பயன்படுத்த உரிமை கிடையாது. சர்வதேச காப்புரிமை சட்டமும் இதைத்தான் சொல்கிறது.

ஏமாற்றப்பட்ட இளையராஜா..!

தற்போதைய சூழலில் இசையமைப்பாளர்கள் ஒரு படத்தில் எத்தனை முறை தங்கள் பாடல் வர வேண்டும், எந்த இடத்தில் வரவேண்டும், எத்தனை ஆண்டுக்காலம் அதனைப் பயன்படுத்தலாம் என்பதை ஒப்பந்தத்தில் தெளிவாகப் போட்டுக் கொள்கிறார்கள். ஒப்பந்தப்படி கணிசமான ராயல்டியையும் கட்டாயம் வசூலித்து வருகின்றனர். ஆனால் இளையராஜா இப்படியான ஒரு டிஜிட்டல் வளர்ச்சியை அந்தக் காலத்தில் எதிர்பார்க்காத காரணத்தால், அவர் சில இடங்களில் ஏமாற்றப்பட்டுள்ளார்.  ஒரு சில நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு அவர் கொடுத்த உரிமையை, காலம் முழுவதற்குமான உரிமையாக எடுத்துக் கொண்டுள்ளார்கள். இது காப்புரிமை நியதிக்கு எதிரானது. அதன்படி, தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றன. உதாரணமாக, உரிய அனுமதியின்றி யாரேனும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சொந்தமான இசையை வணிக நோக்கில் பயன்படுத்திவிட்டால், உடனடியாக அவருக்கு அதிகபட்சமாக லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. 

பணத்தை குவிக்கும் இளம் இசையமைப்பாளர்கள்:

இன்றைய தேதிக்கு சொற்ப படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களே, ராயல்டி மற்றும் காப்புரிமை மூலம் ஒவ்வொரு மாதமும் கணிசமான வருவாயை ஈட்டி வருகின்றனர். சுமார் 4500 பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் சம்பாத்தியத்தை விட, சில நூறு பாடல்களைப் படைத்த இசையமைப்பாளர் அதிகம் சம்பாதிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நீதிமன்றத்துக்கு செல்லாமலே அவர்களுக்கு இந்த வருவாய் கிடைக்கிறது. அப்படி தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தொகையை கேட்பதை குறிப்பிட்டு தான், பெருந்தன்மை இல்லையா? பேராசையா ? என்று அரைவேக்காட்டுத்தனமாக சிலர் இளையராஜாவை வசைபாடுகிறார்கள். 

இளையராஜாவிற்கு பேராசையா?

 இளையராஜா தன் உரிமைக்காக மட்டும் தான் வழக்கு நடத்துகிறாரா? என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது. தனிநபர் திறமையையும், உழைப்பையும் சுரண்டும் ஒட்டுமொத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவே அவர் போராடி வருகிறார்.  ஒருவேளை தான் இந்த சட்டப் போராட்டத்தில் வென்றால், அதன்மூலம் அவருக்கு புதிய வருமானம் வந்தாலும் அதைத் திரையிசைக் கலைஞர்களின் சங்கத்துக்கே முழுமையாக செல்லும்படி எழுதித் தந்துள்ளார். அவரின் வாரிசுகளுக்குக் கூட தரவில்லை. ஆனால், இதை கூட அறியாத சில அதிமேதாவிகள், இளையாராஜாவை மிகவும் சிறுமைப்படுத்தி எழுதுகின்றனர்.

காப்புரிமைச் சட்டத்தின் பலன்கள் பற்றியும், இளையராஜாவின் போராட்டத்திற்கான உண்மையான நோக்கமும் அறியாமல் பலரும் இளையராஜாவை இணையதளங்களில் கடுமையாக விமர்சித்தாலும் இரவின் தனிமையிலும், சிலரின் நினைவிலும், சில மோசமான தருணங்களிலும் நம்மை நாமே தேற்றிக் கொள்ள தேடிச் செல்லும் இடமாக இளையராஜாவின் இசையே உள்ளது. கொண்டாட்டத்தை தர எத்தனை இசையமைப்பாளர்களின் இசைகள் இருந்தாலும், நம்மை நாமே தேற்றிக் கொள்ள நமக்கு ஆறுதல் சொல்ல இளையராஜாவின் இசை மட்டுமே நமக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Thalapathy Vijay: “நியாயம் ஜெயிக்கும்.. நாங்கள் உன் பக்கம்” - விவகாரத்து வழக்கில் விஜய்க்கு பிரபலங்கள் ஆதரவு!
Thalapathy Vijay: “நியாயம் ஜெயிக்கும்.. நாங்கள் உன் பக்கம்” - விவகாரத்து வழக்கில் விஜய்க்கு பிரபலங்கள் ஆதரவு!
இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளேன்..வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்
இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளேன்..வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்
மாஸ் ஹீரோ வேணாம் நல்ல மனசு இருந்தால் போதும்...நடிகர் விமல் ஓப்பன் டாக்
மாஸ் ஹீரோ வேணாம் நல்ல மனசு இருந்தால் போதும்...நடிகர் விமல் ஓப்பன் டாக்
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Khamenei Dead: “காமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
“காமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
Embed widget