மேலும் அறிய

Director Marimuthu: அன்று அப்பா இறந்தும் அழாத மாரிமுத்து.. இன்று அவரது மறைவுக்கு அழும் லட்சக்கணக்கான ரசிகர்கள்..

வாழ்க்கையில் எது நடந்தாலும் நிதர்சனமான ஒன்றாக தான் பார்ப்பேன் என மறைந்த இயக்குநர் மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

வாழ்க்கையில் எது நடந்தாலும் நிதர்சனமான ஒன்றாக தான் பார்ப்பேன் என மறைந்த இயக்குநர் மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

உதவி இயக்குநராக சினிமா வாழ்க்கையை தொடங்கி, இணை இயக்குநர், இயக்குநர் என சினிமாவில் படிப்படியாக வளர்ந்தவர் மாரிமுத்து. தொடர்ந்து நடிகராக ரசிகர்களிடத்தில் பரீட்சையமான அவர், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்த மாரிமுத்து, திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று (செப்டம்பர் 8) உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் பலரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இப்படியான நிலையில் மாரிமுத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன. 

அதில் ஒரு நேர்காணலில் பேசிய மாரிமுத்து, "நான் பிறந்தது தேனி மாவட்டம் வருசநாடு என்னும் கிராமத்தில் உள்ள பசுமலைத்தேரி 15 வீடுகள் கொண்ட குக்கிராமத்தில் தான் பிறந்தேன். நான் பிறக்கும்போது எங்கள் கிராமத்தில் மின்சாரம் கிடையாது. 15 கி.மீ.,க்கு பள்ளிக்கூடம் கிடையாது. பஸ் வருசநாடு வரை தான் செல்லும் அதன்பிறகு 4 கி.மீ, வயல், மேடு, குளம் உள்ளிட்டவற்றை கடந்து தான் செல்ல வேண்டும். வருசநாடு வந்து நான் பேப்பர் படிப்பேன். தமிழ்மொழி, எழுத்து மீது இருந்த பற்று தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளேன். நான் 10ஆம் வகுப்பு படிக்கும்போது தான் கரண்ட் வந்துச்சுன்னா பாத்துகோங்க. எனக்கு படிப்பு மேல ஒரு பிடிப்பு இருந்துச்சு. அதில் உறுதியாக இருந்தேன்" என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து நீங்கள் வாழ்க்கையில் கதறி அழுத தருணம் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு ‘இதுவரை நான் வாழ்க்கையில் அழுதது கிடையாது. எங்க அப்பா இறந்த அப்பகூட அழுகை வரல. என்னை எல்லாரும் கல்மனசுக்காரன் என சொல்வாங்க. இனிமேலும் எனக்கு அழுகுறதுக்கான வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல. எது நடந்தாலும் நிதர்சனமான ஒன்றாக தான் பார்ப்பேன். அப்பா இறந்துட்டாரு, அவருக்கு மூச்சு நின்னு போச்சு, அவரை எடுத்துக் கொண்டு போய் நெருப்புல வச்சி எரிக்கப்போறோம். சாம்பலா மேல புகையா போகப்போறாரு. எனக்கு அப்பா வாழ்ந்துட்டாரு, சாக வேண்டியது தானேன்னு தான் எனக்கு தோணுச்சு. ஆனால் உள்ளுக்குள்ளே கொஞ்சம் உதறல் இருந்துச்சு. எவ்வளவு பெரிய கஷ்டத்துலேயும் நான் அழுதது கிடையாது. அது இயற்கையாகவே எனக்கு அமைந்தது” என மாரிமுத்து தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து சினிமா விமர்சனம் பண்ணுபவர்கள், படைப்பை விமர்சனம் செய்யாமல் தனிமனித விமர்சனம் செய்கிறார்கள். அப்படி பண்ணாதீர்கள். தரமான விமர்சனத்தை பண்ண வேண்டும் என அட்வைஸ் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். 


மேலும் படிக்க: Marimuthu: ஜோதிடத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்தாரா?.. வதந்திகளை பரப்பாதீர்கள் என பலரும் வேண்டுகோள்...!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget