Nayanthara: சம்பளத்தை வாரி கொடுத்த தயாரிப்பாளர்..! சிரஞ்சீவிக்கு ஜோடி போட டபுள் ஓகே சொன்ன நயன்தாரா!
மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி, இயக்கத்தில் நடிக்க உள்ள Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில், பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள Mega157-ஆவது திரைப்படம். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த படத்தில், சிரஞ்சீவி முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் பேனரில் சாஹு கரபதி, சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், ஸ்ரீமதி அர்ச்சனா வழங்குகிறார்.
மிகப்பெரிய வணிக ரீதியான பொழுதுபோக்கு படங்களை எடுப்பதில் திறமையானவராக அறியப்பட்ட அனில் ரவிபுடி, மீண்டும் ஒருமுறை அதை சாதித்து காட்டியுள்ளார். சங்கராந்திகி வாஸ்துன்னம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அனில் ரவிபுடி Mega157 படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் இன்று, சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிப்பதை உறுதி செய்யும் விதமாக, அறிமுக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நயன்தாரா தனது ஊழியர்களுடன் தெலுங்கில் பேசுவதும், கார் பயணத்தின் போது சிரஞ்சீவியின் கிளாசிக் பாடல்களுக்கு வைப் செய்வதும், ஸ்கிரிப்டைப் படிப்பதும், சிரஞ்சீவியின் வசனங்களில் ஒன்றைப் பேசுவதும், என அனைத்தும் ஒரு பிரகாசமான நகைச்சுவை தன்மையுடன் காட்டப்படுகிறது. கடைசியில், அனில் ரவிபுடி அவருடன் சேர்ந்து படத்தில் நயன்தாரா நடிக்கும் செய்தியை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் காட்ஃபாதர் படங்களில் நயன்தாரா சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்ததை தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்போது மீண்டும் Mega157-ஆவது படத்தில் இணைய உள்ளார். மேலும் இந்த படத்தில், நயன்தாராவுக்காக அனில் ரவிபுடி ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை எழுதியுள்ளார், ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் மறக்கமுடியாததாக பாத்திரமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா ஜோடி திரையில் வருவது பார்வையாளர்களுக்கு ஒரு காட்சி விருந்தாக இருக்கும் என்பது உறுதி.

படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஆரம்ப அறிவிப்பு முதல் தொழில்நுட்பக் குழுவினரின் அறிமுகம் மற்றும் நயன்தாரா நாயகியாக அறிவிக்கப்படுவது வரை, புரமோசன் ஒவ்வொன்றும் தனித்துவமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இப்படத்திற்கு சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார், பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார், தம்மிராஜு படத்தொகுப்பை கவனிக்கிறார். எழுத்தாளர்கள் எஸ் கிருஷ்ணா மற்றும் ஜி ஆதி நாராயணா ஆகியோர் திரைக்கதையில் பணிபுரிகின்றனர், எஸ் கிருஷ்ணா நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். ஏஎஸ் பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்தப் படம் 2026 சங்கராந்திக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இயக்குநர் அனில் ரவிபுடி "சங்கராந்திகி ரஃபதின்செத்தம்" என்ற புதிய விளம்பர வீடியோ மூலம் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக மிகப்பெரிய தொகையை நயன்தாரா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.





















