மேலும் அறிய

Sushant Singh Rajput: பாலிவுட்டில் ஒரு பக்க சார்பு... சுஷாந்தை பலி கொடுத்துவிட்டோம்...நடிகர் நவாசுதீன் கவலை!

சுஷாந்த் சிங் ராஜ்புத் என்கிற விலைமதிப்பில்லாத நடிகரை நாம் பலிகொடுத்துவிட்டோம் என சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து நடிகர் நவாசுதீன் சித்திக் கவலை தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் என்கிற விலைமதிப்பில்லாத நடிகரை நாம் நெப்போட்டிசத்திற்கு பலிகொடுத்துவிட்டோம் என நடிகர் நவாசுதீன் சித்திக் கவலை தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் தனது திறமையால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு சிறந்த நடிகர் என்கிற அடையாளத்தைப் பெற்றவர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக். அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பாலிவுட்டில் நெப்போடிஸம் குறித்தும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் நவாசுதின் சித்திக்.

”நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன். எனக்கு கிடைத்த வாய்ப்பு இன்னொருவருக்கு கிடைக்குமா என்றால் சந்தேகம் . நான் வாழ்நாள் முழுக்க துணை நடிகனாக மட்டுமே நடிக்கும் சாத்தியங்களோடுதான் என் கரியர் தொடங்கியது. நான் பாடிபில்டர் கிடையாது, நான் அழகான தோற்றம் கொண்டவன் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

எனது நடிப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பாலிவுட்டில் நான் பிழைத்து வருகிறேன். ஒரு படத்தில்  நான் இருந்தால் நிச்சயம் ஏதாவது ஒன்றை புதிதாக அதில் நிகழ்த்தியியிருப்பேன் என ரசிகர்கள் நம்பும் அளவிற்கு எனது கரியரை வளர்த்துள்ளேன். பணத்துக்காக எல்லா படங்களிலும் நான் நடிக்கத் தொடங்கினால் ரசிகர்கள் என்னை வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால் நான் செலக்டிவான கதைகளில் நடிக்கிறேன்.

பாலிவுட்டில் நெப்போடிசத்தால் நான் எந்த பாதிப்புகளையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் அப்படி ஒன்று இல்லையென்று சொல்ல மாட்டேன். சுஷாந்த் சிங் ராஜ்புத் எனும் விலைமதிப்பில்லாத நடிகரை நாம் நெப்போடிசத்திற்கு பலிகொடுத்துவிட்டோம். எத்தனையோ திறமையான நடிகர்கள் வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வேளை அவர்கள் பிரபலங்களின் வாரிசுகளாக இருந்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகள் எளிதாகக் கிடைத்திருக்கும். ஆனால் ஒன்று  நிச்சயம், யாருடைய திறமையும் யாராலும் ஒளித்துவைக்க முடியாது. போராடினால் நிச்சயம் ஒருநாள் ஜெயிக்க முடியும்.

வேறு சில வகைகளில் நானும்  நிறைய அவமானங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். உணவு வேளைகளில் ஒதுக்கிவைக்கப் பட்டிருக்கிறேன். ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே பெரிய நடிகர்களையும் யுனிட்டை சேர்ந்தவர்களையும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வைக்கிறது. இங்கு எல்லோரும் சமம் என உணர வைத்தால் போதுமானது.” எனப் பேசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Embed widget