மேலும் அறிய

Sushant Singh Rajput: பாலிவுட்டில் ஒரு பக்க சார்பு... சுஷாந்தை பலி கொடுத்துவிட்டோம்...நடிகர் நவாசுதீன் கவலை!

சுஷாந்த் சிங் ராஜ்புத் என்கிற விலைமதிப்பில்லாத நடிகரை நாம் பலிகொடுத்துவிட்டோம் என சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து நடிகர் நவாசுதீன் சித்திக் கவலை தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் என்கிற விலைமதிப்பில்லாத நடிகரை நாம் நெப்போட்டிசத்திற்கு பலிகொடுத்துவிட்டோம் என நடிகர் நவாசுதீன் சித்திக் கவலை தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் தனது திறமையால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு சிறந்த நடிகர் என்கிற அடையாளத்தைப் பெற்றவர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக். அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பாலிவுட்டில் நெப்போடிஸம் குறித்தும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் நவாசுதின் சித்திக்.

”நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன். எனக்கு கிடைத்த வாய்ப்பு இன்னொருவருக்கு கிடைக்குமா என்றால் சந்தேகம் . நான் வாழ்நாள் முழுக்க துணை நடிகனாக மட்டுமே நடிக்கும் சாத்தியங்களோடுதான் என் கரியர் தொடங்கியது. நான் பாடிபில்டர் கிடையாது, நான் அழகான தோற்றம் கொண்டவன் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

எனது நடிப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பாலிவுட்டில் நான் பிழைத்து வருகிறேன். ஒரு படத்தில்  நான் இருந்தால் நிச்சயம் ஏதாவது ஒன்றை புதிதாக அதில் நிகழ்த்தியியிருப்பேன் என ரசிகர்கள் நம்பும் அளவிற்கு எனது கரியரை வளர்த்துள்ளேன். பணத்துக்காக எல்லா படங்களிலும் நான் நடிக்கத் தொடங்கினால் ரசிகர்கள் என்னை வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால் நான் செலக்டிவான கதைகளில் நடிக்கிறேன்.

பாலிவுட்டில் நெப்போடிசத்தால் நான் எந்த பாதிப்புகளையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் அப்படி ஒன்று இல்லையென்று சொல்ல மாட்டேன். சுஷாந்த் சிங் ராஜ்புத் எனும் விலைமதிப்பில்லாத நடிகரை நாம் நெப்போடிசத்திற்கு பலிகொடுத்துவிட்டோம். எத்தனையோ திறமையான நடிகர்கள் வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வேளை அவர்கள் பிரபலங்களின் வாரிசுகளாக இருந்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகள் எளிதாகக் கிடைத்திருக்கும். ஆனால் ஒன்று  நிச்சயம், யாருடைய திறமையும் யாராலும் ஒளித்துவைக்க முடியாது. போராடினால் நிச்சயம் ஒருநாள் ஜெயிக்க முடியும்.

வேறு சில வகைகளில் நானும்  நிறைய அவமானங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். உணவு வேளைகளில் ஒதுக்கிவைக்கப் பட்டிருக்கிறேன். ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே பெரிய நடிகர்களையும் யுனிட்டை சேர்ந்தவர்களையும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வைக்கிறது. இங்கு எல்லோரும் சமம் என உணர வைத்தால் போதுமானது.” எனப் பேசியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget