மேலும் அறிய

MR Radha : பகுத்தறிவு பிரச்சாரகர்.. பல்துறை வித்தகர்.. எம்.ஆர்.ராதாவின் 45-வது நினைவு நாள் இன்று

நாடகச் செயல்பாடுகளில் பிற்போக்குத்தனத்தை விமர்சித்து நாடகக் கலையேற்றுவது எம்.ஆர்.ராதாவின் வழக்கம். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், கவலைப்படாமல் தன் பிரச்சார நோக்கத்தைத் தொடர்ந்தார்.

சுதந்திர போராட்ட வீரரின் மகனாக பிறந்து, முற்போக்கு நாடகச் செயல்பாடுகளின் மீது, தான் கொண்டிருந்த தீரா காதலின் காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி, நாடக செயல்பாடுகளிலும் சினிமா உலகிலும், என்று இரண்டு துறையிலும் பெரும் வீச்சோடு சாதித்ததோடு, பெரியாரின் போர்வாளாக விளங்கிய நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 45-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

செப்டம்பர் 17-ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டின் பகுத்தறிவு ஒளியாக, எல்லைச்சாமியாக காத்து நிற்கும், தந்தை பெரியாரின் பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் அவரது போர்வாளாக வாழ்ந்து மறைந்தவர் எம். ஆர். ராதா. நாடக உலகின் தன்னிகரற்ற ஸ்டார் கலைஞன், நம்பிக்கை நல்கும் தனிப்பெரும் கலைஞன், பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களுக்கான பிரச்சார பீரங்கி, எவரின் கருத்துக்களுக்கும் வளைந்து கொடுக்காத திட மனதுக்காரர், அரசியலில் கலகக்காரர்.. அவர்தான் எம்.ஆர்.ராதா.

எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில், துப்பாக்கியில் சுட்டுவிட்டு, தன்னை தானும் சுட்டுக்கொண்டார் என்ற ஒரு தகவல் பரவியது. நாடு போற்றும் கலைஞன் சுடப்பட்டதாக வந்த தகவலில், எல்லோரும் அல்லோலகல்லோலப்பட்டார்கள். இதற்காக 7 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையையும் அவர் அனுபவித்தார். பிறகு சிறையில் இருந்து வந்தபின்னர், நண்பர்கள் இருவரும் துப்பாக்கியால் விளையாடிக் கொண்டிருந்தோம். என்ன வேதனை இது.. துப்பாக்கி கண்டுபிடிச்சு இருக்காங்க.. நானும் சாகல, ராமச்சந்திரனும் சாகல எல்லாமே டூப்ளிகேட்.. என்று நகைச்சுவையாக கூறியிருந்தார் என்னும் தகவல் உள்ளது.

எம்.ஆர்.ராதாவிற்கு ஏட்டுக்கல்வி அவ்வளவாக இல்லையென்றும், பெரிய பெரிய வசனமாக இருந்தாலும் யாரையாவது வாசிக்கச் சொல்லி அதை அவர் மனப்பாடம் செய்துகொண்டு, தனக்கேற்றாற்போல தன் சுருதி, ஏற்ற இறக்கங்களுடன், தன் கருத்துக்களையும் சேர்த்து மேம்படுத்திப் பேசுவார் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. ரத்த கண்ணீர், பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, பாலும் பழமும், பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா, பாவமன்னிப்பு, தாய் சொல்லை தட்டாதே, பெரிய இடத்துப் பெண் உள்ளிட்ட 118 படங்களில் தனது திறமையான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஆர்.ராதா.

1963ஆம் ஆண்டில் 22 படங்களில் நடித்து சாதனை படைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களை, அன்பின் மதிப்பின் காரணமாக கலைஞர்.கருணாநிதி என்று பட்டம் கொடுத்து, முதலில் அழைத்தது எம்.ஆர். ராதாதான்.

மூடப்பழக்கங்களை, பிற்போக்குச் சிந்தனையை வலுவுடன் இடித்துரைத்து, கிண்டல், கேலி, நக்கல், நையாண்டியுடன் அவர் பேசிய பகுத்தறிவு கருத்துக்கள், பொதுமக்களிடமும் அச்சிந்தனையைக் கொண்டு வந்தது. இதிகாசங்களையும், புராண கதைகளையும், மத சடங்குகளையும், பிற்போக்குத்தனத்தையும் நாடகங்களையும் விமர்சிப்பது பெரியாரின் வழக்கம். அதை அப்படியே நாடகச் செயல்பாடுகளில் விமர்சித்து நாடகக் கலையேற்றுவது எம்.ஆர்.ராதாவின் வழக்கம். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் தன் பிரச்சார நோக்கத்தைத் தொடர்ந்து செய்தபடியே இருந்தார்.

1979-ஆம் ஆண்டு வெளிவந்த பஞ்சாமிர்தம் திரைப்படம்தான் அவரது கடைசியான படைப்பாக அமைந்தது. நாடகம், அரசியல், பிரச்சாரம் என்று அதிவேகமாக செயல்பட்ட எம்.ஆர்.ராதாவுக்கு உடல்நலம் குன்றியது. மஞ்சள் காமாலை நோயும் தாக்கவே உடல்நிலை மிகவும் மோசமானது. பெரியாரின் போர்வாளாக விளங்கிய எம்.ஆர்.ராதா, பெரியாரின் 100-வது பிறந்த நாளான 1979-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி மரணமடைந்தார். இன்று அவரது நினைவைப் போற்றுவோம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Embed widget