மேலும் அறிய

Lyricist Yugabharathi: வித்யாசாகரிடம் முதல் சந்திப்பே மோதல்தான்.. காதல் கவிஞர் யுகபாரதி சொன்ன பழைய கதை!!

யுகபாரதி ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.

யுகபாரதி ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.

காதல் பிசாசே, வசியக்காரி, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், தாவணி போட்ட போன்ற காதல் பாடல்களுக்கு வரி கொடுத்தவர் என்பது மட்டுமே நமக்கு அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால் அவர் அதையும் தாண்டி நல்ல பேச்சாளர். நல்ல அரசியல் விமர்சகம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அப்படியொரு மேடையில் அவர் வெளுத்து வாங்கிய பேச்சு தான் இது:

நான் இந்த புத்தகக் காட்சிக்குள் வரும் போது சிறுவர்கள் ஒரு மேடையில் யானோ அரசன், யானே கள்வன் எனப் பேசிக் கொண்டிருந்தனர். இந்த மண் அரசன் தவறு செய்தால் உடனே அவனை பழிக்கும் தட்டிக்கேட்கும் என்று நினைத்து வியந்தேன். ஆனால் உண்மையில் இன்று யானே அரசன், யானே கள்வன் என்று கொள்ளையடித்துச் சுத்தும் அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். நான் அரசியல் பேசவில்லை. இதை அரசியல் பேச்சாக நீங்க எடுத்துக் கொள்ளக்கூடாது. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்று என்பார்கள். அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டங்கள் எல்லாம் தமிழக அரசியல் எந்தப் பாதையில் செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


Lyricist Yugabharathi: வித்யாசாகரிடம் முதல் சந்திப்பே மோதல்தான்.. காதல் கவிஞர் யுகபாரதி சொன்ன பழைய கதை!!

வித்யாசாகர் பற்றிய ரகசியம்..

கவிஞர் யுகபாரதி அதிகமான பாடல்களை எழுதியதே இசையமைப்பாளர் வித்யாசாகருக்குத் தான். ஆனால் அவர்களின் முதல் சந்திப்பே மோதலில் தான் நடந்துள்ளது. அது பற்றி யுகபாரதி கூறுகையில், லிங்குசாமி என்னை வித்யாசாகரிடம் அழைத்துச் சென்றார். அவர் என்னுடைய கவிதை தொகுப்புகளை அசட்டை செய்தார். என்னுடைய பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடலை கிண்டல் செய்தார்.

ஒரு காதல் கடித பாடல் எழுதுங்கள் அதில் அன்புள்ள என்ற வார்த்தை மட்டும் வரவே கூடாது என்று சொல்லியனுப்பினார். நான் லிங்குசாமியிடம் அவர் நான் இந்தப் பாடலை எழுதக் கூடாது என நினைக்கிறார் என்று கூறினேன். ஆனால் லிங்கு என்னை சமாதானப்படுத்தினார். அவர் ஏதோ எதிர்பார்க்கிறார். நீ முயற்சி செய் என்றார். அப்போது நான் எழுதியதுதான் காதல் பிசாசே பாடல். அந்தப் பாடல் முழுவதும் நான் வித்யாசாகரை தான் திட்டியிருப்பேன். அதைப் படித்துவிட்டு என்னை வெகுவாகப் பாராட்டிய அவர் எனது எல்லா பாடல்களுக்கும் நீ தான் கவிஞர் என்றார்.

...காதல் பிசாசே காதல்
பிசாசே ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை காதல் பிசாசே
காதல் பிசாசே நானும்
அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகளும் பரவாயில்லை
கனவென்னை கொத்தி தின்றால்
பரவாயில்லை இரவுகளும்
பரவாயில்லை இம்சைகளும்
பரவாயில்லை இப்படியே
செத்துப் போனால் பரவாயில்லை...

இது தான் அந்தப் பாடல்.

என்னை கடிந்து கொண்டதால் தான் நான் அவ்வளவு சிறப்பாக எழுதினேன் என்று நான் நம்புகிறேன். நம் மீது அக்கறை உள்ளவர்கள் நம்மிடம் சொல்லும் வார்த்தைகளை நாம் சரியாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.  ஒரு வார்த்தையை நாம் என்னவாக புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் அடிப்படையான விஷயமே இருக்கிறது. அதை நாம் என்னவாக புரிந்து கொண்டு எதிர்வினையாற்றுகிறோம் என்பதில் தான் நம் வளர்ச்சியே இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget