மேலும் அறிய

Lyricist Yugabharathi: வித்யாசாகரிடம் முதல் சந்திப்பே மோதல்தான்.. காதல் கவிஞர் யுகபாரதி சொன்ன பழைய கதை!!

யுகபாரதி ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.

யுகபாரதி ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.

காதல் பிசாசே, வசியக்காரி, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், தாவணி போட்ட போன்ற காதல் பாடல்களுக்கு வரி கொடுத்தவர் என்பது மட்டுமே நமக்கு அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால் அவர் அதையும் தாண்டி நல்ல பேச்சாளர். நல்ல அரசியல் விமர்சகம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அப்படியொரு மேடையில் அவர் வெளுத்து வாங்கிய பேச்சு தான் இது:

நான் இந்த புத்தகக் காட்சிக்குள் வரும் போது சிறுவர்கள் ஒரு மேடையில் யானோ அரசன், யானே கள்வன் எனப் பேசிக் கொண்டிருந்தனர். இந்த மண் அரசன் தவறு செய்தால் உடனே அவனை பழிக்கும் தட்டிக்கேட்கும் என்று நினைத்து வியந்தேன். ஆனால் உண்மையில் இன்று யானே அரசன், யானே கள்வன் என்று கொள்ளையடித்துச் சுத்தும் அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். நான் அரசியல் பேசவில்லை. இதை அரசியல் பேச்சாக நீங்க எடுத்துக் கொள்ளக்கூடாது. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்று என்பார்கள். அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டங்கள் எல்லாம் தமிழக அரசியல் எந்தப் பாதையில் செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


Lyricist Yugabharathi: வித்யாசாகரிடம் முதல் சந்திப்பே மோதல்தான்.. காதல் கவிஞர் யுகபாரதி சொன்ன பழைய கதை!!

வித்யாசாகர் பற்றிய ரகசியம்..

கவிஞர் யுகபாரதி அதிகமான பாடல்களை எழுதியதே இசையமைப்பாளர் வித்யாசாகருக்குத் தான். ஆனால் அவர்களின் முதல் சந்திப்பே மோதலில் தான் நடந்துள்ளது. அது பற்றி யுகபாரதி கூறுகையில், லிங்குசாமி என்னை வித்யாசாகரிடம் அழைத்துச் சென்றார். அவர் என்னுடைய கவிதை தொகுப்புகளை அசட்டை செய்தார். என்னுடைய பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடலை கிண்டல் செய்தார்.

ஒரு காதல் கடித பாடல் எழுதுங்கள் அதில் அன்புள்ள என்ற வார்த்தை மட்டும் வரவே கூடாது என்று சொல்லியனுப்பினார். நான் லிங்குசாமியிடம் அவர் நான் இந்தப் பாடலை எழுதக் கூடாது என நினைக்கிறார் என்று கூறினேன். ஆனால் லிங்கு என்னை சமாதானப்படுத்தினார். அவர் ஏதோ எதிர்பார்க்கிறார். நீ முயற்சி செய் என்றார். அப்போது நான் எழுதியதுதான் காதல் பிசாசே பாடல். அந்தப் பாடல் முழுவதும் நான் வித்யாசாகரை தான் திட்டியிருப்பேன். அதைப் படித்துவிட்டு என்னை வெகுவாகப் பாராட்டிய அவர் எனது எல்லா பாடல்களுக்கும் நீ தான் கவிஞர் என்றார்.

...காதல் பிசாசே காதல்
பிசாசே ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை காதல் பிசாசே
காதல் பிசாசே நானும்
அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகளும் பரவாயில்லை
கனவென்னை கொத்தி தின்றால்
பரவாயில்லை இரவுகளும்
பரவாயில்லை இம்சைகளும்
பரவாயில்லை இப்படியே
செத்துப் போனால் பரவாயில்லை...

இது தான் அந்தப் பாடல்.

என்னை கடிந்து கொண்டதால் தான் நான் அவ்வளவு சிறப்பாக எழுதினேன் என்று நான் நம்புகிறேன். நம் மீது அக்கறை உள்ளவர்கள் நம்மிடம் சொல்லும் வார்த்தைகளை நாம் சரியாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.  ஒரு வார்த்தையை நாம் என்னவாக புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் அடிப்படையான விஷயமே இருக்கிறது. அதை நாம் என்னவாக புரிந்து கொண்டு எதிர்வினையாற்றுகிறோம் என்பதில் தான் நம் வளர்ச்சியே இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Embed widget