மேலும் அறிய

‛வள்ளுவர்-வாசுகி தெரியாமல் திட்டுவாங்கினேன்...’ வாலியை கோபப்படுத்திய தேவாவின் ஆரம்ப காலம்!

‛அடப்பாவி... உனக்கே வள்ளுவன் வாசுகி தெரியாதா....’ என கோபத்தின் உச்சிக்கு போய்விட்டார் வாலி.

வாலிப கவிஞர் வாலி பற்றி பேசாதவர்கள் இல்லை. இசையமைப்பாளர் தேவா, தனது வாலியுடனான அனுபவம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்திருந்த தகவல்கள், தற்போது வீடியோக வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டி இதோ அப்படியே...


‛வள்ளுவர்-வாசுகி தெரியாமல் திட்டுவாங்கினேன்...’ வாலியை கோபப்படுத்திய தேவாவின் ஆரம்ப காலம்!

‛‛வயது ஏறினால் வார்த்தை தடுமாறும் என்பார்கள். வயது ஏறினாலும் வார்த்தை மெருகேறும் என்பதற்கு வாலி அண்ணன் உதாரணம். ரொம்ப வருசத்திற்கு அப்புறம் ஒரு படத்திற்கு வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டு தயாரிப்பாளர்கள். ஒரு தயாரிப்பாளருக்கு என்னை பிடிக்கிது. இன்னொரு தயாரிப்பாளருக்கு என்னை பிடிக்கவில்லை. தத்தகாரத்தில் நான் பாடும் போது என்னை எப்படியாவது என்னை தூக்கலாம் என அந்த பிடிக்காத தயாரிப்பாளர் எவ்வளவோ முயற்சிக்கிறார். நாளை வாலி வருவார், அப்புறம் நீ காலி என அந்த தயாரிப்பாளர் சொன்னார். மறுநாள் வாலி அண்ணன் வந்தார். நான் ட்யூன் போட்டேன். ‛ஆரம்பம் நல்லாருக்கு... வயலெல்லாம் நெல்லா இருக்கு...’ என அவர் எழுதியதும், தயாரிப்பாளர் முகம் மாறிவிட்டது. வயலெல்லாம் நெல்லா இருக்கு என எழுதி என் வீட்டு அரிசிக்கு உத்தரவாதம் தந்தவர் வாலி அண்ணேன். 

ஒரு புது இயக்குனர் ஒருவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு. அவர் புதுமுக இயக்குனர். அவருடன் எக்கச்சக்க உதவி இயக்குனர்கள் வந்தார்கள். வாலி அண்ணன் தான் பாட்டு எழுதியிருந்தார். இயக்குனரிடம் அந்த பாடல் தரப்பட்டது. அவர் படித்தார். அவருக்கு பின்னால், அவரது உதவி இயக்குனர்கள் ஒவ்வொருவராக படித்தார்கள். அதை பார்த்து வாலி அண்ணனுக்கு கடும் கோபம். ‛யோவ்... நான் என்ன என் வீட்டு பத்திரமா கொடுத்திருக்கேன். பாட்டு தானய்யா கொடுத்திருக்கேன்..’ என்று கோபமாக கேட்டார். அதற்கு தயங்கிக் கொண்டே அந்த இயக்குனர் கூறினார். ‛இல்லை சார்... நம்ம ஹீரோ பேரு சிவா... ஹீரோயின் பேரு பாக்கிய லட்சுமி... ஆனால் நீங்க பாட்டில் வள்ளுவன், வாசுகினு... யாரு பேரையோ எழுதியிருக்கீங்க...’ என்றார். 


‛வள்ளுவர்-வாசுகி தெரியாமல் திட்டுவாங்கினேன்...’ வாலியை கோபப்படுத்திய தேவாவின் ஆரம்ப காலம்!

அவ்வளவு தான், வாலி அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. ‛யோவ் தேவா... வள்ளுவன், வாசுகி யாருன்னு கூட தெரியாத ஆளுங்க கூட எப்படியா வேலை பார்க்குறனு... கோபப்பட்டார்’ வாலியண்ணா. நான் என்ன பண்ணிட்டேன், ‛ஆமாண்ணே... அவங்களுக்கு தெரியாதுண்ணே... அவங்க வெளியூர் அண்ணா...’ என்று கூறி, நான் மாட்டிக்கொண்டேன். ‛அடப்பாவி... உனக்கே வள்ளுவன் வாசுகி தெரியாதா....’ என கோபத்தின் உச்சிக்கு போய்விட்டார் வாலி. அவர் கோபம், வெளியில் சென்று எச்சில் துப்பிவிட்டு, அது காயம் வரையில் தான். அதன் பின் ரிலாக்ஸ் ஆகிவிடுவார். 

வாலி சார் நிறைய சென்டிமெண்ட் பார்ப்பார். எந்த பாடலாக இருந்தாலும் சுபமாக முடிப்பார். கவிஞர்களின் கர்நாடக சங்கீதம் தெரிந்த ஒரே கவிஞர் வாலி தான். பல நேரங்களில் நானே அவரிடம் ராகங்களை கேட்டு தெரிந்திருக்கிறேன். அவ்வை சண்முகியில் அவர் வரும் முன், வேலை பற்றி சலித்துக் கொண்டு நாங்களாக ஒரு வரி போட்டு வைத்திருந்தோம். அவர் வந்தார்... ‛ஏன்ய்யா... எல்லாரும் வேலை பார்க்கத்தானய்யா இருக்கோம். ஜாலியா வேலை பாருங்கய்யா... என, ஆம்பளைக்கும் வேலை, பொம்பளைக்கும் வேலை...’ என மாற்றியவர் வாலி. வாலி எப்போதும் பெருமையானவர்,’’ என தேவா அந்த மேடையில் வாலி பற்றி மனம் திறந்து வாழ்த்தினார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

தலைப்பு செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல்.. சிக்கலில் பிரபல இயக்குநர்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா?
நடிகைகளிடம் அத்துமீறல்.. சிக்கலில் பிரபல இயக்குநர்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா?
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
ரெட்ரோ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்? உண்மையை உடைத்த கார்த்திக் சுப்பராஜ்!
ரெட்ரோ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்? உண்மையை உடைத்த கார்த்திக் சுப்பராஜ்!
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Today: காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
Top 10 News Headlines: தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
Tamilnadu Roundup: செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
Strait of Hormuz India: ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
Embed widget