மேலும் அறிய

‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ - பாடல் வரிகளின் வற்றாத ஜீவநதி நா.முத்துக்குமாருக்கு பிறந்த நாள்

தமிழின் தலைமகன், பாடல் வரிகள் வற்றாத ஜீவநதி, மகள்களை பெற்ற அப்பாக்களுக்காக சர்வதேச தேசியக்கீதத்தை பெற்றெடுத்தவன், ஆனந்த யாழை மீட்டிய பாட்டுக்காரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


”ஆரிரோ ஆராரிரோ, ஆனந்த யாழை மீட்டியவன், தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன், கனா காணும் காலங்கள், காதல் வைத்து, மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகே” போன்ற பாடல் வரிகளால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நா. முத்துக்குமாருக்கு இன்று பிறந்த நாள். 

1975ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்த நா. முத்துக்குமார் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். சிறுவயதிலேயே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால் என்னமோ, வருங்காலத்தில் அவரையே ஒரு புத்தகமாக அனைவரையும் படிக்க வைத்து விட்டார். சாதிக்க வேண்டுமென சென்னை வந்த முத்துக்குமாருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தது பாலுமகேந்திரா தான். பாலு மகேந்திரவின் உதயாளராக இருந்த முத்துக்குமாருக்கு வெற்றிமாறனின் நட்பு கிடைத்துள்ளது. 

வெயிலில் அழகை பார்த்தவன்

தமிழ் திரையுலகில் தனது கவிதைகள் மூலமும்,  எதார்த்தமான பாடல் வரிகள் மூலமும் அனைவரது மனதையும் கொள்ளையடித்த நா. முத்துக்குமார் தேசிய விருதுகளை வாங்கி குவிந்தார். அழகை மட்டுமே கவிஞர்கள் கொண்டாடி கொண்டிருந்த காலத்தில், சேவல் படத்தில் “ மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகு” என வெயிலிலும் அழகை பார்த்தவர். எப்பொழுதும் மழலைக்கு தாயின் தாலாட்டு மட்டுமே கேட்டு பழக்கப்பட்டவர்களுக்கு, தந்தையாலும் தாலாட்டு பாட முடியும் என்பதை தெய்வமகள் படத்தின் மூலம் ‘ ஆரிரோ ஆராரிரோ’ பாடி உணர்த்தி இருப்பார். 

தங்க மீன்கள் படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று ஒவ்வொரு மகளையும் அப்பாக்களால் கொண்டாட வைத்தார். தாயையும், தாயின் தியாகம் மற்றும் அன்பையும் கொண்டாடி எடுக்கப்பட்ட படங்களை பார்த்து கொண்டிருந்த தருணத்தில், கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் “ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற பாடல்கள் வரிகள் மூலன் தந்தையின் அன்பை ஒவ்வொருவரின் ஆழ்மனதில் சென்று உணர வைத்தார். 

வேடிக்கை பார்ப்பவன்

தமிழ் திரையுலகில் காதலையும் தாண்டி தந்தை, தாய், மகளின் அன்பை எதார்த்தமான வரிகளில் காட்டி உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர். நா. முத்துக்குமார் மறைந்தாலும் “அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன்” புத்தகங்கள் மூலம் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

இசைக்கு பாடலால் உயிர் கொடுத்தவன்

நா. முத்துக்குமாரின் பிறந்த நாளான இன்று, ”தமிழின் தலைமகன், பாடல் வரிகள் வற்றாத ஜீவநதி, மகள்களை பெற்ற அப்பாக்களுக்காக சர்வதேச தேசியக்கீதத்தை பெற்றெடுத்தவன், ஆனந்த யாழை மீட்டிய பாட்டுக்காரன், இசைக்கு தனது பாடல் வரிகளால் உயிர் கொடுத்தவன், பறவையே எங்கு இருக்கிறாய்..? உள்ளிட்ட வரிகள் மூலம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கவிதையில் வாழும் கலைஞனுக்கு ஏபிபி சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துகள். 

தலைப்பு செய்திகள்

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தில் விஜய்.. லண்டன் சந்திப்பு காட்சிகள் இடம்பெறுகிறதா?
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தில் விஜய்.. லண்டன் சந்திப்பு காட்சிகள் இடம்பெறுகிறதா?
ரூ.4.75 லட்சத்தில் உருவான படம்..‘16 வயதினிலே படத்தில் கமல், ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரூ.4.75 லட்சத்தில் உருவான படம்..‘16 வயதினிலே படத்தில் கமல், ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
டி ராஜேந்தர் இசையில் முதல்முறை பாடிய இளையராஜா!
டி ராஜேந்தர் இசையில் முதல்முறை பாடிய இளையராஜா!
“காதல் மட்டும் போதாது..” 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து சூர்யா - ஜோதிகா சொல்வது என்ன?
“காதல் மட்டும் போதாது..” 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து சூர்யா - ஜோதிகா சொல்வது என்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
TVK vs DMK:
TVK vs DMK: "காசுக்கு வர்ற கூட்டத்துக்கும், அன்பால வர்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியலயா?" திமுக-வுக்கு தவெக கேள்வி
குலுங்கப்போகும் மதுரை.. நாளை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு - தூங்காநகரத்திற்கு போக இத்தனை பஸ்ஸா?
குலுங்கப்போகும் மதுரை.. நாளை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு - தூங்காநகரத்திற்கு போக இத்தனை பஸ்ஸா?
Paranthaman DMK:
Paranthaman DMK: "நானும் விஜய் ரசிகன்தான்.." முதலமைச்சர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்ட திமுக வேட்பாளர்! கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்!
Nexon New Gen. Launch: மாஸான லுக்குடன் களமிறங்கப் போகும் புதிய தலைமுறை டாடா நெக்ஸான்; மாற்றங்கள் என்ன.? அறிமுகம் எப்போ.?
மாஸான லுக்குடன் களமிறங்கப் போகும் புதிய தலைமுறை டாடா நெக்ஸான்; மாற்றங்கள் என்ன.? அறிமுகம் எப்போ.?
Vaaladi Karthik : ‘அன்பில் மகேஸின் வலதுகரம் - குறி வைத்த போலீஸ்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
‘குறி வைத்த போலீஸ் – அன்பில் மகேஸின் வலதுகரம்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட அறிக்கை..!
Embed widget