மேலும் அறிய

‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ - பாடல் வரிகளின் வற்றாத ஜீவநதி நா.முத்துக்குமாருக்கு பிறந்த நாள்

தமிழின் தலைமகன், பாடல் வரிகள் வற்றாத ஜீவநதி, மகள்களை பெற்ற அப்பாக்களுக்காக சர்வதேச தேசியக்கீதத்தை பெற்றெடுத்தவன், ஆனந்த யாழை மீட்டிய பாட்டுக்காரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


”ஆரிரோ ஆராரிரோ, ஆனந்த யாழை மீட்டியவன், தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன், கனா காணும் காலங்கள், காதல் வைத்து, மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகே” போன்ற பாடல் வரிகளால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நா. முத்துக்குமாருக்கு இன்று பிறந்த நாள். 

1975ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்த நா. முத்துக்குமார் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். சிறுவயதிலேயே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால் என்னமோ, வருங்காலத்தில் அவரையே ஒரு புத்தகமாக அனைவரையும் படிக்க வைத்து விட்டார். சாதிக்க வேண்டுமென சென்னை வந்த முத்துக்குமாருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தது பாலுமகேந்திரா தான். பாலு மகேந்திரவின் உதயாளராக இருந்த முத்துக்குமாருக்கு வெற்றிமாறனின் நட்பு கிடைத்துள்ளது. 

வெயிலில் அழகை பார்த்தவன்

தமிழ் திரையுலகில் தனது கவிதைகள் மூலமும்,  எதார்த்தமான பாடல் வரிகள் மூலமும் அனைவரது மனதையும் கொள்ளையடித்த நா. முத்துக்குமார் தேசிய விருதுகளை வாங்கி குவிந்தார். அழகை மட்டுமே கவிஞர்கள் கொண்டாடி கொண்டிருந்த காலத்தில், சேவல் படத்தில் “ மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகு” என வெயிலிலும் அழகை பார்த்தவர். எப்பொழுதும் மழலைக்கு தாயின் தாலாட்டு மட்டுமே கேட்டு பழக்கப்பட்டவர்களுக்கு, தந்தையாலும் தாலாட்டு பாட முடியும் என்பதை தெய்வமகள் படத்தின் மூலம் ‘ ஆரிரோ ஆராரிரோ’ பாடி உணர்த்தி இருப்பார். 

தங்க மீன்கள் படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று ஒவ்வொரு மகளையும் அப்பாக்களால் கொண்டாட வைத்தார். தாயையும், தாயின் தியாகம் மற்றும் அன்பையும் கொண்டாடி எடுக்கப்பட்ட படங்களை பார்த்து கொண்டிருந்த தருணத்தில், கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் “ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற பாடல்கள் வரிகள் மூலன் தந்தையின் அன்பை ஒவ்வொருவரின் ஆழ்மனதில் சென்று உணர வைத்தார். 

வேடிக்கை பார்ப்பவன்

தமிழ் திரையுலகில் காதலையும் தாண்டி தந்தை, தாய், மகளின் அன்பை எதார்த்தமான வரிகளில் காட்டி உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர். நா. முத்துக்குமார் மறைந்தாலும் “அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன்” புத்தகங்கள் மூலம் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

இசைக்கு பாடலால் உயிர் கொடுத்தவன்

நா. முத்துக்குமாரின் பிறந்த நாளான இன்று, ”தமிழின் தலைமகன், பாடல் வரிகள் வற்றாத ஜீவநதி, மகள்களை பெற்ற அப்பாக்களுக்காக சர்வதேச தேசியக்கீதத்தை பெற்றெடுத்தவன், ஆனந்த யாழை மீட்டிய பாட்டுக்காரன், இசைக்கு தனது பாடல் வரிகளால் உயிர் கொடுத்தவன், பறவையே எங்கு இருக்கிறாய்..? உள்ளிட்ட வரிகள் மூலம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கவிதையில் வாழும் கலைஞனுக்கு ஏபிபி சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துகள். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget