மேலும் அறிய

Veerappan: ‘வீரப்பன் மாட்டிக்கொண்டது இப்படிதான்.. இல்லாவிட்டால் பிடித்திருக்கவே முடியாது’ - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார்..

வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ‘சந்தனக்காடு’ என்ற பெயரில் நெடுந்தொடராகவும், ’வன யுத்தம்’ என்ற பெயரில் சினிமாகவும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வீரப்பன் மட்டும் காட்டை விட்டு வெளியே வராமல் இருந்திருந்தால் பிடித்திருக்கவே முடியாது என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு மிகப்பெரிய அளவிலான இடையூறாக திகழ்ந்தவர் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டுக்குள் மறைந்து வாழ்ந்து வந்த அவர், கொலை, கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களை செய்ததாக குற்றச்சாட்டது. இவர் கண் பார்வை சிகிச்சைக்காக  2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி காட்டை விட்டு வெளியேறிய போது தமிழக காவல்துறையின் அதிரடி படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த அதிரடி படைக்கு முன்னிலை வகித்தவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஆவார். 

வீரப்பனின் வாழ்க்கை வரலாறு 

ஆனால் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ‘சந்தனக்காடு’ என்ற பெயரில் நெடுந்தொடராகவும், ’வன யுத்தம்’ என்ற பெயரில் சினிமாகவும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான நிலையில் ஓடிடி தளங்கள் பெருகி விட்ட நிலையில் பல குற்ற சம்பவங்கள், வரலாற்று நிகழ்வுகள் மீண்டும் ஆவணப்படமாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக பல கோணங்களில் வெளியாகி வருகிறது. 

நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் The Hunt For Veerappan என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தொடங்கி பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், வனத்துறையினர் பார்வை வாயிலாக வீரப்பன் வாழ்க்கை நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதுவே மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து  “கூச முனுசாமி வீரப்பன்” என்ற பெயரில் வீரப்பனின் கதை zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. வீரப்பன் தனது வாழ்க்கையில் செய்த குற்றங்கள், அதற்கான காரணங்கள், வெளியே பரவும் வதந்திகள் குறித்து நக்கீரன் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டிகள் அடங்கிய வீடியோக்கள் என அனைத்தும் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. 

வீரப்பனை பிடித்திருக்கவே முடியாது 

இதனிடையே வீரப்பனை கொன்ற அதிரடிப்படைக்கு தலைமை வகித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அந்த திட்டத்தில் நடந்த சவாலான நிகழ்வுகளை நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், “நான் சென்னை கமிஷனராக இருந்தபோது வீரப்பனை பிடிப்பது தொடர்பாக ஏராளமான ஆபரேஷன்கள் கையில் எடுக்கப்பட்ட நிலையில் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. அப்போது நட்ராஜ் அதிரடிப்படை தலைவராக இருந்தார். நான் 3 முறை அதிரடிப்படையில் இருந்திருக்கிறேன். நாகப்பாவை வீரப்பன் கடத்தி சென்ற போது அதிரடிப்படையினர் காட்டுக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். 

அப்போது வெகு அருகில் வீரப்பன் இருந்து பிடிக்க முடியாமல் போய் விட்டது. காட்டை பொறுத்தவரை நம்மால் எதையும் எளிதாக கண்டறிய முடியாது. ஆனால் வீரப்பனுக்கோ காடு அத்துபடியாக இருந்தது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான் எங்கள் திட்டத்தை காட்டுக்கு வெளியே மாற்றி விட்டோம். வீரப்பன் மட்டும் காட்டை விட்டு வெளியே வராமல் இருந்திருந்தால் நிச்சயமாக பிடித்திருக்கவே முடியாது. இயற்கையாக அவருக்கு ஏதாவது நடந்திருந்தால் மட்டுமே அவர் வெளியே வந்திருப்பார்’ என விஜயகுமார் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்
சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா? வைரல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்
சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா? வைரல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget