மேலும் அறிய

Veerappan: ‘வீரப்பன் மாட்டிக்கொண்டது இப்படிதான்.. இல்லாவிட்டால் பிடித்திருக்கவே முடியாது’ - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார்..

வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ‘சந்தனக்காடு’ என்ற பெயரில் நெடுந்தொடராகவும், ’வன யுத்தம்’ என்ற பெயரில் சினிமாகவும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வீரப்பன் மட்டும் காட்டை விட்டு வெளியே வராமல் இருந்திருந்தால் பிடித்திருக்கவே முடியாது என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு மிகப்பெரிய அளவிலான இடையூறாக திகழ்ந்தவர் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டுக்குள் மறைந்து வாழ்ந்து வந்த அவர், கொலை, கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களை செய்ததாக குற்றச்சாட்டது. இவர் கண் பார்வை சிகிச்சைக்காக  2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி காட்டை விட்டு வெளியேறிய போது தமிழக காவல்துறையின் அதிரடி படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த அதிரடி படைக்கு முன்னிலை வகித்தவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஆவார். 

வீரப்பனின் வாழ்க்கை வரலாறு 

ஆனால் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ‘சந்தனக்காடு’ என்ற பெயரில் நெடுந்தொடராகவும், ’வன யுத்தம்’ என்ற பெயரில் சினிமாகவும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான நிலையில் ஓடிடி தளங்கள் பெருகி விட்ட நிலையில் பல குற்ற சம்பவங்கள், வரலாற்று நிகழ்வுகள் மீண்டும் ஆவணப்படமாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக பல கோணங்களில் வெளியாகி வருகிறது. 

நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் The Hunt For Veerappan என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தொடங்கி பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், வனத்துறையினர் பார்வை வாயிலாக வீரப்பன் வாழ்க்கை நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதுவே மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து  “கூச முனுசாமி வீரப்பன்” என்ற பெயரில் வீரப்பனின் கதை zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. வீரப்பன் தனது வாழ்க்கையில் செய்த குற்றங்கள், அதற்கான காரணங்கள், வெளியே பரவும் வதந்திகள் குறித்து நக்கீரன் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டிகள் அடங்கிய வீடியோக்கள் என அனைத்தும் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. 

வீரப்பனை பிடித்திருக்கவே முடியாது 

இதனிடையே வீரப்பனை கொன்ற அதிரடிப்படைக்கு தலைமை வகித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அந்த திட்டத்தில் நடந்த சவாலான நிகழ்வுகளை நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், “நான் சென்னை கமிஷனராக இருந்தபோது வீரப்பனை பிடிப்பது தொடர்பாக ஏராளமான ஆபரேஷன்கள் கையில் எடுக்கப்பட்ட நிலையில் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. அப்போது நட்ராஜ் அதிரடிப்படை தலைவராக இருந்தார். நான் 3 முறை அதிரடிப்படையில் இருந்திருக்கிறேன். நாகப்பாவை வீரப்பன் கடத்தி சென்ற போது அதிரடிப்படையினர் காட்டுக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். 

அப்போது வெகு அருகில் வீரப்பன் இருந்து பிடிக்க முடியாமல் போய் விட்டது. காட்டை பொறுத்தவரை நம்மால் எதையும் எளிதாக கண்டறிய முடியாது. ஆனால் வீரப்பனுக்கோ காடு அத்துபடியாக இருந்தது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான் எங்கள் திட்டத்தை காட்டுக்கு வெளியே மாற்றி விட்டோம். வீரப்பன் மட்டும் காட்டை விட்டு வெளியே வராமல் இருந்திருந்தால் நிச்சயமாக பிடித்திருக்கவே முடியாது. இயற்கையாக அவருக்கு ஏதாவது நடந்திருந்தால் மட்டுமே அவர் வெளியே வந்திருப்பார்’ என விஜயகுமார் கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Embed widget