மேலும் அறிய

Varichiyur Selvam: ‛விஜய் என்னைப் பார்த்து பயந்தாரு... ரஜினி என் கூ வந்தாரு’ வரிச்சூர் செல்வத்தின் விஐபி அனுபவம்!

‛ரவுடி என்றாலே ஒரு தோரணை இருக்கணும்... அப்ப தான் மதிப்பாங்க... கேட்குற பணத்தை தருவாங்க...’

பிரபல ரவுடியாக அறியப்படுபவர் மதுரை வரிச்சியூர் செல்வம். கொத்து கொத்தாக நகை அணிவது ஏன் என, இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதோ அந்த பேட்டி...

 


Varichiyur Selvam: ‛விஜய் என்னைப் பார்த்து பயந்தாரு... ரஜினி என் கூ வந்தாரு’ வரிச்சூர் செல்வத்தின் விஐபி அனுபவம்!

சுறா படப்பிடிப்பு முடித்துவிட்டு, விஜய் ஏர்போட்டில் இருந்தார். அப்போது, என்னிடம் தகவலை கூறினார்கள் சரி, அவரை பார்க்கலாம் என நானும் அருகில் சென்றேன். இன்னோவா காரில் அமர்ந்து கொண்டு ஹெட் போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்தார் விஜய். நான் இப்போது இருப்பதை விட, இன்னும் பயங்கர தோற்றத்தில் இருப்பேன், முடியெல்லாம் விரித்து போட்டபடி ஒரு மாதிரி இருப்பேன். 

கார் முன்னோடி போய் நின்று, ‛என்னங்க விஜய் நல்லா இருக்கீங்களா...’ என்று கேட்டேன். அவருக்கு என்னை பார்த்ததும் பதட்டமாகிவிட்டது. ‛யார்ர இவன், கழுத்து நிறைய செயின் போட்ட்டு வந்து நிற்கிறான்னு’ அவருக்கு ஒரே அதிர்ச்சி. 

‛என்ன விஜய் சார் நல்லா இருக்கீங்களா... நல்லா நடிக்கிறீங்க விஜய் சார்... ஆனால், வில்லன்களை ரொம்ப அடிக்கிறீங்க... பத்து பதினஞ்சு பேரை அடிக்கிறீங்க... அது எனக்கு பிடிக்கல. அதை மட்டும் குறைச்சுக்கோங்க,’ என்று அவரிடம் கூறினேன். அவருக்கு ஒரே சிரிப்பாகி விட்டது. 

இன்னொரு விசயம் சொல்றேன். மு.க.அழகிரி மகன் திருமணத்தன்று விமானத்தில் சென்றேன். அன்று ரஜினிகாந்த மற்றும் அவரது மனைவி, தனுஷ். தனுஷ் மனைவி, ஒய்ஜி மகேந்திரன், அவரது மனைவி ஆகியோர் என்னுடன் பயணித்தனர். நாங்க 15 பேர் ஒரு பஸ்ஸில் பயணித்தோம். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by மதுரை சீமை (@varichuran_vamsam_)

என்னுடம் சிங்கராஜ் என்ற வழக்கறிஞர் வந்தார். அவர் எங்கள் அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார். அவர் ரஜினி சார் ரசிகர். பாபா படம் வந்த போது எழுந்த பிரச்னையில், மண்டை உடைபட்டவர் சிங்கராஜ். அப்போது ரஜினி சாருக்கு அடையாளம் தெரியவில்லை. ‛சார், இவர் தான் உங்களுக்காக மண்டை உடைபட்டவர்’ என ரஜினி சாரிடம் கூறினேன். 

டக்குனு சிங்கராஜை பிடித்துக் கொண்டார் ரஜினிகாந்த், ‛என்ன சிங்கராஜ் எப்படி இருக்கீங்க...’ என நலம் விசாரித்தவர், என்னைப் பார்த்து, ‛நீங்க யாரு...’ என்று கேட்டார். நான் யாருனு கேட்டதற்கு காரணம், நான் அணிந்திருந்த நகை மற்றும் என்னுடைய தோரணை தான் காரணம். ‛எம்.பி., ரித்தீஷ் உடைய பிரதர்,’ என்று என்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். ‛என்ன பண்றீங்க...’ என்று என்னிடம் கேட்டார். விமானத்தை விட்டு இறங்கி, பஸ்ஸில் ஏறும் 3 நிமிடத்தில் இவை அனைத்தும் நடக்கிறது. 

விமான நிலையத்தில் ரஜினி சாரை வரவேற்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் காத்திருந்தார்கள். அந்த கேப்பில் தான் இவை அனைத்தும் நடக்கிறது. ‛நான் என்ன செய்கிறேன்’ என ரஜினி சார் கேட்க, ‛பைனான்ஸ் பண்ணிட்டு இருக்கேன் சார்...’ என்று நான் கூறினேன். இப்படி எல்லா பிரபலங்களுடனும் நான் பயணம் பண்ணியிருக்கிறேன். 

எனக்கு கதாநாயகனை பிடிக்காது; வில்லன்கள் தான் பிடிக்கும். கதாநாயகன் ஒரு பொண்ணுக்காக விடிய விடிய காதல் பண்ணுவார்; அது நமக்கு பிடிக்காது. நாலு பெண்களோடு வில்லன் சந்தோஷமா இருப்பார். கடைசியின் அவர் இறந்துவிடுவார் தான், ஆனால் இருக்கும் வரை ஜாலியாக இருப்பார் வில்லன். அதனால் வில்லன்களை தான் எனக்குப் பிடிக்கும். 

இருக்கும் வரை சந்தோசமாக இருக்க வேண்டும் என்பது தான் என் பாலிசி. என்னோட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமானால், மிருகன் படத்தில் நடித்த ஆதி தான் சரியாக இருப்பார். அவர் தான், நல்ல கட்டுசட்டா இருப்பார். தோராணை தான் என்றைக்கும் பேசும். ஒரு சாதாரண ரவுடியிடம் போனால் அவன் 50 ஆயிரம் ரூபாய் கேட்பான். அதுவே ஒரு தோரணையான ரவுடியிடம் சென்றால் 5 லட்சம் ரூபாய் கேட்பான்; கண்ணை மூடி கொடுத்துட்டு போய்டுவாங்க. வயிறும் வாயும் ஒட்டிப் போயிருந்தால், ரவுடியை கூட மதிக்கமாட்டாங்க. 

இப்போ டிஜிபி சாரை பாருங்க. செஞ்சு வெச்ச மாதிரி இருக்காரு. அவரை பார்த்த போலீஸ்காரங்களுக்கு ஒரு ஆசை வரும்,’’ என்று அந்த பேட்டியில் வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget