மேலும் அறிய

Vaali Birthday: லேசா... லேசா... நீ இல்லாமல் வாழ்வது லேசா? 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கவிஞர் வாலியின் பிறந்தநாள்!

வாலிபக் கலைஞன் என்று அழைக்கப்படும் பாடலாசிரியர் வாலியின் 92ஆவது பிறந்தநாள் இன்று!

வாலி

1931இல் அக்டோபர் 29 ஆம் தேதி சீனிவாச ஐயங்கார் மற்றும் பொன்னம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் கவிஞர் வாலி. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். பப்ளிசிட்டீஸ் என்கிற விளம்பர நிறுவனத்தைத் தொடங்கிய வாலி, அது வணிக ரீதியாக பலனளிக்காததால் சோர்வடைந்தார்.

இதனைத் தொடர்ந்து நாடகக் கலையால் ஈர்க்கப்பட்ட வாலி, நாடகங்கள் இயக்கத் தொடங்கினார். தளபதி என்கிற நாடகத்தை எழுதி இயக்கினார் வாலி. இதனைத் தொடர்ந்து சினிமாவின் மேல் ஆர்வம் கொண்டு சென்னை வந்து சேந்தார்.

1959ஆம் ஆண்டு அழகர் மலைக் கள்வன் படத்தில் தனது முதல் பாடல் வரிகளை எழுதினார். அன்று புகழ்பெற்ற பாடலாசிரியராக இருந்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எம்.ஜி.ஆரால் அங்கீகரிக்கப்பட்டு பாடலாசிரியராக உருவானார் வாலி.

வாலி எழுதிய ‘நான் ஆனையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்ந்தது. அவரது சமகாலத்தில் அனைத்து இசையமைப்பாளர்களும் கொண்டாடி வந்த கண்ணதாசனுக்கு போட்டியாக வாலி உருவெடுக்கத் தொடங்கினார். எம்.ஜி ஆர் படங்களில் நாம் கேட்கும் பெரும்பாலான கருத்துப் பாடல்கள் வாலி எழுதியவை.  கண்ணதாசனுக்கு நிகரான பாடலாசிரியராக வாலி இருந்ததற்கு காரணம் இசையில் அவருக்கு இருந்த ஆளுமை தான். 

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் படங்களுக்கு பாடல்கள் எழுதியதில் தொடங்கி  சிவகார்த்திகேயன் , சித்தார்த் ஆகிய இன்றைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் பாடல்களை எழுதியுள்ளார் வாலி. கிட்டதட்ட நான்கு தலைமுறையாக பாடல்கள் எழுதி வந்த வாலி, சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அரசியல், தத்துவம் , காதல், ஆன்மிகம் என அனைத்து தரப்புகளில் இருந்தும் இருந்து தன்னுடைய பாடல் வரிகளால் தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்தி இருக்கிறார் வாலி.

பாடல்கள் எழுதுவது தவிர்த்து ஓவியம் வரைவதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார் வாலி. காதல் வைரஸ், சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். கலியுகக் கண்ணன் , ஒரு கொடியில் இரு மலர்கள் தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அரசியல் ரீதியாக பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ உள்ளிட்டவர்களுடன் நல்ல நட்பு பாராட்டியும் வந்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வாலி. தொடர்ந்து ஜூலை 18ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி இயற்கை எய்தினார். வாலியின் பாடல்கள் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் இன்று சிலாகிக்கப்படுகின்றன. அம்மா, பொய்க்கால் குதிரை, நிஜகோவிந்தம், பாண்டவர் பூமி என்று அவர் எழுதிய 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் ரசிகர்களால் தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டு வருகின்றன.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget