மேலும் அறிய

Vaali Birthday: லேசா... லேசா... நீ இல்லாமல் வாழ்வது லேசா? 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கவிஞர் வாலியின் பிறந்தநாள்!

வாலிபக் கலைஞன் என்று அழைக்கப்படும் பாடலாசிரியர் வாலியின் 92ஆவது பிறந்தநாள் இன்று!

வாலி

1931இல் அக்டோபர் 29 ஆம் தேதி சீனிவாச ஐயங்கார் மற்றும் பொன்னம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் கவிஞர் வாலி. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். பப்ளிசிட்டீஸ் என்கிற விளம்பர நிறுவனத்தைத் தொடங்கிய வாலி, அது வணிக ரீதியாக பலனளிக்காததால் சோர்வடைந்தார்.

இதனைத் தொடர்ந்து நாடகக் கலையால் ஈர்க்கப்பட்ட வாலி, நாடகங்கள் இயக்கத் தொடங்கினார். தளபதி என்கிற நாடகத்தை எழுதி இயக்கினார் வாலி. இதனைத் தொடர்ந்து சினிமாவின் மேல் ஆர்வம் கொண்டு சென்னை வந்து சேந்தார்.

1959ஆம் ஆண்டு அழகர் மலைக் கள்வன் படத்தில் தனது முதல் பாடல் வரிகளை எழுதினார். அன்று புகழ்பெற்ற பாடலாசிரியராக இருந்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எம்.ஜி.ஆரால் அங்கீகரிக்கப்பட்டு பாடலாசிரியராக உருவானார் வாலி.

வாலி எழுதிய ‘நான் ஆனையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்ந்தது. அவரது சமகாலத்தில் அனைத்து இசையமைப்பாளர்களும் கொண்டாடி வந்த கண்ணதாசனுக்கு போட்டியாக வாலி உருவெடுக்கத் தொடங்கினார். எம்.ஜி ஆர் படங்களில் நாம் கேட்கும் பெரும்பாலான கருத்துப் பாடல்கள் வாலி எழுதியவை.  கண்ணதாசனுக்கு நிகரான பாடலாசிரியராக வாலி இருந்ததற்கு காரணம் இசையில் அவருக்கு இருந்த ஆளுமை தான். 

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் படங்களுக்கு பாடல்கள் எழுதியதில் தொடங்கி  சிவகார்த்திகேயன் , சித்தார்த் ஆகிய இன்றைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் பாடல்களை எழுதியுள்ளார் வாலி. கிட்டதட்ட நான்கு தலைமுறையாக பாடல்கள் எழுதி வந்த வாலி, சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அரசியல், தத்துவம் , காதல், ஆன்மிகம் என அனைத்து தரப்புகளில் இருந்தும் இருந்து தன்னுடைய பாடல் வரிகளால் தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்தி இருக்கிறார் வாலி.

பாடல்கள் எழுதுவது தவிர்த்து ஓவியம் வரைவதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார் வாலி. காதல் வைரஸ், சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். கலியுகக் கண்ணன் , ஒரு கொடியில் இரு மலர்கள் தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அரசியல் ரீதியாக பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ உள்ளிட்டவர்களுடன் நல்ல நட்பு பாராட்டியும் வந்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வாலி. தொடர்ந்து ஜூலை 18ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி இயற்கை எய்தினார். வாலியின் பாடல்கள் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் இன்று சிலாகிக்கப்படுகின்றன. அம்மா, பொய்க்கால் குதிரை, நிஜகோவிந்தம், பாண்டவர் பூமி என்று அவர் எழுதிய 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் ரசிகர்களால் தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Embed widget