சீரியல்ல நடிக்கிற பொண்ணுங்களை தப்பா பேசாதீங்க - ஷபானா ஆர்யன் ஓப்பன் டாக்
நான் செம்பருத்தி சீரியலில் ஆதிக்கு மனைவியாக நடிக்கிறேன். ஆதியின் மனைவி செம்பருத்திதான்

ஷபானா :
ஸீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் அறியப்பட்டவர் நடிகை ஷபானா. மலையாளியான ஷபானாவிற்கு தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் . தங்கள் வீட்டு பெண்ணாகவே ஷபானாவை பாவிக்கும் பல இல்லத்தரசிகளும் உண்டு. ஷபானாவும் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ஆர்யனும் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும் , இருவீட்டாரும் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியேறி இருவரும் நட்புகள் சூழ திருமணம் செய்துகொண்டனர். ஷபானா சமூக வலைத்தளங்களிலும் செம ஆக்டிவ் .
View this post on Instagram
புரிதல் முக்கியம் :
ஷபானா சீரியலில் நடிக்கும் பெண்களை தவறாக பேசாதீர்கள் என நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துக்கொண்டார். " நான் செம்பருத்தி சீரியலில் ஆதிக்கு மனைவியாக நடிக்கிறேன். ஆதியின் மனைவி செம்பருத்திதான் . நான் அப்படியாகத்தான் நடிக்க வேண்டும். ஒரு சீரியல்ல நடிக்கும் பொழுது அங்கு எங்களுக்கு என்ன கேரக்டர் கொடுக்குறாங்களோ அதைத்தான் நாங்க பண்ணுவோம் . அது ரீல்தான் ரியல் இல்லை. நடிகை சித்து விஷயத்துல இப்படிதான் நடந்துச்சு. அந்த சீன்ல உண்மையாகவே அப்படி பண்ணுறீங்களா அப்படி கேட்க எப்படி தோணுது , 100 பேர் இருக்கும் இடத்தில் எப்படி உண்மையாகவே அப்படி நடந்துப்பாங்க. இதை மீடியாவில் இருக்கும் பெண்களின் காதலர்களாக இருந்தாலும் கணவர்களாக இருந்தாலும் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார் ஷபானா.
View this post on Instagram
ஷபானாவின் கணவர் ஆர்யன் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்பது நாம் அறிந்ததே . இந்த நிலையில் மனைவி நடிக்கும் ஸீ தமிழ் பக்கம் ஆர்யனும் களமிறங்கவுள்ளார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















