மேலும் அறிய

Director Marimuthu:”உழைப்பே உயிரை பறித்துவிட்டது"... மறைந்த இயக்குநர் மாரிமுத்துவை நினைத்து மனம் வெதும்பிய சீமான்..!

திரைக்கலை ஆற்றலை முழுவதுமாக பயன்படுத்த முடியாமல் போனது தமிழ் கலைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பேயாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மறைந்தார் மாரிமுத்து:

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று (செப்டம்பர் 8) காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.  இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8) காலை  ‘எதிர் நீச்சல்’ சீரியல்  டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து திடீரென தனக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறி  அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மாரிமுத்து மாரடைப்பு  காரணமாக இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். 

சீமான் இரங்கல்:

அதன்படி, இயக்குநரும், நடிகருமான சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”திரைப்பட இயக்குநர், ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர், என்மீது பேரன்பும் பெரும்பற்றும் கொண்ட என் உயிர்க்கினிய சகோதரர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெரும் மனவேதனையும் அடைந்தேன். தேவர் மகன் திரைப்படம் வெளிவந்தபோது சென்னை உதயம் திரையரங்கத்தில் வாசலில் அண்ணன் அறிவுமதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு முதன் முதலாக சகோதரர் மாரிமுத்துவை சந்தித்த அந்த இரவில், பார்த்து முடித்த பிறகு தேவர் மகன் திரைப்படம் எங்கள் இருவருக்குள்ளும் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கோடம்பாக்கம் வரை விடிய விடிய பேசி நடந்த அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக என் நெஞ்சில் நிழலாடுகிறது.

நான் இயக்கிய முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியில் உதவி இயக்குநராக சிறப்புற பணியாற்றிவர். தீவிரமான இலக்கிய வாசிப்பாளர். ஓவியம் தீட்டுவதுபோல் மிக அழகாக எழுதக்கூடிய திறமைப் பெற்றவர். உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றிய போதும், நடிப்பின் மீதும் தீராக்காதல் கொண்டவர். நடிப்பில் அவருக்கே உரித்தான கம்பீரமான உடல்மொழியும், மதுரை வட்டார வழக்கும் அவருக்கென்று தனித்த அடையாளத்தைப் பெற்று தந்தது. இளமைக்காலத்தில் கிடைக்கப்பெறாத வாய்ப்புகளை எல்லாம் தமது அளப்பரிய கலைத்திறமையின் மூலமும், விடா முயற்சியின் மூலமும் 50 வயதுகளுக்கு பிறகு பெற்று, சின்னத்திரை, வெள்ளித்திரை என்று அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளை தவறவிடாது அதற்கென இரவுபகலாக கடும் உழைப்பினை செலுத்தியவர்.

கலங்கிய சீமான்:

அவரது அசாத்தியமான உழைப்பு கலையின் மீதான அவர் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கான சான்றானபோதும், உடல்நலத்தை கவனிக்காத உழைப்பு அவருடைய உயிரையே பறித்துவிட்டதைத்தான் ஏற்க முடியவில்லை. அவருடைய திரைக்கலை ஆற்றலை முழுவதுமாக பயன்படுத்த முடியாமல் போனது தமிழ் கலைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பேயாகும்.

எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரனாகவே வாழ்ந்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்த அவருடைய புகழ் உச்சத்திற்கு சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில், அப்பா மணிவண்ணன் போல பன்முக திறன் கொண்ட கலைஞராக மென்மேலும் மிளிர்வார் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு தாங்க முடியாத துயரத்தை அளிக்கிறது.  நான் அரசியல்துறைக்கு வந்துவிட்ட பிறகும், பல நேர்காணல்களில் என்மீதான பேரன்பினை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்திய அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்" என்று கூறியிருக்கிறார் சீமான்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
CBE Ring Road: அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா
Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
CBE Ring Road: அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
மருத்துவ கனவை பறித்த நீட்; ஆனா என்ன? 20 வயதில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை- ரூ. 72 லட்சம் ஊதியம்!
மருத்துவ கனவை பறித்த நீட்; ஆனா என்ன? 20 வயதில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை- ரூ. 72 லட்சம் ஊதியம்!
Gaza Tragedy: சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
Embed widget