மேலும் அறிய

AR Murugadoss: "என்னுடைய இந்த நிலைமை.. 100 பேர் போட்ட வாழ்க்கை பிச்சை”.. கண்கலங்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

1947 ஆகஸ்ட் 16  படம் ஏப்ரல் 7 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும், அறிமுக நடிகை ரேவதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

என்னுடைய வாழ்க்கை இந்தளவுக்கு மாறி இருப்பது 100 பேர் எனக்கு கொடுத்த கை, வாழ்க்கைக்கு போட்ட பிச்சை என 1947 ஆகஸ்ட் 16  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். 

1947 ஆகஸ்ட் 16 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “1947 ஆகஸ்ட் 16”. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும், அறிமுக நடிகை ரேவதி ஹீரோயினாகவும் நடித்துள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் என்.எஸ். பொன்குமார்  இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். 

கதை சொன்ன ஏ.ஆர்முருகதாஸ்

இந்நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் தான் கஷ்டப்பட்டு வந்த கதையை சொல்லி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவர் தனது உரையில், “எனக்கு சென்னையில் 60, 70 பேரை மட்டுமே தெரியும். அவர்களை மட்டுமே இந்நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளேன். இவ்வளவு நான் என்மேல் ரசிகர்கள் எவ்வளவு அன்பையும், ஆசீர்வாதத்தையும் வழங்குனீர்களோ அதை இந்த படக்குழுவுக்கும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நான் இந்நிகழ்ச்சிக்கு முதலில் சிவாவை அழைக்க மாட்டேன் என சொல்லிவிட்டேன். நான் கூப்பிட்டு அவர் வரமாட்டேன்னு சொல்லிட்டா எனக்கு வருத்தமா போயிரும் என அப்படி சொன்னேன். இந்த விழாவுக்கு வந்த அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். 

மேலும் , “நான் இந்த படம் தயாரிக்க என்னுடைய உதவி இயக்குநர் பாலாஜி தான் காரணம். இதன் கதையை படித்தவுடன் இந்த படத்தை செய்ய ஒப்புக்கொண்டேன். கௌதம் கார்த்திக் படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஊட்டியில் வளர்ந்த அவருக்கு நம் ஊரின் அணுகுமுறைகள் எல்லாம் தெரியாது. ஆனால் அற்புதமான உழைப்பை கௌதம் வழங்கியுள்ளார். அவரின் அப்பா கார்த்திக்கை மனதில் வைக்காமல் எந்த ஒரு ரொமான்ஸ் காட்சிகளும் வைக்க முடியாது. துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு காட்சி வரும். அதனை கார்த்தியை மனதில் வைத்து தான் பண்ணேன். இது என்னை அறியாமல் வந்தது” என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார். 

அதேபோல், “1947 படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் வெளியாக உள்ளது.  ஏ,ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ் என்பது 100 பேர் செய்த உதவி. என்னுடைய வாழ்க்கை என்பது 100 பேர் போட்ட வாழ்க்கைப் பிச்சை, கடவுளின் ஆசீர்வாதம் தான் என நான் நினைக்கிறேன். நான் சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளேன். நானும் கிளாஸ், தட்டு கழுவி உள்ளேன். நிறைய கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையில் முன்னேறி வந்தேன். அதை இல்லை என்று சொல்லவில்லை.  

சினிமா என்பது பெரிய விஷயம் இல்லை. கஷ்டப்பட்டு ஒருவரை முன்னோடியாக கொண்டு செயல்படும்போது எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் வரலாம் என்பதை தான் சொல்கிறேன். அந்த வகையில் படத்தின் கதை தான் எல்லாம். நல்லவனுக்கு சாப்பாடு போடலாம். ஆனால் வல்லவனுக்கு வாய்ப்பு தான் கொடுக்க முடியும். அதன்படி பொன் குமாருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

கதை சிறப்பாக இருந்தால் அவரை வாழ்த்துங்கள். சரியாக இல்லை என்றால் என்னை திட்டுங்கள். ஆனால் அதற்கு வாய்ப்பு இருக்காது என்று தான் நினைக்கிறேன். படம் மிகப்பிரமாதமாக வந்துள்ளது. எல்லாவற்றையும் விட கலை இயக்குனர் சந்தானம் இப்போது உயிருடன் இல்லை.  அவர் இல்லாதது ஒரு கவலையாக அமைந்து விட்டது” என கண் கலங்கியபடி  ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார். 1947 ஆகஸ்ட் 16  படம் ஏப்ரல் 7 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
Royal Enfield Upcoming Bike: EV பைக்.. 750 சிசி வண்டி.. 8 மாடல்களை இறக்கப்போகும் ராயல் என்ஃபீல்ட்!
Royal Enfield Upcoming Bike: EV பைக்.. 750 சிசி வண்டி.. 8 மாடல்களை இறக்கப்போகும் ராயல் என்ஃபீல்ட்!
Thalapathy Vijay: “நியாயம் ஜெயிக்கும்.. நாங்கள் உன் பக்கம்” - விவகாரத்து வழக்கில் விஜய்க்கு பிரபலங்கள் ஆதரவு!
Thalapathy Vijay: “நியாயம் ஜெயிக்கும்.. நாங்கள் உன் பக்கம்” - விவகாரத்து வழக்கில் விஜய்க்கு பிரபலங்கள் ஆதரவு!
இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளேன்..வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்
இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளேன்..வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget