மேலும் அறிய

Muthiah Muralitharan : என்னுடைய வாழ்க்கையைப்போல் இந்த படமும் போராட்டங்கள் நிறைந்தது.. 800 படம் குறித்து முத்தையா முரளிதரன்

தன்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 800 படம், எதிர்கொண்ட சவால்கள் குறித்து பகிர்ந்துகொண்டார் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

தன்னுடைய வாழ்க்கையைப்போலவே தன்னைப் பற்றிய படமும், பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

800

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 800 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் மும்பையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா ஆகியோர் வெளியிட்டனர்.

முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதை நினைவுகூறும் வகையில் இந்த படத்திற்கு 800 என்று பெயரிடப்பட்டுள்ளது. 800 படத்தை மூவி டிரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விவேக் ரங்காச்சாரி தயாரித்துள்ளதாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 800 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முத்தையா முரளிதரன் 800 படம் உருவானதில் இருந்து ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை பற்றி பேசினார். வருகின்ற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி திரையரஙகுகளில் வெளியாக இருக்கிறது 800 திரைப்படம்.

வெங்கட் பிரபுதான் காரணம்

சென்னையை சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் முத்தையா முரளிதரன். “ஈழப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் ஒரு நற்பணி மன்றம் நடத்தி வந்தேன். கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட்பிரபு இலங்கை வந்திருந்தார். என்னுடைய மனைவியும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.

என்னுடைய வீட்டில் நான் வாங்கிய விருதுகளை எல்லாம் பார்த்த வெங்கட் பிரபு, ”ஏன் உங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கக்கூடாது” என்று கேட்டார். அதில் பல்வேறு சிக்கல்கள் வரும் என்று நான் அதற்கு சம்மதிக்கவில்லை. பின் என்னுடைய மேலாளர் அந்தப் படத்தின் மூலம் வரும் லாபத்தை வைத்து நற்பணி மன்றம் சார்பாக மக்களுக்கு நிறைய உதவிகள் செய்யலாம் என்று சொன்னதால் அதற்கு நான் சம்மதித்தேன்.

படத்திற்கான திரைக்கதையை எம்.எஸ். ஸ்ரீபதி எழுத இருந்தார். என் வாழ்க்கையில் நிறைய நல்ல மனிதர்களும் கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் என்னுடைய கதையை மிகையில்லாமல் அப்படியே இந்த படம் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். இதற்காக அவர் இரண்டு ஆண்டுகள் இலங்கை வந்து தங்கியிருந்து இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதினார். இதற்கிடையில் இந்தப் படத்தை இயக்கவிருந்த வெங்கட் பிரபுவிற்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட அந்த படத்தை எம்.எஸ். ஸ்ரீபதியே இயக்க முடிவு செய்தோம். பின் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க இருந்து, பின் அவரும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். இப்படியான பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்தான் இந்தப் படத்திற்கான வேலைகள் தொடங்கின” என்று அவர் பேசினார்

என்னுடைய வாழ்க்கையைப் போலவே என்னுடைய படத்துக்கும் போராட்டங்களே..

”திருச்சிக்கு அருகில் ஒரு சின்ன ஊர்தான் என்னுடைய பூர்வீகம். அங்கிருந்துதான் நாங்கள் இலங்கையில் குடிபெயர்ந்தோம். என்னுடைய வயதுக்கு நான் பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். அதேபோல் என்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிய இந்தப் படமும் ஐந்து ஆண்டுகள் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டுவிட்டது.

இதை எல்லாம் கடந்து இன்று இந்தப் படம் உருவாகி வெளியாகிறது என்றால் அதற்கு காரணம் இந்தப் படத்தை எப்படியாவது எடுத்து முடிக்கவேண்டும் என்று உழைப்பை செலுத்திய அனைவரும்தான். அவர்களுக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று முத்தையா முரளிதரன் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
Embed widget