மேலும் அறிய

Muthiah Muralitharan : என்னுடைய வாழ்க்கையைப்போல் இந்த படமும் போராட்டங்கள் நிறைந்தது.. 800 படம் குறித்து முத்தையா முரளிதரன்

தன்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 800 படம், எதிர்கொண்ட சவால்கள் குறித்து பகிர்ந்துகொண்டார் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

தன்னுடைய வாழ்க்கையைப்போலவே தன்னைப் பற்றிய படமும், பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

800

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 800 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் மும்பையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா ஆகியோர் வெளியிட்டனர்.

முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதை நினைவுகூறும் வகையில் இந்த படத்திற்கு 800 என்று பெயரிடப்பட்டுள்ளது. 800 படத்தை மூவி டிரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விவேக் ரங்காச்சாரி தயாரித்துள்ளதாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 800 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முத்தையா முரளிதரன் 800 படம் உருவானதில் இருந்து ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை பற்றி பேசினார். வருகின்ற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி திரையரஙகுகளில் வெளியாக இருக்கிறது 800 திரைப்படம்.

வெங்கட் பிரபுதான் காரணம்

சென்னையை சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் முத்தையா முரளிதரன். “ஈழப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் ஒரு நற்பணி மன்றம் நடத்தி வந்தேன். கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட்பிரபு இலங்கை வந்திருந்தார். என்னுடைய மனைவியும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.

என்னுடைய வீட்டில் நான் வாங்கிய விருதுகளை எல்லாம் பார்த்த வெங்கட் பிரபு, ”ஏன் உங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கக்கூடாது” என்று கேட்டார். அதில் பல்வேறு சிக்கல்கள் வரும் என்று நான் அதற்கு சம்மதிக்கவில்லை. பின் என்னுடைய மேலாளர் அந்தப் படத்தின் மூலம் வரும் லாபத்தை வைத்து நற்பணி மன்றம் சார்பாக மக்களுக்கு நிறைய உதவிகள் செய்யலாம் என்று சொன்னதால் அதற்கு நான் சம்மதித்தேன்.

படத்திற்கான திரைக்கதையை எம்.எஸ். ஸ்ரீபதி எழுத இருந்தார். என் வாழ்க்கையில் நிறைய நல்ல மனிதர்களும் கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் என்னுடைய கதையை மிகையில்லாமல் அப்படியே இந்த படம் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். இதற்காக அவர் இரண்டு ஆண்டுகள் இலங்கை வந்து தங்கியிருந்து இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதினார். இதற்கிடையில் இந்தப் படத்தை இயக்கவிருந்த வெங்கட் பிரபுவிற்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட அந்த படத்தை எம்.எஸ். ஸ்ரீபதியே இயக்க முடிவு செய்தோம். பின் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க இருந்து, பின் அவரும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். இப்படியான பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்தான் இந்தப் படத்திற்கான வேலைகள் தொடங்கின” என்று அவர் பேசினார்

என்னுடைய வாழ்க்கையைப் போலவே என்னுடைய படத்துக்கும் போராட்டங்களே..

”திருச்சிக்கு அருகில் ஒரு சின்ன ஊர்தான் என்னுடைய பூர்வீகம். அங்கிருந்துதான் நாங்கள் இலங்கையில் குடிபெயர்ந்தோம். என்னுடைய வயதுக்கு நான் பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். அதேபோல் என்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிய இந்தப் படமும் ஐந்து ஆண்டுகள் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டுவிட்டது.

இதை எல்லாம் கடந்து இன்று இந்தப் படம் உருவாகி வெளியாகிறது என்றால் அதற்கு காரணம் இந்தப் படத்தை எப்படியாவது எடுத்து முடிக்கவேண்டும் என்று உழைப்பை செலுத்திய அனைவரும்தான். அவர்களுக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று முத்தையா முரளிதரன் பேசினார்.

தலைப்பு செய்திகள்

அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Embed widget