மேலும் அறிய

Muthiah Muralitharan : என்னுடைய வாழ்க்கையைப்போல் இந்த படமும் போராட்டங்கள் நிறைந்தது.. 800 படம் குறித்து முத்தையா முரளிதரன்

தன்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 800 படம், எதிர்கொண்ட சவால்கள் குறித்து பகிர்ந்துகொண்டார் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

தன்னுடைய வாழ்க்கையைப்போலவே தன்னைப் பற்றிய படமும், பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

800

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 800 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் மும்பையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா ஆகியோர் வெளியிட்டனர்.

முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதை நினைவுகூறும் வகையில் இந்த படத்திற்கு 800 என்று பெயரிடப்பட்டுள்ளது. 800 படத்தை மூவி டிரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விவேக் ரங்காச்சாரி தயாரித்துள்ளதாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 800 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முத்தையா முரளிதரன் 800 படம் உருவானதில் இருந்து ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை பற்றி பேசினார். வருகின்ற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி திரையரஙகுகளில் வெளியாக இருக்கிறது 800 திரைப்படம்.

வெங்கட் பிரபுதான் காரணம்

சென்னையை சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் முத்தையா முரளிதரன். “ஈழப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் ஒரு நற்பணி மன்றம் நடத்தி வந்தேன். கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட்பிரபு இலங்கை வந்திருந்தார். என்னுடைய மனைவியும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.

என்னுடைய வீட்டில் நான் வாங்கிய விருதுகளை எல்லாம் பார்த்த வெங்கட் பிரபு, ”ஏன் உங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கக்கூடாது” என்று கேட்டார். அதில் பல்வேறு சிக்கல்கள் வரும் என்று நான் அதற்கு சம்மதிக்கவில்லை. பின் என்னுடைய மேலாளர் அந்தப் படத்தின் மூலம் வரும் லாபத்தை வைத்து நற்பணி மன்றம் சார்பாக மக்களுக்கு நிறைய உதவிகள் செய்யலாம் என்று சொன்னதால் அதற்கு நான் சம்மதித்தேன்.

படத்திற்கான திரைக்கதையை எம்.எஸ். ஸ்ரீபதி எழுத இருந்தார். என் வாழ்க்கையில் நிறைய நல்ல மனிதர்களும் கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் என்னுடைய கதையை மிகையில்லாமல் அப்படியே இந்த படம் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். இதற்காக அவர் இரண்டு ஆண்டுகள் இலங்கை வந்து தங்கியிருந்து இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதினார். இதற்கிடையில் இந்தப் படத்தை இயக்கவிருந்த வெங்கட் பிரபுவிற்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட அந்த படத்தை எம்.எஸ். ஸ்ரீபதியே இயக்க முடிவு செய்தோம். பின் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க இருந்து, பின் அவரும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். இப்படியான பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்தான் இந்தப் படத்திற்கான வேலைகள் தொடங்கின” என்று அவர் பேசினார்

என்னுடைய வாழ்க்கையைப் போலவே என்னுடைய படத்துக்கும் போராட்டங்களே..

”திருச்சிக்கு அருகில் ஒரு சின்ன ஊர்தான் என்னுடைய பூர்வீகம். அங்கிருந்துதான் நாங்கள் இலங்கையில் குடிபெயர்ந்தோம். என்னுடைய வயதுக்கு நான் பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். அதேபோல் என்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிய இந்தப் படமும் ஐந்து ஆண்டுகள் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டுவிட்டது.

இதை எல்லாம் கடந்து இன்று இந்தப் படம் உருவாகி வெளியாகிறது என்றால் அதற்கு காரணம் இந்தப் படத்தை எப்படியாவது எடுத்து முடிக்கவேண்டும் என்று உழைப்பை செலுத்திய அனைவரும்தான். அவர்களுக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று முத்தையா முரளிதரன் பேசினார்.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget