மேலும் அறிய

Ashok Selvan: விஜய்சேதுபதி கொடுத்த அட்வைஸ்.. மாறிப்போன சினிமா பாதை - பேட்டியில் நெகிழ்ந்த அசோக் செல்வன்!

ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்த என்னை ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கலாம் என அட்வைஸ் கொடுத்தவர் விஜய் சேதுபதி - அசோக் செல்வன்

நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வருகிறார் இளம் நடிகரான அசோக் செல்வன்; சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீப காலமாக அவர் படங்களை மிகவும் நேர்த்தியாக தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். 

 

Ashok Selvan: விஜய்சேதுபதி கொடுத்த அட்வைஸ்.. மாறிப்போன சினிமா பாதை - பேட்டியில் நெகிழ்ந்த அசோக் செல்வன்!

பிட்சா 2, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய் என தொடக்க காலத்தில் கவனமீர்த்த படங்களில் நடித்த அசோக் செல்வன் 2020ஆம் ஆண்டு ஓ மை கடவுளே படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வந்த அசோக் செல்வன் நடிப்பில், இந்த ஆண்டு மட்டும் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என ஐந்து திரைப்படங்கள் வெளியாகின. 

 

 

கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அசோக் செல்வன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான வரலாற்று திரைப்படம் 'மரைக்கார்'. இப்படத்தில் அவருக்கு ஒரு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆண்டிற்கு ஒன்று இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வந்த அசோக் செல்வன் சமீபகாலமாக தனது பாலிசியை மாற்றி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை பற்றின எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதை எதையும் சட்டை செய்யாமல் தன்னுடைய வழியில் சிறப்பாக பயணித்து வருகிறார். 

 


அசோக் செல்வன் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பது குறித்து சமீபத்தில் அவருடன் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் "ஒரு படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கவனம் சிதறும் அதனால் அதை முழுமையாக முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்து நடித்து வந்தேன். ஆனால் என்னுடைய சிந்தனை தவறானது என்பதை புரிய வைத்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் ஒருமுறை என்னை அழைத்து ஒரு படம் முடியும் வரை அதில் மட்டுமே நடிக்க வேண்டும் என ஒன்றும் இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்க வேண்டும்.

எந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதை கணிக்க முடியாது. எனவே ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அடுத்த படத்தில் நடிப்பேன் என காத்து இருந்தால் அதுவே பின்னர் உங்கள் பயணத்தில் ஒரு முட்டுக்கட்டையாக அமைந்து விடும். அதனால் வாய்ப்புகள் வரும் போதே பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் சொன்னதில் இருந்து தான் நான் தொடர்ந்து படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறேன். அவர் சொன்ன மாதிரி நான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடித்து முடித்த திரைப்படம் 'வேழம்'.

அப்போதே வெளியாக வேண்டிய திரைப்படம் இந்த ஆண்டு தான் வெளியானது. இனிமேல் தொடர்ந்து பல படங்களில் நடிப்பேன் என கூறியிருந்தார் நடிகர் அசோக் செல்வன்.விஜய் சேதுபதி மற்றும் அசோக் செல்வன் இருவரும் சூது கவ்வும், ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Tamil 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த பிரசாந்த்!
Bigg Boss Tamil 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த பிரசாந்த்!
Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!
Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!
Bigg Boss: அதுக்குள்ளயா..! முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட பிரசாந்த்? நடந்தது என்ன?
Bigg Boss: அதுக்குள்ளயா..! முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட பிரசாந்த்? நடந்தது என்ன?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: தமிழ்நாட்டில் ஆபாச நதி, வன்ம நதி ஓடுகிறது.. உதயநிதியை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!
CM Joseph Vijay: தமிழ்நாட்டில் ஆபாச நதி, வன்ம நதி ஓடுகிறது.. உதயநிதியை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!
TN New Secretariat: 25 ஏக்கர்,15 மாடி, ரூ.3,247 கோடி - புதிய தலைமை செயலகம், லாக் ஆன இடம் - CM விஜய் டிக் அடித்தது எங்கே?
25 ஏக்கர்,15 மாடி, ரூ.3,247 கோடி - புதிய தலைமை செயலகம், லாக் ஆன இடம் - CM விஜய் டிக் அடித்தது எங்கே?
CM Vijay: புதிய ஆட்சியின் தலைவர் Vs பழைய ஆட்சியின் வாரிசு - பஞ்ச் மட்டுமா? தரவுகளும் வருமா? விஜய் இன்று பதிலுரை
புதிய ஆட்சியின் தலைவர் Vs பழைய ஆட்சியின் வாரிசு - பஞ்ச் மட்டுமா? தரவுகளும் வருமா? விஜய் இன்று பதிலுரை
'தொடக்கத்திலேயே சர்ச்சை’ சட்டப்பேரவையில் திமுகவினர் அமளி..!
'தொடக்கத்திலேயே சர்ச்சை’ சட்டப்பேரவையில் திமுகவினர் அமளி..!
Chennai Bengaluru: காஞ்சிபுரம் டூ அரக்கோணம் - ரூ.633 கோடி செலவில் 25.5KM சாலை - முடிவது எப்போது? புது டெண்டர்
காஞ்சிபுரம் டூ அரக்கோணம் - ரூ.633 கோடி செலவில் 25.5KM சாலை - முடிவது எப்போது? புது டெண்டர்
IUML: தவெக குதிரைப் பேரம் நடத்தியதா?.. வெளுத்து வாங்கிய முஸ்லீம் லீக்.. எதிர்க்கட்சிகளுக்கு தரமான பதிலடி!
IUML: தவெக குதிரைப் பேரம் நடத்தியதா?.. வெளுத்து வாங்கிய முஸ்லீம் லீக்.. எதிர்க்கட்சிகளுக்கு தரமான பதிலடி!
கோடி கோடியாக பணம்.. யார் அந்த 2 சார்.? IUML எம்எல்ஏ பேச்சுக்கு சிஎம் விஜய் பதில் என்ன.? RB உதயகுமார் கேள்வி
கோடி கோடியாக பணம்.. யார் அந்த 2 சார்.? IUML எம்எல்ஏ பேச்சுக்கு சிஎம் விஜய் பதில் என்ன.? RB உதயகுமார் கேள்வி
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே குஷி.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை- இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே குஷி.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை- இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
Embed widget