மேலும் அறிய

Ashok Selvan: விஜய்சேதுபதி கொடுத்த அட்வைஸ்.. மாறிப்போன சினிமா பாதை - பேட்டியில் நெகிழ்ந்த அசோக் செல்வன்!

ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்த என்னை ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கலாம் என அட்வைஸ் கொடுத்தவர் விஜய் சேதுபதி - அசோக் செல்வன்

நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வருகிறார் இளம் நடிகரான அசோக் செல்வன்; சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீப காலமாக அவர் படங்களை மிகவும் நேர்த்தியாக தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். 

 

Ashok Selvan: விஜய்சேதுபதி கொடுத்த அட்வைஸ்.. மாறிப்போன சினிமா பாதை - பேட்டியில் நெகிழ்ந்த அசோக் செல்வன்!

பிட்சா 2, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய் என தொடக்க காலத்தில் கவனமீர்த்த படங்களில் நடித்த அசோக் செல்வன் 2020ஆம் ஆண்டு ஓ மை கடவுளே படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வந்த அசோக் செல்வன் நடிப்பில், இந்த ஆண்டு மட்டும் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என ஐந்து திரைப்படங்கள் வெளியாகின. 

 

 

கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அசோக் செல்வன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான வரலாற்று திரைப்படம் 'மரைக்கார்'. இப்படத்தில் அவருக்கு ஒரு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆண்டிற்கு ஒன்று இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வந்த அசோக் செல்வன் சமீபகாலமாக தனது பாலிசியை மாற்றி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை பற்றின எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதை எதையும் சட்டை செய்யாமல் தன்னுடைய வழியில் சிறப்பாக பயணித்து வருகிறார். 

 


அசோக் செல்வன் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பது குறித்து சமீபத்தில் அவருடன் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் "ஒரு படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கவனம் சிதறும் அதனால் அதை முழுமையாக முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்து நடித்து வந்தேன். ஆனால் என்னுடைய சிந்தனை தவறானது என்பதை புரிய வைத்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் ஒருமுறை என்னை அழைத்து ஒரு படம் முடியும் வரை அதில் மட்டுமே நடிக்க வேண்டும் என ஒன்றும் இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்க வேண்டும்.

எந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதை கணிக்க முடியாது. எனவே ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அடுத்த படத்தில் நடிப்பேன் என காத்து இருந்தால் அதுவே பின்னர் உங்கள் பயணத்தில் ஒரு முட்டுக்கட்டையாக அமைந்து விடும். அதனால் வாய்ப்புகள் வரும் போதே பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் சொன்னதில் இருந்து தான் நான் தொடர்ந்து படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறேன். அவர் சொன்ன மாதிரி நான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடித்து முடித்த திரைப்படம் 'வேழம்'.

அப்போதே வெளியாக வேண்டிய திரைப்படம் இந்த ஆண்டு தான் வெளியானது. இனிமேல் தொடர்ந்து பல படங்களில் நடிப்பேன் என கூறியிருந்தார் நடிகர் அசோக் செல்வன்.விஜய் சேதுபதி மற்றும் அசோக் செல்வன் இருவரும் சூது கவ்வும், ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget