மேலும் அறிய

‛முழுசா... அம்மனாக மாறிய அன்னபூரணியை பார்...’ இனி அன்னபூரணி அரசு அம்மன்?

ஆடி மாதத்தில் எல்லாரும் அம்மனை வேண்டுவார்கள்; ஆனால், இங்கு ஒரு அம்மா, தன்னை அம்மனாக மாற்றியிருக்கிறார்.

‛நான் அம்மன் இல்லை... நான் அருளாசி வழங்குவதில்லை...’ என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த அன்னபூரணி அரசு அம்மா, நேரிலும் , வாட்ஸ்ஆப் மூலமும் தீட்சை வழங்கி வந்த அன்னபூரணி அரசு அம்மா, அவர் பேசியதை அவரே முறியடித்து, அம்மன் வடிவமாகி வணக்கத்திற்குரியவராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். 

கடந்த ஜனவரியில் தொடங்கி, இன்று வரை பேசும் பொருளாக மாறி வரும் அன்னபூரணி அரசு அம்மா, பேஸ்புக் சாமியாராக அருளாசிகளை அள்ளி வீசி வருகிறார். தினம் ஒரு தகவல் மாதிரி, மணிக்கு ஒரு அருளாசியை வழங்கி வரும் அன்னபூரணி அரசு அம்மா, இடையிடையே தன் பக்தர்களின் அருள் அனுபவங்களை, அவரே பகிர்ந்தும் வந்தார். 

என்னதான், கடவுள், ஆன்மிகம் இவற்றுக்கு புதிய அடையாளத்தை அவர் தர நினைத்தாலும், நம்மூரில் ஆன்மிகம் என்றால், அதற்கென சில அக்மார்க் அடையாளத்தை சாமியார்கள் சிலர் உருவாக்கி வைத்துள்ளனர். அந்த வகையில் , இனி இதெல்லாம் எடுபடாது என முடிவு செய்த அன்னபூரணி அரசு அம்மா. வழக்கமான சாமியார்களின் வழியில், ‛அம்மா’ ஆக இருந்ததில் இருந்து ‛அம்மன்’ ஆக மாறினார். 

கையில் சூலாயுதம் ஏந்தி, தலையில் கிரீடம் ஏந்தி, ரம்யா கிருஷ்ணனின் டூப் போல, சிவப்பு கம்பளத்தில் நடந்து வர, 100 ரூபாய்க்கு வாங்கிய பூவை, ஒவ்வொன்றாக மலர் பாதத்தில் தூவி, அதுவும் பாதியில் முடிய, வெறும் கையில் முலம் போட்டு, ஆத்தாவை அழைத்து வந்து ஆசிரமத்தில் அமர செய்துள்ளனர். 

சூலம் ஏந்தி சுட்டெரிக்கும் தாயாக மாறுவார் என்று பார்த்தால், வழக்கமான தன் ‛வைபிரேட்’ கண்ணீர் அருளாசியோடு, அதே நாற்காலியில் அமர்ந்து அருளாசியை தொடங்கியுள்ளார் அன்னபூரணி. அம்மாவின் இந்த புதிய கெட்டப், அவரது குழந்தைகளை(பக்தர்களை அப்படி சொன்னால் தான் அவருக்கு பிடிக்கும்) ரொம்பவே மகிழ்வித்திருக்கிறதாம். 

ஆடி மாதத்தில் எல்லாரும் அம்மனை வேண்டுவார்கள்; ஆனால், இங்கு ஒரு அம்மா, தன்னை அம்மனாக மாற்றியிருக்கிறார். என்னே ஒரு முன்னேற்றம். இனி அன்னபூரணி அரசு அம்மா, அன்னபூரணி அரசு அம்மனாக மாறுவார் என்றே தெரிகிறது. திருவண்ணாமலையை திருவிழாவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, இனி சூலத்தோடு அதற்காக சூலுரைப்பார் என்றே தெரிகிறது. 

திருவண்ணாமலையில் ஆசிரமம் திறந்து பல மாதங்கள் ஆகியும், இன்னும் எதிர்பார்த்த கூட்டம் கூடாதது, அன்னபூரணிக்கு வருத்தத்தை அளித்துள்ளது. தனது கருத்துக்கள் இன்னும் பலரிடம் சென்றடையவில்லை என்கிற குறையை போக்கவே, இதுமாதிரியான அடையாள அணிவகுப்புகளை அவர் நடத்துவதாகவும், விரைவில் அன்னபூரணியையும் அவரது சக்தியையும் அறிந்து, பலரும் அவரிடத்தில் வருவார்கள் என்றும், அன்னபூரணியை விமர்சிப்பவர்கள், விரைவில் அவரை புரிந்து கொள்வார்கள் என்றும் அன்னபூரணியின் தீவிர பக்தர்கள் சிலர் கூறுகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget