Sneha: எல்லாத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு தான் இந்த சீன்களில் நடிக்கிறோம் - சினேகா பகிர்ந்த சீக்ரெட்!
நடிப்பு என்பதை சிலர் சாதாரணமாக பார்தாலும், அது மிகவும் சவாலான ஒன்று என்றும், எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு நடிக்க என்ன காரணம்? என்பது பற்றி நடிகை சினேகா பகிர்ந்துள்ளார்.

'என்னவளே' படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. புன்னகை அரசி என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அளவுக்கு அதிகமான கிளாமர் காட்சியில் நடிக்காமல் ரசிகர்கள் மனதை வசீகரித்தவர்.
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், விரும்புகிறேன், ஆட்டோகிராஃப், புதுப்பேட்டை என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரசன்னா மற்றும் சினேகா தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
குழந்தைகள் பிறந்த பின்னர் சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சினேகா இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த 'கோட்' படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
சினிமாவில் மட்டுமின்றி டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். நடிப்பை தாண்டி ஸ்நேகாலயாஸ் சில்க்ஸ் என்ற ஜவுளி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரின் கடையில் ரூ.1000-தில் இருந்து லட்ச ரூபாய் வரை சேலைகள் உள்ளன. பிரத்தேயேகமாக ஒவ்வொரு புடவையும் கைத்தறியில் நெய்யப்படுவதாக இவரே கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் சினேகா அளித்த பேட்டி ஒன்றில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நடிகர் - நடிகை எல்லோரும் ஜாலியா இருப்பார்கள். எப்போதும் ஏசியில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் இன்பம், துன்பம், சோகம், கஷ்டம் என்று எந்த சூழலில் இருந்தாலும், இயக்குனர் சொல்லும் நடிப்பை வெளிப்படுத்த வெளிப்படுத்துவது மிகவும் சவால் நிறைந்த ஒன்று.
சந்தோஷாக இருக்கும் போது சோகமாக நடிக்க சொல்வார்கள். அதே போல சோகமாக இருக்கும் நேரங்களில் சந்தோஷமான காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும். உடலில் வலி ஏதாவது இருந்தால் கூட... அதை மறைந்து கொண்டு சிரிக்கும் சூழல் கூட வரும். இப்படி உணர்ச்சிகளை மறைத்து கொண்டு நடிப்பது, ரசிகர்களுக்காக தான் என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

