மேலும் அறிய

Actor Raghuvaran: “ரகு இருந்திருந்தால்” .. ரகுவரன் நினைவு நாளில் நடிகை ரோகிணி உருக்கமான பதிவு...

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வில்லன் நடிகர்களில் ஒருவர் “ரகுவரன்”.. அவரின் உயரம் போல அவருடைய அன்பும் இருப்பும் தமிழ் சினிமாவில் மிகப்பெரியது.

நடிகர் ரகுவரன் இருந்திருந்தால் சினிமாவின் இந்தக் கட்டத்தை மிகவும் நேசித்திருப்பார் என நடிகை ரோகிணி உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வில்லன் நடிகர்களில் ஒருவர் “ரகுவரன்”.. அவரின் உயரம் போல அவருடைய அன்பும் இருப்பும் தமிழ் சினிமாவில் மிகப்பெரியது. அப்படியான ரகுவரனுக்கு இன்று 15 ஆம் ஆண்டு நினைவு தினமாகும். கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்த ரகுவரன் 1982 ஆம் ஆண்டு வெளியான ஏழாவது மனிதன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  

அவருக்கு 1986 ஆம் ஆண்டு சம்சாரம் அது மின்சாரம் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த், விஜய், அஜித், அர்ஜூன் உள்ளிட்ட பலரின் படங்களில் வில்லனாகவும், முக்கிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார். இதனிடையே 2008 ஆம் ஆண்டு ரகுவரன் ரகுவரன் 2008 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி மரணமடைந்தார். அதிகப்படியான மது அருந்தியதால் அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக சொல்லப்பட்டது. 

அவர் கடைசியாக யாரடி நீ மோகினி படத்தில் தனுஷூக்கு அப்பாவாக நடித்திருந்தார். அவரின் மறைவு இன்றளவும் பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. பலரும் ரகுவரனின் வில்லத்தனத்தை மறக்க முடியவில்லை என அவரின் ஒவ்வொரு படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும்போதும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பதை காணலாம். 

இதனிடையே 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகிணியை காதல் திருமணம் செய்துக் கொண்ட ரகுவரன் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார். கணவரை பிரிந்தாலும் பல நேர்காணல்களிலும், பதிவுகளிலும் ரகுவரனை பற்றிய நினைவுகளை ரோகிணி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு ரோகிணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாகத் தொடங்கியது, ஆனால் எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் மாற்றியது. ரகு இருந்திருந்தால் சினிமாவின் இந்தக் கட்டத்தை மிகவும் நேசித்திருப்பார், மேலும் ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்” என ட்விட்டர் பக்கத்தில் ரோகிணி தெரிவித்துள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget