Remya Nambeesan | ''அது எப்படி முடியும்? முதலில் குழப்பமாக இருந்தது'' - ' நவரசா' குறித்து பேசிய ரம்யா நம்பீசன்..!
"நவரசா" ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்தார்
![Remya Nambeesan | ''அது எப்படி முடியும்? முதலில் குழப்பமாக இருந்தது'' - ' நவரசா' குறித்து பேசிய ரம்யா நம்பீசன்..! Actress Remya Nambeesan shares her powerful character look from navarasa Remya Nambeesan | ''அது எப்படி முடியும்? முதலில் குழப்பமாக இருந்தது'' - ' நவரசா' குறித்து பேசிய ரம்யா நம்பீசன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/29/52c0d23bbe06afdd3d45b6f0d6169c15_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். விரைவில் வெளியாகவிருக்கும் "நவரசா" ஆந்தாலஜி படத்தில், லக்ஷ்மி கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். மனிதனின் அடிப்படை உணர்வுகளான 9 ரசங்களை மையமாக கொண்டு, தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.
இப்படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்தும், இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது குறித்தும், நடிகை ரம்யா நம்பீசன் கூறினார். அதில் ''எனது கதாப்பாத்திரத்தில் சிறு வயது தோற்றத்திலும், முதிய வயது தோற்றத்திலும் நானே நடிப்பதாக, படைப்பாளிகள் என்னிடம் கூறியபோது, எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாக செய்ய முடியுமா எனத் தயங்கினேன். இயக்குநர் பிரியதர்ஷன் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக்கொடுத்து, படப்பிடிப்பில் மிக ஆதரவாக பார்த்துக்கொண்டார். அவரால் தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது, மறக்க முடியாத, மிகச்சிறந்த அனுபவம் என்றார்.
தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தினை, தமிழின் புகழ்மிகு படைப்பாளிகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு, ஒன்பது கதைகள் இணைந்த ஆந்தாலஜி திரைப்படமாக, தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து, இந்திய சினிமாவின் பெருமை மிகு நிகழ்வாக, இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர்
Sivakarthikeyan : தெலுங்கில் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்.. நாயகி ராஷ்மிகா..?
தமிழ் திரையின் மிகச்சிறந்த திறமைகள் ஒன்றினைந்தது மட்டுமல்லாமல், இந்த கொடிய நோய்காலத்தில் பாதிப்புக்குள்ளான, சக திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும், உன்னதமான நோக்கத்தில் இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைத்துறையில், தங்களின் தரமான படைப்புகள் வழியே உலக அளவில் சாதனை புரிந்த முன்னணி படைப்பாளிகளான அர்விந்த் சுவாமி, பெஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ப்ரியதர்ஷன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜூன் மற்றும் வசந்த் சாய் ஆகிய 9 படைப்பாளிகள் ஒன்றிணைந்து, தங்களின் மாறுப்பட்ட பார்வையில் மனித உணர்வுகளின் ஒன்பது ரசத்தை படைப்புகளாக தந்துள்ளனர். Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். "நவரசா" வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக Netflix தளத்தில் வெளியாகிறது.
Mia Khalifa: மனிதநேயமே இல்லை - விவாகரத்துக்குப் பின் தொடர் கிண்டல்.. மனமுடைந்த மியா!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)