மேலும் அறிய

Kalaingar 100: “கடைசி வரை கோபாலபுரம் வீடு .. ரொம்ப எளிமையா வாழ்ந்தாரு கருணாநிதி” - கலைஞர் 100 விழாவில் ரஜினி பேச்சு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

கலைஞர் 100 விழாவில் பேசிய ரஜினி, கலைஞர் கருணாநிதியுடனான தனது நினைவுகள் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

கலைஞர் 100 விழா

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதியில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பெரும் தொண்டை கருத்தில் கொண்டு. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, நயன்தாரா, இயக்குநர் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பாடல், நடனம் என பல கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதி உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

ரஜினிகாந்த் பேச்சு 

அதாவது, “ எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 1974 ஆம் ஆண்டில் இருந்தே தெரியும். அப்போது பொதுக்கூட்டங்களில் கலைஞரோட பையன்னு சொல்லி கூப்பிடுவாங்க. அப்ப அவரிடம் இருந்த அந்த பேச்சு இப்பவும் இருக்கு. கடினமாக உழைத்து  இப்போ முதலமைச்சர் ஆகிருக்காரு” என பாராட்டினார். 

தொடர்ந்து கருணாநிதி பற்றி பேசிய ரஜினி, “சில பேர் அவங்களோட அறிவைக் காமிக்குறதுக்காக பேசுவாங்க. மத்தவங்களுக்கு புரியுதானு யோசிக்க மாட்டாங்க. ஆனா கலைஞர் அறிஞர் சபைல அறிஞராவும் கவிஞர் சபைல கவிஞராவும் பாமரனுக்கு பாமரனாவும் பேசுவாரு. 

எப்பவுமே ஒருத்தருக்கு எழுத்தாற்றல் இருந்தா பேச்சாற்றல் இருக்காது.பேச்சாற்றல் இருந்தால் எழுத்தாற்றல் இருக்காது ஆனா, கலைஞருக்கு இது ரெண்டுமே இருந்துச்சு. கலைஞர் குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது, எங்கு முடிப்பது என எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான். மந்திரகுமாரி படத்தில் கிடைத்த வருமானத்தின் மூலம் தான் 1955 ஆம் ஆண்டு கோபாலபுரம் வீட்டை கலைஞர் வாங்கினார். அந்த வீட்டுல தான் கடைசி வரை இருந்தாரு. ரொம்ப எளிமையா வாழ்ந்தவர் கலைஞர்.  புட்டபர்த்தி சாய்பாபாவே கலைஞர் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தார். அவரின் காலத்தில் வாழ்ந்தது மிகப்பெரிய விஷயம்.

கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆரை உருவாக்கி இருப்பார். எழுத்து சக்தி என்பது கலைஞரிடத்தில் இருந்தது. அவர் எழுதிய கடிதங்களை கொஞ்சம் படித்துள்ளேன். சில கடிதம் படிக்கும்போது கண்ணீர் வரும். சில கடிதங்கள் படிக்கும்போது கண்ணுல நெருப்பு பறக்கும்” என புகழ்ந்து பேசினார். ரஜினியின் இந்த பேச்சுக்கு அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர். 


மேலும் படிக்க: Kalaingar 100: ”நீ வேணும்னா மாத்திக்காட்டு; ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் செய்த சம்பவம்” - சூர்யா சொன்ன சுவாரஸ்யம்!

தலைப்பு செய்திகள்

இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்
Samantha Ruth Prabhu: சண்டை காட்சியில் நிஜமாகவே அடிவாங்கிய சமந்தா.. ஷுட்டிங்கில் நடந்த ஷாக் சம்பவம்!
Samantha Ruth Prabhu: சண்டை காட்சியில் நிஜமாகவே அடிவாங்கிய சமந்தா.. ஷுட்டிங்கில் நடந்த ஷாக் சம்பவம்!
15 ஆண்டுகளை கடந்த அவன் இவன்..ஆர்யா விஷால் வெளியிட்ட வீடியோ
15 ஆண்டுகளை கடந்த அவன் இவன்..ஆர்யா விஷால் வெளியிட்ட வீடியோ

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
TN Assembly: 5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
TATA Motors: காருக்கு மட்டுமில்ல.. ட்ரக், பேருந்துகளின் விலையை கூட உயர்த்திய டாடா? எந்த மாடலுக்கு எவ்வளவு?
காருக்கு மட்டுமில்ல.. ட்ரக், பேருந்துகளின் விலையை கூட உயர்த்திய டாடா? எந்த மாடலுக்கு எவ்வளவு?
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
TN Assembly: பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
Embed widget